எம்.ஜி.ஆர். – ஜானகி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
11 ஜனவரி 2017
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-24
————-
நானும் ஜெகத்ரட்சகனும் ஒரு வாடகை வண்டியை எடுத்துக் கொண்டு, அவரைப் பார்க்கச் சென்றோம். அந்தச் சமயத்தில் என்னைப் பார்த்து, நீங்கள் கேட்ட பதவியை உருவாக்கலாம் என்று சொன்னார் எம்ஜிஆர். இதை வாழ்நாள் எல்லாம் நன்றியோடு நினைக்க வேண்டும். உடனே தலைமைச் செயலாளரிடம், அவரே தொலைபேசியில் பேசினார். அவ்வை நடராஜனை அனுப்பு கிறேன். அவர் சொல்வதை எல்லாம் செய்யுங்கள் என்று அப்போது சொன்னார். இப்படி நெகிழ்ச்சியான தருணங்கள் பல உண்டு.
புரட்சித்தலைவர் அவர்களின் நலிவைப் பயன்படுத்திக்கொண்டு, ஆயுர்வேத மருத்துவர்கள், சித்த மருத்துவர்கள், கைரேகை, ஜோதிடம் பார்ப்பவர்கள், குறி சொல்பவர்கள், வேதம் படித்தவர்கள் என்று நாள் தவறாமல், எப்படியாவது வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டு, எம்ஜிஆரைப் பார்க்க வருவார்கள். தன்னுடைய நலிவை மனதில் வைத்துக்கொண்டு, புரட்சித்தலைவரும் கூட, அவர்கள் சொல்வதற்குத் தலையசைத்திருக்கிறார்.
எம்.ஜி.ஆர். நல்லநிலையில் இருந்தபோதே, என்னிடம் ஒரு ஒலை நறுக்கைக் காண்பித்தார். அது ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதில் என்னுடைய எதிர்காலக் குறிப்பெல்லாம் இருக்கிறதாம். தொல்பொருள் ஆய்வுத்துறையில் கொடுத்து, இதில் என்ன இருக்கிறது என்று பாருங்கள் என்று சொன்னார்.

Add a Comment