NOTE: 2011-04-27T14:36:34+05:30

உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்

      ஒருத்தர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்

சலசலென எவ்விடத்தும் பாயச்சிவிட வேண்டும்

       தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்

இலவசநூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்

       எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித்

தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந்தோமில்லை

        தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்.

 

பாவேந்தர் பாரதிதாசன்

 

 

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *