
இனிவரும் வயதுகளும் இவருக்கு நல கோப்பைகளை நாளும் நிரப்பிக் கொடுத்துக் கொண்டாடட்டும்.
வாழ்க பெருமகன் ராஜாஜி என்று நாமும் வாழ்த்துச் சரம் தொடுப்போம்
இனிய 81 ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்து ஐயா
இனிவரும் வயதுகளும் இவருக்கு நல கோப்பைகளை நாளும் நிரப்பிக் கொடுத்துக் கொண்டாடட்டும்.
வாழ்க பெருமகன் ராஜாஜி என்று நாமும் வாழ்த்துச் சரம் தொடுப்போம்
இனிய 81 ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்து ஐயா
இந்த நினைவு நாளை (3.4.2025) வியாழக்கிழமை என் சித்தப்பா டாக்டர் ஒளவை மெய்கண்டார் மதுரை மாநகரில் 1000 பேருக்கு உணவளிக்கும் வகையில் அமைத்திருக்கிறார்.
கம்ப இராமாயணத்தில் குகனுக்கு இலக்குவனின் தாயை அறிமுகப்படுத்தும்
“உளன் எனப் பிரியா தான் ஒரு தம்பி”
என்ற தொடர் தான் என்னை உருக வைக்கிறது என்று அப்பா அடிக்கடி சொல்லக் கேட்டு இருக்கிறேன்.
ஈடில்லா பேராசிரியர்களான திருமதி.நிர்மலா மோகன்(28.2.2018),
நினைவில் வாழும் பேராசிரியர் கு சிவமணி (25.2.2020)
மாநிலக்கல்லூரி முதல்வர் பேராசிரியர் இராமன் (15.2.2021)
பெரும்பேராசிரியர் முனைவர்
சோ ந கந்தசாமி எழுதிய உரைவேந்தரின் உரை மாட்சி
நூல் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப் பெற்றுள்ள ஒளவை துரைசாமி அறக்கட்டளை வாயிலாக (18.3.25)அன்று வழங்கப்பட்டது.
அடடா ஈதென்ன ஆண் ஒளவை என வியப்பா !
ஏடும் எழுத்துமாக வாழ்ந்து பீடும் பெருமையும் அணி செய ஒளவையின் வாழ்வு மிளிர்ந்ததை நினைவு கூர்கிறோம் .
வாழ்வில் அவர் தொடங்கிய முதற்பணி
உரை வரைதல் தான் ,
அவருடைய நிறைவுப்பணியும் திருவருட்பா உரை தான் .
நற்றிணை ,
ஐங்குறுநூறு ,
பதிற்றுப்பத்து,
புறநானூறு ஆகிய சங்க நூல்களும்
சிவஞானபோதம்,
ஞானாமிர்தம், திருமுறை ,
திருப்பதிக உரைகள் ,சன்மார்க்க உலகுக்கு கொடையாக வழங்கிய திருவருட்பா உரையும் எண்ணினால் அறுபதாயிரம் பக்கங்களைத் தாண்டும்.
அவர் வாழ்வின் பயன் இலக்கிய விளக்கமாகவே அமைந்தது.
சங்க இலக்கியங்களுக்கு உரை கண்டதற்கு ஓர் அரியணையும்.
சைவ சித்தாந்த நூல்களுக்கு உரை விளக்கம் வழங்கியதற்கு இரண்டாம் அரியணையும்
சமுதாய வரலாற்றுக் கல்வெட்டுப் பொருண்மைகளுக்கு விளக்கம் வரைந்ததற்கு மூன்றாம் அரியணையும்,
சன்மார்க்க மாமலையாகத் திருவருட்பாவுக்குப் பேருரை எழுதியதற்கு நான்காம் அரியணையும்
என நான்கு அரியணையில் ஏற்றி, உரைவேந்தரைப் ” பேருரை விளக்கப் பெரும்புலவர் “
என்று தமிழ் உலகம் போற்றுகிறது.
ஒளவை துரைசாமியின் அளப்பெரும் புகழ், என்றும் நம்மைக் களிப்பில் ஆழ்த்தும்!
என் சித்தி திருமதி சீதை மெய்கண்டான் உரைவேந்தரை குறித்து கவிஞர் மீரா எழுதிய பாடலை பண்ணிசைத்துப் பாடுவதையும் பதிவேற்றியுள்ளேன்
—– ஔவை அருள்
சித்தாந்த கலாநிதி எனச்சிறப்புற்றவர்.மதுரைத் தியாகராசர் கல்லூரியில் அவரிடம் தமிழ் முதுகலை பயின்றவர்கள் என்ற பெருமிதம் எம் அணியினர்க்கு (1965-67) எப்போதும் உண்டு. ம.பெ.சீனிவாசன்.
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி. தேனினும் இனிய தமிழால் வளர்த்து
நானிலம் மகிழ நல்கிய
மூத்த மகன்
முத்து மகன்
மூப்பியல் மருத்துவர்
எங்கள் இனிய அண்ணன்
கண்ணன்
காப்பென வந்து
காதல் கொண்டு
கைப்பிடித்த துணைநலம்
மருத்துவர் சாந்தி கண்ணன்
ஆகியோர்
மணி விழா
31.01.2025 வியாழக்கிழமையன்று காலை 9.00 முதல் 12.00 மணி வரை திருக்கடவூர் அருள்மிகு அபிராமி அம்மை உடனமர் அமுதகடேசர் ஆலயத்தில்
மாதொருபாகருக்கு
வாழையடி வாழையெனத் திகழும்
வேள்வி நெறி வித்தகர்
திரு டி எஸ் வி சுந்தரமூர்த்தி குருக்கள் தலைமையில்
நன்னிகழ்வு இனிதே நடைபெற்றது.
தமிழ்ப் புத்தாண்டும்,
தைப்பொங்கல் திருநாளும்,
தனிப்பெரும் ஐயன் திருவள்ளுவர் பெருநாளும்
ஒன்றாகச் சேர்ந்த உயரிய நன்னாள்
உலகை மகிழ்விக்குமாக!
வாழ்த்துகள்
ஒளவை குடும்பம்
மேல்சித்தாமூர்,
ஜினகஞ்சி சமண மடத்தின் மடாதிபதி, சங்கீதபூஷணம்.
Dr. ஸ்வஸ்திஸ்ரீ இலட்சுமிசேன பட்டாரகப் பட்டாச்சார்ய வர்ய ஸ்வாமிகள் 5.9.24 வியாழக்கிழமையன்று அண்ணா நகர் தாரகை இல்லத்திற்கு வருகை புரிந்து பெற்றோர்களைக் குறித்து நீண்ட நேரம் பேசி வாழ்த்தி விடைபெற்றார்.
94 அகவை நிறைந்த பத்மஸ்ரீ விருது பெற்ற அறிஞர்,
தில்லிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், எழுத்தாளர், திறனாய்வாளர், சாகித்திய அகாதமி இலக்கிய விருதினை குருதிப்புனல் புதினத்திற்காக 1977 ஆம் ஆண்டிலேயே பெற்றதோடு
கே கே பிர்லா அறக்கட்டளை வாயிலாக இராமானுஜர் நாடகத்திற்கான
சரசுவதி சம்மான் விருதினை 1999 ஆம் ஆண்டில் பெற்ற பெருந்தகையாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்களை 8.9.24 ஞாயிற்றுக்கிழமையன்று நேரில் சந்தித்து நீண்ட நேரம் பேசி மகிழ்ந்தேன்.
அந்நாள் அவர் மகள் திருமதி பத்மாவின் பிறந்தநாள் என்று தெரிவித்து தன் கையொப்பத்துடன்
அவரின் காலம் தோறும் கிருஷ்ணன் என்ற தமிழ்ப் புதினத்தை அவரே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த
Forever Yours,Krishna புதினத்தினை வழங்கி மகிழ்ந்த பொழுது பெருமிதமடைந்தேன்.
இனிய நண்பர் வழக்கறிஞர் சதீஷ் திருமதி இரஞ்சனி இணையரின் ஒரே மகன் அறிவுத்திலகம் சஸ்வத்குமார்
பண்புத்திலகம் அனாகா திருமண உறுதி நிகழ்வில் (8.9.24) ஞாயிற்றுக்கிழமை காலை திருவான்மியூரில் அமைந்துள்ள துவாரகா வள மண்டபத்தில் கலந்து கொண்டு வாழ்த்தி மகிழ்ந்தேன்.
அன்றைய நிகழ்ச்சியில் கவிஞர் சதீஷின் தாயார் திருமதி வசந்தா சீனிவாசன் என்னைக் கண்டதும் பரிவு காட்டி அன்பாக வாழ்த்திய தருணம் நெகிழ்வாக அமைந்தது.
பட்டிமன்ற பேச்சாளர் திருமதிஅனுகிரகா ஆதி பகவன், கவிஞர் தரன் இணையரின் மழலைச் செல்வம் ஆதினி பொற்பிறையின் முதலாண்டு பிறந்தநாள் விழாவில்(17.8.24) சனிக்கிழமையன்று மாலையில் அப்பாவின் செயலாளர்
பொன்னேரி பிரதாப் மற்றும் ஆட்சி மொழிக் காவலர்
கீ இராமலிங்கனாரின் பெயரன் கஜேந்திர பாபுவுடன் மழலைச் செல்வத்தை நேரில் கண்டு மகிழ்ந்து வாழ்த்தினேன்.
எந்தையார் ஒளவை நடராசன் தன் வாழ்நாள் எல்லாம் போற்றிய ஆசிரியர் திலகத்தின் 92ஆம் பிறந்த நாள் (2.12.2024) அன்று ஆசிரியரின் அடையாறு இல்லத்திற்கு நேரில் சென்று சங்கவிலக்கிய எழிலேடு வழங்கி சால்வை சூடி மகிழ்ந்தேன்.
பிறந்த நாள் தொட்டே பகுத்தறிவுப் பிடிப்போடு
தந்தை பெரியார்
ஆரத்தழுவிய அருமந்த மகனாக வளர்ந்து நாளும் உயர்ந்து
தன்மான இயக்கத்தையும் ,
திராவிடர் கழகத்தையும்
கண் போலக்காத்து வருபவர்
தலைவர் வீரமணி .
அல்லும் பகலும் அயராமல்
இனமான எழுச்சி உரைகளையும்
நிகரில்லாக் கல்விப் பணிகளையும் ஆற்றி ,
திராவிடர் சமுதாயத்தை
அங்குலம் அங்குலமாக உயர்த்தி வருபவர்
ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்கள் .
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்
என்ற திருக்குறள் வாழ்வு
ஆசிரியர் திலகத்தின்
பெருமித வாழ்வு !
பல்லாண்டு வாழ்க !!
வாழ்க தமிழ் –
வெல்க பெரியாரியம் .