செல்வத் திருமகன் இரவிக்கு
நலம் விளைக !
வானத்தை வில்லாக வளைக்கும் அயராத முயற்சியில் வெற்றியே கனியும் .
அருளிடம் என்னைப் பற்றி உருக்கமாகக் கேட்டீர்களாம் .
பரிவு பொங்கியது .
தாங்கள் நடத்தும் மகாகவியின் மாட்சிக்கு நினைவு நூற்றாண்டு
என்றும் வரலாற்றில் நின்று நிலைக்கும் .
தொண்டர் வாயில் துதியறிவாய்
அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்,
இறப்பின்றித் துலங்குவாயே.
தங்கள் கனவுகள் மெய்ப்பட்டு வருகின்றன .
அன்போடு
ஒளவை நடராசன்
11 9 2021

Add a Comment