வரலாற்று மாந்தர்களையும் அந்நாளைய வாழ்வியல் முறைகளையும் பொருத்தமுறப் புனைந்து வரலாற்றுக் கதைகளைத் திருத்தமுற எழுதுவதில் கதை வேந்தர் கல்கி அவர்களை நாடு எப்போதும் நன்றியோடு போற்றும்.
பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் ஆகிய மூன்று நூல்களும் சோழ பல்லவர் ஆட்சியின் மாட்சியையும் கலைச்- செழிப்பையும் நம் கண்முன்னால் காட்டும் வரலாற்று வண்ணம் பூண்ட ஈடற்ற காவியங்களாகும்.
மாமல்ல புரத்துக்கு மகிழ்வுலாச் செல்லும் எவருக்கும் சிற்பக்கலையரசரின் செல்வியாகிய சிவகாமியின் சதங்கை ஓசை செவிகளில் கேட்ட வண்ணமிருக்கும்….

Add a Comment