நாடு சமூகம் என்ற அமைப்புக்களை நமது முன்னோர்கள் படை முதலாக அரண் வரையில் ஆறு பிரிவாக அமைத்தார்கள். ஒரு நாட்டின் அனைத்துச் செயல்களுக்கும் வளர்ச்சிக்கும் நல்வாழ்வுக்கும் நிதி தான் ஆதாரமாகவும் ஊற்றாகவும் அமைகிறது. ஒரு நாட்டின் நிதியின் வளர்ச்சி தான் எல்லா இருளையும் போக்கும் ஒளிவிளக்காகும். பொருள்தான் ஆதாரம் என்பதைக் கருதி பொருளாதாரம் என்ற சொல்லே அமைந்தது. பொருள் என்னும் பொய்யா விளக்கம் என்று திருக்குறள் பாராட்டுகிறது.

Add a Comment