கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு முதல் தமிழ்நாட்டின் கடல் வணிகர்கள் காரைக்கால் அம்மையாரைத் தங்கள் குல தெய்வமாகக் கருதிவழிபட்டனர்.
காம்போசம் தாய்லாந்து இந்தோனேசியா போன்ற நாடுகளில் உள்ள கோயில்களில் ஊழிக்கூத்தன் திருமேனியும், எதிரில் காரைக்கால் அம்மையாரின் திருமேனியும் கல்லிலும் செம்பிலும் செய்யப்பட்டு வழிபாட்டுக்கும் சிற்பக் கலைநயத்துக்கும் பயன்பட்டன.
முன்னர் கடல் வணிகர்கள் மணிமேகலை தெய்வ வழிபாட்டைத் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குக் கொண்டு சென்றனர் என்றும் மணிமேகலர் தெய்வம் மின்கோலா என்ற பெயரில் தாய்லர்ந்து மலேயா போன்ற நாடுகளில் வழக்கத்தில் இருந்ததையும் அறிஞர் க.த.திருநாவுக்கரசு நூற்ச்சான்றுகளைக் கொண்டு விளக்கியுள்ளார்.

Add a Comment