மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-133
—————-
==========================
கவியரசர் கண்ணதாசன்
==========================
வலம்புரிஜான் அவர்களின் இரங்கலுரை
—————————————————————–
உயிரோடிருந்த போதே, இறந்து விட்டதாகத் தொலைபேசியில் சொல்லி, எவர் முதலிலே வருகிறார்கள் என்று பார்த்து மகிழ்ந்த வித்தைக் காரனே நீ எங்கே சென்று விட்டாய்? ஆசை கூட உனக்கு வந்த மாதிரி பிரிதொருவருக்கு வரவில்லை!
நான் இறந்து எனது நெடும்பயணம் தொடருகிற போது – கண்ணா! நான் மீண்டும் எழுந்து ஒரு முறை பார்க்க வேண்டும் – என் பாடையைத் தொடர்ந்து எத்தனை மனித வெள்ளம் வருகின்றதென்று – என்று எழுதிக்காட்டி ஆசையை வெளியிட்டவனே நீ மனித வெள்ளத்தில் மாலையாக மிதந்து போகிற நாளும் வந்து விட்டது! நீ எங்கிருந்து இந்தக் கூட்டத்தைப் பார்க்கிறாய் என்கிற சூட்சுமந்தான் எனக்கு இன்னமும் புரியவில்லை

Add a Comment