பல்மீன்
இமைக்குமாக விசும்பின்
எனத் தொடங்கும் கழாத்தலையார்
பாடிய புறநானூற்றுப் பாடல் எண்
இருநூற்(று) எழுபது
விண்மீன் போன்ற தமிழறிஞர்களின் செம்மாந்த கட்டுரைகளை ஏந்தி வரும்
உலகத்தமிழிதழ் அணி எண்
இருநூற்(று) எழுபது
பல்மீன்
இமைக்குமாக விசும்பின்
எனத் தொடங்கும் கழாத்தலையார்
பாடிய புறநானூற்றுப் பாடல் எண்
இருநூற்(று) எழுபது
விண்மீன் போன்ற தமிழறிஞர்களின் செம்மாந்த கட்டுரைகளை ஏந்தி வரும்
உலகத்தமிழிதழ் அணி எண்
இருநூற்(று) எழுபது
குயில் வாய் அன்ன கூர்முகை அதிரல் …
எனத் தொடங்கும் ஔவையாரின் புறப்பாடல் எண்
இருநூற்(று) அறுபத்(து) ஒன்பது;
பயில் வாய்
மணம் பரப்பும் உலகத்தமிழிதழ்
இருநூற்(று)
அறுபத்(து) ஒன்பது.
தன்னுயிர் தான் அறப்பெற்றானை எனத் தொடங்கும் அருங்குறள்
இருநூற்(று) அறுபத்(து) எட்டு;
மன்னுயிர்க் கெல்லாம்
தமிழ்மணம் பரப்பும் உலகத்தமிழிதழ்
இருநூற்(று)
அறுபத்(து) எட்டு
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும்
எனத் தொடங்கும் அணிக்குறள்
இருநூற்(று) அறுபத்(து) ஏழு;
சுடச்சுடப் பொன்னான கருத்துகளைச் சிந்தாமல் சிதறாமல் கொண்டாடும் வகையில் கொண்டுவந்து தந்திடும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) அறுபத்(து) ஏழு.
சிறு கண் பன்றி பெருஞ்சின ஒருத்தலொடு எனத் தொடங்கும் கபிலரின் ஐங்குறுநூற்றுப் பாடல் எண் இரு நூற்(று) அறுபத்(து) ஆறு
அருந்திறல் கருத்துகளைக் கொண்ட பெருந்தமிழ்க் கட்டுரைகளை அறிவன்தோறும் வெளியிடும் உலகத்தமிழிதழ்
இருநூற்று அறுபத்(து) ஆறு.
புலிகொல் பெண்பால்
பூவரிக் குருளை
எனத் தொடங்கும் கபிலரின் ஐங்குறுநூற்றுப்
பாடல் எண்
இருநூற்(று) அறுபத்(து) ஐந்து
ஒலிகொள் தமிழ்ச் சொற்களைப் புவிமிசை போற்றும் வண்ணம் திரட்டி வெளியிடும் உலகத்தமிழிதழ்
இரு நூற்(று)
அறுபத்(து) ஐந்து
பாம்(பு)அளைச் செறிய முழங்கி…
என முழங்கும் ஆவூர்க் காவிதிகள் சாதேவனாரின் நற்றிணைப் பாடல் எண் இருநூற்(று) அறுபத்(து) நான்கு;
ஓம்புகின்ற தமிழாய்ந்த ஒள்ளிய கருத்துகளைத்
தாங்கிவரும் உலகத்தமிழிதழின் இனிய வரிசை இருநூற்(று) அறுபத்(து) நான்கு
பிறை வனப்பு இழந்த நுதலும்… எனத் தொடங்கும் இளவெயினனாரின் நற்றிணைப்பாடல் இருநூற்(று) அறுபத்(து) மூன்று;
நிறை வனப்பு நிறைந்த அருந்தமிழ்க் கட்டுரைகளை அள்ளித்தரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) அறுபத்(து) மூன்று
தண்புனக் கருவிளைக் கண்போல் மாமலர் …
எனத் தொடங்கும் பெருந்தலைச் சாத்தனாரின் நற்றிணைப்பாடல் எண் இருநூற்(று) அறுபத்(து) இரண்டு;
கண்போன்ற தமிழாய்ந்த அறிவார்ந்த அறிஞர்தம்
அருங்கட்டுரைகளை ஐந்தாண்டுகளாய் அழகுற வெளியிட்டுவரும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) அறுபத்(து) இரண்டு.
“உற்றநோய் நோன்றல்”
என்று தவத்தை வரையறுத்துத் தொடங்கும் அருங்குறள் இருநூற்(று) அறுபத்(து) ஒன்று;
கற்றாய்ந்த அருந்தமிழைச் செழுமையான கட்டுரைகள் வாயிலாக வெளியிடும் உலகத் தமிழிதழ்
இருநூற்(று) அறுபத்(து) ஒன்று.