கலைஞர் 85ம் பிறந்தநாள் உரை – 03.06.2009
========================================
பத்மஸ்ரீ ஔவை நடராசன்
(பகுதி – 7)
—————-
நூல் என்றால் பலபேர், திரிக்கிற நூல் என்று நினைக்கிறார்கள். தமிழில் நூல் என்று சொன்னால் ஊர் மக்களால் படித்தபிறகு நுவலப்படுவதுதான் நூல் என்று பொருள். நுவல் என்பதுதான் பின்னர் நூல் என்று ஆயிற்று. துகள் என்பதுதான் தூள் என்று ஆயிற்று. பகல் என்பதுதான் பால் என்று மாறும். எனவே, நுவலப்படுகிற கருத்துக்கள் நாட்டு மக்களின் உள்ளத்தைத் தடவி, அவர்களின் மனத்தில் மாற்றம் தருமானால், அதுதான் நூல். அப்படிப்பட்ட நூல் பகுத்தறிவு உலகத்திற்கு வாள். இளைஞர்கள் தங்களுக்கு வரும் எதிர்ப்புகளைத் தாங்குவதற்கும், பிறரைத் தாக்குவதற்கும் வேள் என்று வீர வரிகளை எழுதி நூல் உலகத்திற்குத் தலைவராகத் திகழ்கிற டாக்டர் கலைஞர் அவர்களை நாங்கள் வாழ்த்துகிறோம்.
எங்கள் வாழ்த்துக்கள், தமிழுலகம் தன் உணர்வுகளால் சொல்கின்ற வாழ்த்துக்கள் என்று சொல்லி, பதிப்பாளர்கள் எல்லாம் எண்பத்தைந்து நூல்களை இன்று வெளியிட்டிருக்கிறார்கள். பிறந்தநாள் எண்ணிக்கை என்பதால் எண்பத்தைந்து என்று நினைக்கிறேன்.
அல்லையன்ஸ் சீனிவாசன் அவர்களும், காந்தி கண்ணதாசன் அவர்களும் 185 நூல்களை இன்று வெளியிட்டிருப்பார்களானால், இன்னும்கூடத் தலைவர் உள்ளம் மகிழ்ச்சியடையும் என்று சொல்லி
வாழ்க கலைஞர்,
வெல்க புத்தகத்தின் புத்தகம் என்னும் போர்கருவி
என்று சொல்லி விடை பெறுகிறேன்
வணக்கம்.

Add a Comment