புலிகொல் பெண்பால்
பூவரிக் குருளை
எனத் தொடங்கும் கபிலரின் ஐங்குறுநூற்றுப்
பாடல் எண்
இருநூற்(று) அறுபத்(து) ஐந்து
ஒலிகொள் தமிழ்ச் சொற்களைப் புவிமிசை போற்றும் வண்ணம் திரட்டி வெளியிடும் உலகத்தமிழிதழ்
இரு நூற்(று)
அறுபத்(து) ஐந்து
புலிகொல் பெண்பால்
பூவரிக் குருளை
எனத் தொடங்கும் கபிலரின் ஐங்குறுநூற்றுப்
பாடல் எண்
இருநூற்(று) அறுபத்(து) ஐந்து
ஒலிகொள் தமிழ்ச் சொற்களைப் புவிமிசை போற்றும் வண்ணம் திரட்டி வெளியிடும் உலகத்தமிழிதழ்
இரு நூற்(று)
அறுபத்(து) ஐந்து
பாம்(பு)அளைச் செறிய முழங்கி…
என முழங்கும் ஆவூர்க் காவிதிகள் சாதேவனாரின் நற்றிணைப் பாடல் எண் இருநூற்(று) அறுபத்(து) நான்கு;
ஓம்புகின்ற தமிழாய்ந்த ஒள்ளிய கருத்துகளைத்
தாங்கிவரும் உலகத்தமிழிதழின் இனிய வரிசை இருநூற்(று) அறுபத்(து) நான்கு
பிறை வனப்பு இழந்த நுதலும்… எனத் தொடங்கும் இளவெயினனாரின் நற்றிணைப்பாடல் இருநூற்(று) அறுபத்(து) மூன்று;
நிறை வனப்பு நிறைந்த அருந்தமிழ்க் கட்டுரைகளை அள்ளித்தரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) அறுபத்(து) மூன்று
தண்புனக் கருவிளைக் கண்போல் மாமலர் …
எனத் தொடங்கும் பெருந்தலைச் சாத்தனாரின் நற்றிணைப்பாடல் எண் இருநூற்(று) அறுபத்(து) இரண்டு;
கண்போன்ற தமிழாய்ந்த அறிவார்ந்த அறிஞர்தம்
அருங்கட்டுரைகளை ஐந்தாண்டுகளாய் அழகுற வெளியிட்டுவரும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) அறுபத்(து) இரண்டு.
“உற்றநோய் நோன்றல்”
என்று தவத்தை வரையறுத்துத் தொடங்கும் அருங்குறள் இருநூற்(று) அறுபத்(து) ஒன்று;
கற்றாய்ந்த அருந்தமிழைச் செழுமையான கட்டுரைகள் வாயிலாக வெளியிடும் உலகத் தமிழிதழ்
இருநூற்(று) அறுபத்(து) ஒன்று.
கழுநீர் மேய்ந்த கருந்தாள் எருமை
எனத் தொடங்கும் பரணரின் நற்றிணைப் பாடல் இருநூற்(று) அறுபது
விழுநீர் விசைக்(கு)ஏற்ப வினைநலச் சொற்களின் அணிவகுப்பாம் உலகத்தமிழிதழ் இருநூற்(று) அறுபது
அவிசொரிந்(து)
ஆயிரம் வேட்டலின் …
எனத் தொடங்கிப் புலால் மறுக்கும் அருங்குறள் இருநூற்(று) ஐம்பத்(து) ஒன்பது;
புவிவெல்லும் கருத்துகளை எழில்-தமிழில் எடுத்துக்காட்டும்
உலகத் தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து) ஒன்பது.
பல்பூங் கானல் பகற்குறி மரீஇச் செல்வல் கொண்க!
எனத் தொடங்கும் நற்றிணைப்
பாடல் இருநூற்(று) ஐம்பத்(து) எட்டு
சொல்லின் அணி மலர்களைக் கட்டுரைப் பூமாலையாகச் செழித்திருக்கும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து) எட்டு.
உண்ணாமை வேண்டும் புலாஅல்
எனத்தொடங்கும் அருங்குறள் இருநூற்(று) ஐம்பத்(து) ஏழு;
சொல்லாண்மை வலியுறுத்தும் பெருங் கட்டுரைகளைக் கட்டுக்குலையாமல் வெளியிடும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து) ஏழு
நீயே பாடல் சான்ற பழிதபு சீறடி
எனப்பாலை பாடிய பெருங்கடுங்கோவின் நற்றிணைப் பாடல்,
இருநூற்(று) ஐம்பத்து ஆறு
தாயே தமிழே எனத் தகத்தகாயமாக ஒளிரும் பொருண்மைகளைப் பொருத்தி வரும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்து ஆறு