விடுதலையில் இல்லை இந்துவில் தான்!
—————————————————————————–
அலை புரள கரை புரள காவிரியாறு ஓடும் கருநாடகத்தில் கார்மழை பொழிய வேண்டுமென்று கடவளுக்கு வழிபாடு கணக்கில்லாத செலவை செலவளித்திருக்கிறார்களே என்று கறுப்புச்சட்டைக்காரன் அல்ல பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றும் வசந்த் நடராஜன் அறிவியல் சிந்தனையில்லாமல் இந்த நாடு அலங்கோலமாகிறதே என்று விடுதலையில் இல்லை மவுண்ட் ரோடு மஹா விஷ்ணு என்று அண்ணாவால் பரிகசிக்கப்பட்ட இந்து நாளிதழிலில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது.
கல்விக்கண்ணை திறந்தால் தங்கள் கட்சித் தோற்று விடும் என்று அறியாமையிலேயே மக்களை அரசியல்வாதிகள் ஏமாற்றி வருகிறார்கள் என்று எழுதியிருக்கிறார்.
பாதிரியாராக வாழ்வைத் தொடங்கிய
சார்லஸ் டார்வின் தன் பத்து வயது பெண் குழந்தை இறந்த பொழுது தான் கடவுள் இல்லை என்றே நம்பத்தொடங்கினாராம்….

Add a Comment