POST: 2016-06-04T13:19:15+05:30

புகழ் பூத்த தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்கள், அண்மையில் முத்து விழா கண்டுள்ளார். 80 வயது நிறைந்து, 81ஆம் ஆண்டில் நுழைந்துள்ளார். கனிந்த வயதில், நிறைந்த வாழ்வில், செறிந்த அனுபவங்கள் கொண்ட அவருடன் அண்ணாகண்ணன், 2016 மே 2ஆம் நாள் நிகழ்த்திய தொலைபேசி உரையாடல்.
————————————–
ஔவை 81 – முத்து விழா
————————————–
பகுதி-12

இப்படி நான் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஒரு மூன்றாண்டு காலம் பணியாற்றினேன். அது மகிழ்ச்சியான ஒரு பணிதான். ஆனால், பல நேரங்களில், பேராசிரியர்களை எல்லாம் கொண்டு, பல்கலைக் கழகம் ஒரு பெரிய வரையறையை செம்மையாக அமைத்துக் கொள்ளவில்லை என்பதினால், அது எப்படி போனாலும், பலநேரம் பலபேர் கழுத்தை நெருக்குவதைக் கண்டு, மனம் துணுக்குற்றிருந்தது. என்றாலும், மகிழ்ச்சியாகவே இருந்து, நான் நினைக்கிறேன், விடை பெற்று செல்லும்போது ஒரு பாடல் கூட சொன்னேன்.
“இருந்தமிழே உன்னால் இருக்கின்றேன் என்றும்,
அருந்தமிழால் ஆக்கமெலாம் பெற்றேன் – பொருந்துபுகழ்த்
தஞ்சைநகர் பல்கலைவிட் டேகின்றேன் தண்ணளியீர்
நெஞ்சமெலாம் உங்கள் நினைப்பு

என்று ஒரு பாடல் எழுதியதாகக்கூட நினைப்பு.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *