திலகமே உனக்கு – நீயே ஆறுதல் !
திருமகள் சுபா எளிய குடும்பத்தில் பிறந்த பெண் .
அறிவென்னும் அளப்பருங்கடலில் நீந்தி வெல்பவர் .
பாரதி கலைக் கல்லூரியில் வணிகவியல் படிக்க எனக்கு நீங்கள் இடம் கொடுக்கச் சொல்லுங்கள் என்று கேட்டார் ,இடம் கிடைத்தது .எல்லையில்லாத மகிழ்ச்சி.
.” எங்கள் அப்பா சொன்னால் எதுவும் நடக்கும் ” என்று ஆயிரம் பேரிடமாவது சொல்லியிருப்பார் .
அவ்வளவும் அறிவாற்றல் –
ஆனால் நான் கூறியபடி இ ஆ ப பணித் தேர்வெழுதவில்லை
.ஆனால் மாணவப் பருவத்திலிருந்தே ஊடக உலகத்தில் ஒளி வீசலானார் .
கலையுலகத்தின் அனைத்துத் துறைகளிலும் பங்கு கொண்டார் .
திரு வெங்கட்டை. ( 4 .4 1967 – 29.5.2021)
விரும்பி மணந்தார்
.வெங்கட் சுபா என்றே தன் பெயரை அவர் அமைத்துக்கொண்டார் .
இனிய இல்லறம் குடும்பம் தழைத்தது .
ஒரே மகன் சித்தார்த்தன் கலையுலகத்தில் இன்று ஒளிர்கிறான் .
அப்பா ! நான் பாட்டியாகிவிட்டேன் என்று பேசினார் .
தாராவின் மறைவைத் தாங்க முடியாமல் இருவரும் வீடு தேடிவந்து அழுது புரண்டனர் .
இப்போது வெங்கட் இல்லை .
கூற்றுவனுக்குத்தான் கண்ணில்லையே !
மகள் சுபாவின் அழுகையை என் காதுகள் பொறுக்கவில்லை .
திண்மைத் திலகமே !
உன்னை நீயே தேற்றிக்கொள் !!
துயரத்துடன்
ஒளவை நடராசன்

Add a Comment