அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-18
மனித வாழ்க்கையின் தரத்தை அளவிடற்கரிய விதத்தில் மேம்படுத்தியுள்ள தூய அறிவியல், தொழில் நுட்பத்தினுடைய கற்பனைவளமிக்க ஆக்கங்களைக் குறைத்து மதிப்பிட முயல்வதாக நான் கூறியுள்ள கருத்துக்களைத் தவறாகப் புரிந்து கொள்ளலாகாது. எந்தவொரு அறிவார்ந்த விவாதத்தை எடுத்துக் கொண்டாலும் அவை அவ்வளவு தாம்! அப்பொழுது கூட, தனித்ததொரு மனிதன் என்றோ இறையாற்றலென்றோ நான் குறிப்பிடுகின்ற வில்லியம் சேக்ஸ்பியரை நோக்கி நழுவிச் செல்வதைத் தடுக்கவியலாது. அவருடைய நாடகங்களிலும் கவிதைகளிலும் ஆழ்ந்து மூழ்கிப்போய்விட்டேன். ஏதேதோ கருத்துக்களுக்குச் செறிவூட்டுவதற்காக அவருடைய படைப்புகள் பொதிந்துள்ள எனது அறிவுப் பெட்டகத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ள மேற்கோள்கள் வாயிலாகவே உங்களுக்குப் புலப்பட்டிருக்கக்கூடும்.

Add a Comment