01580be4-d62e-483b-933a-adcde634efa4

வற்றாத வரலாற்றுக் களஞ்சியம் வாழி!

94 அகவை நிறைந்த பத்மஸ்ரீ விருது பெற்ற அறிஞர்,
தில்லிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், எழுத்தாளர், திறனாய்வாளர், சாகித்திய அகாதமி இலக்கிய விருதினை குருதிப்புனல் புதினத்திற்காக 1977 ஆம் ஆண்டிலேயே பெற்றதோடு
கே கே பிர்லா அறக்கட்டளை வாயிலாக இராமானுஜர் நாடகத்திற்கான
சரசுவதி சம்மான் விருதினை 1999 ஆம் ஆண்டில் பெற்ற பெருந்தகையாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்களை 8.9.24 ஞாயிற்றுக்கிழமையன்று நேரில் சந்தித்து நீண்ட நேரம் பேசி மகிழ்ந்தேன்.

அந்நாள் அவர் மகள் திருமதி பத்மாவின் பிறந்தநாள் என்று தெரிவித்து தன் கையொப்பத்துடன்
அவரின் காலம் தோறும் கிருஷ்ணன் என்ற தமிழ்ப் புதினத்தை அவரே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த
Forever Yours,Krishna புதினத்தினை வழங்கி மகிழ்ந்த பொழுது பெருமிதமடைந்தேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *