மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-68
————-
திடீரென்று ஒருநாள், அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி வந்தது. அவர் மறைவதற்குச் சிலநாள் முன்பாக, மருத்துவ நிலையத்தில் இருக்கிறார் என்றபோது, நான் பார்த்துவிட்டு வந்தேன்.
அப்போதுகூட, எழுந்து நின்று, வணக்கம் செய்து, தொல்லைப்பட்டது உருக்கமாக இருந்தது.
அண்ணா நகரில், என் வீட்டுக்குப் பின் தெருவில், அவரது வீடு இருந்தது. நான் மனம் பதறிப்போய், அவரது உடலைப் பார்க்கப் போனேன். பெரிய கூட்டம் இருந்தது.

Add a Comment