மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-135
—————-
==========================
கவியரசர் கண்ணதாசன்
==========================
வலம்புரிஜான் அவர்களின் இரங்கலுரை
—————————————————————–
எங்கள் தவக் கவிஞனே! எங்கள் தர்மன் ஆள்கிறபோது உன்னை அழைத்த ஒன்றிலே காலனும் கொஞ்சம் கருணை உள்ளவன் என்று தெரிந்து கொள்கிறேன்.
என்ன எழுத! இனி நான் எதை எழுத!
பாரம் சுமக்கிறவர்கள் – காய்கறி விற்கிறவர்கள் என் தேசத்தில் மண்ணின் மைந்தர்கள் என்பதால் மண்ணிலே வீழ்ந்து கிடக்கிறவர்கள்
– எல்லாருமே விழி நீரை வழித்துக் கொண்டு இப்படி வெறி பிடித்து நிற்கிறார்களே !
பேடைக் குயிலே உன் கீதம் அவர்களை அசைத்து விட்டதல்லவா! உனது கீர்த்திக் கிரீடத்தில் எல்லா நவரத்தினங்களும் எழில் விளங்கச் சேர்ந்து விட்டன என்று அர்த்தம்.
மழை மேகம் கறுத்தாலும் – மாமரம் பூத்தாலும் – எப்போதும் பாடுகிற எங்கள் மஞ்சள் குயிலே போய் வா! உன் சங்கீதம் எங்கள் மலைகளில்-எங்கள் நதிகளில் – எங்கள் ஊனில் – உயிரில் – உணர்வில்-உணர்வின் அசைவில் – காலங்கள் தோறும் எதிரொலிக்கும்! இது சத்தியம்!

Add a Comment