மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-194
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’
===========================================
இன்னொருவர்:விண்ணகத்திலிருந்து மண்ணகம் வந்து விந்தை புரியும் பெண் நிலவா? பேசும் பொற்சித்திரமா? தங்கச்சிலையா? தந்தசிலையா? சர்ச்பார்க் கான்வெண்ட்டில் கட்டுரைப் போட்டியில் பரிசு.
கட்டுரைத்தலைப்பு: What mummy means to me?
•பெங்களூரில் ‘கங்காகௌரி’ படப்பிடிப்பு! மொழி வெறியர்கள் சூழ்ந்து கொண்டு கொலை வெறியோடு கூச்சல்! ஆயுதங்களோடு அச்சுறுத்தல்.
‘நான் தமிழச்சி! கன்னட நாட்டில் பிறந்தாலும், என் பூர்வீகம் தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீரங்கம்! என்னை வாழ வைக்கும் தமிழகத்தை மறக்கமாட்டேன்! தமிழ் ஒழிக என்று சொல்ல மாட்டேன்! அதுதான் என் தாய் மொழி!’
கொலை வெறியர்கள் உயிரையே பறிக்கும் முயற்சியினைப் பத்திரிக்கையாளர்களும், ஸ்டூடியோ ஊழியர்களும் மற்றவரும் முறியடித்தனர். வீரப் பெண்ணாகக் காட்சி!
ஸ்ரீரங்கம் கோவில்….
காவிரிக்கரை…
திருச்சி மலைக்கோட்டை காண்பித்தல்!
ரங்கசாமி அய்யங்கார் குடும்பம். நெல்லூர் புறப்படுதல்! பெங்களூர் வந்து ஒரு வீட்டில் வசிப்பது! மனைவி கமலம்மாளிடம் ரங்கசாமி அய்யங்கார் உரையாடல். சீனிவாசன், வேதா (சத்யா), அம்புஜம் (வித்யாவதி), பத்மா ஆகியோர் கொண்ட குடும்பம். விமானத் தொழிற்சாலை Accountant ஆக வேலை பார்ப்பதைச் சித்தரிப்பது.

Add a Comment