மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-99
————-
====================================
கவிஞர் புத்தனேரி சுப்பிரமணியம்
====================================
நான் பலமுறை அவரை ஔவை தி.க.சண்முகம் அவர்களோடு கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.
புத்தனேரியாரின் மறைவு, ஓய்வு பெற்ற சில ஆண்டுகளிலேயே திடுமென நேர்ந்தது.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மறுமலர்ச்சி கவிதைகள் என்ற தலைப்பில் உரையாற்றிவிட்டு அஜந்தா உணவகத்திற்கு தாம் தங்கியிருந்த அறைக்கு வந்து வீட்டாருக்கு தொலைபேசி எடுத்து பேச முயன்ற நிலையிலேயே சரிந்து விழுந்து மறைந்தார்.
எந்த நோயும் நோக்காடும் இல்லாமல் நல்ல நிலையில் இருந்த அவருடைய மறைவு நம்மால் மறக்க முடியாத மறைவாயிற்று.
புத்தனேரியார், மரபுக் கவிதைகளை நூற்றுக் கணக்கில் எழுதியவர்.

Add a Comment