POST: 2021-06-10T09:46:59+05:30

திலகமே உனக்கு – நீயே ஆறுதல் !

திருமகள் சுபா எளிய குடும்பத்தில் பிறந்த பெண் .

அறிவென்னும் அளப்பருங்கடலில் நீந்தி வெல்பவர் .

பாரதி கலைக் கல்லூரியில் வணிகவியல் படிக்க எனக்கு நீங்கள் இடம் கொடுக்கச் சொல்லுங்கள் என்று கேட்டார் ,இடம் கிடைத்தது .எல்லையில்லாத மகிழ்ச்சி.

.” எங்கள் அப்பா சொன்னால் எதுவும் நடக்கும் ” என்று ஆயிரம் பேரிடமாவது சொல்லியிருப்பார் .

அவ்வளவும் அறிவாற்றல் –

ஆனால் நான் கூறியபடி இ ஆ ப பணித் தேர்வெழுதவில்லை

.ஆனால் மாணவப் பருவத்திலிருந்தே ஊடக உலகத்தில் ஒளி வீசலானார் .

கலையுலகத்தின் அனைத்துத் துறைகளிலும் பங்கு கொண்டார் .

திரு வெங்கட்டை. ( 4 .4 1967 – 29.5.2021)
விரும்பி மணந்தார்

.வெங்கட் சுபா என்றே தன் பெயரை அவர் அமைத்துக்கொண்டார் .

இனிய இல்லறம் குடும்பம் தழைத்தது .

ஒரே மகன் சித்தார்த்தன் கலையுலகத்தில் இன்று ஒளிர்கிறான் .

அப்பா ! நான் பாட்டியாகிவிட்டேன் என்று பேசினார் .

தாராவின் மறைவைத் தாங்க முடியாமல் இருவரும் வீடு தேடிவந்து அழுது புரண்டனர் .

இப்போது வெங்கட் இல்லை .

கூற்றுவனுக்குத்தான் கண்ணில்லையே !

மகள் சுபாவின் அழுகையை என் காதுகள் பொறுக்கவில்லை .

திண்மைத் திலகமே !
உன்னை நீயே தேற்றிக்கொள் !!

துயரத்துடன்
ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *