f96cf037-4fdc-428a-b791-92ce9f124bf2

ஈசன் எந்தை இணையடி நீழலே!

ஒளவைத் தமிழில், பெருந்தகைப் பெண்டிர்,
எம் அத்தையாய்.,
உரை எழுதிய எம் பாட்டனாரின் பிடித்த பெயர் ஆனாய்!

கீழ்வீதியின் மருமகளாக, தமிழ்த்தாமரை ஆனாய்.
மாமாவின் நெஞ்சத்துஉரன் ஆனாய்,

மக்களின் மடியாய் ஆனாய்.

எறும்புக்கும் சுறுசுறுப்பினைக் கற்றுத் தந்தாய்!

எத்தனையோ தாலாட்டுகளைப் பாடினாய்.

நன்மொழிக்கு நாயகியாய், எளிமையின் பொருட்சுவையாய்,
பொதுநலத்தின் பீடிகையாய், குறைநிரப்பும் நலம் செறிந்தாய்.

அன்பின் அடைக்கலமாய், பண்பின் உறைவிடமாய்,
அனைவருக்கும் துணையாய்,
இளையோருக்குத் தூணாய்,
உரைப்புமிகு கொள்கையாய், ஒழுக்கநெறி எடுத்துக்காட்டாய்,
சவியறத் தெளிந்தாய், குன்றென நிமிர்ந்து வாழ்ந்தாய்.

அலர்வாய் நீங்க, நீ அருள்வாய்! இதயமெலாம் இறையெனவே மகிழ்ந்தாய்!
இப்பெருங் குடும்பத்தில் வெற்றிடத்தை விட்டுச்சென்றாய்.
உம் தந்தை விடைபெற்ற மாதத்தில், காப்பியமானாய்.

எங்களை மறந்தாய்! எம்முள்ளத்தில் நிறைந்தாய்!

அத்தையா? தாயா என ஐயுறும்வண்ணம்அன்புமழை பொழிந்தாய்!

அன்பெனும் குடில் புகுந்தாய், எம்தாய்!!

ஔவை கண்ணன் அருள் பரதன்

b0664229-130d-44fc-bbde-cee4c6e1cafa

மகளிர் தின வாழ்த்துகள்!

பெண்ணின் பெருமை பேசிமுடியாது !
பெருமையால் உலகை மகிழ்வாக்கிய பெண்மணிகளே !
உலகை உருவாக்கிய பொன்மணிகளே !
எத்தனைக் கோலங்கள் !
மகளாய், மனைவியாய், தாயாய், மாமியாய், பாட்டியாய் மனங்கவரும் தெய்வமாய்
அத்தனை நிலைகளிலும்
எங்கள் நெஞ்சைக் கரைத்த
தாரகை நீங்கள்
அழுதபோது ஆறுதல் சொல்வீர்கள்.
தொழுதபடியே எத்தனைப் பணிகளை
துறைதோறும் அழகு செய்தீர்கள்
மாதர்களே நீங்கள் மாணிக்கங்கள்
கும்பிட்டுப் புகழ்வதைத் தவிர
என்ன செய்ய முடியும்.
நாங்கள் கூழாங்கற்கள்
நீங்களோ
வைரக் கற்கள், வான நிலாக்கள், வற்றாத அருவிகள்
மகளிர் பெருமையை எழுத
என் விரல்கள் தேயும்.
வானத்தை ஏடாக்கி
வையத்தின் மரங்களை எழுதுகோலாக்கி
ஆர்ப்பரிக்கும் கடலை மையாக்கி
பெண்களின் பெருமையை எழுதமுடியாமல்
விழிகள் வியந்தபடியே வழியும் நீர்த்துளிகள்
வாழ்க தாய்க்குலம் ! வளர்க தையல் உலகம்

12303b4d-2f79-4302-aa64-0f2092a881d4

அன்னை சேது அறக்கட்டளை நடத்தும் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் இணையர் அன்னை சேதுமதியின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் அருள்மங்கலம், பொற்கிழி வழங்கும் விழா

நாள் : 09.11.2024 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு

இடம்: நான் ஓர் ஐ.ஏ.எஸ். அகாடமி,
(அஞ்சல் நிலையம் பின்புறம்) 3362, ஏ.இ. பிளாக், 8ஆம் தெரு, 10ஆம் முதன்மை சாலை, அண்ணாநகர்,
சென்னை – 600 040.

தொண்டறச் செம்மல்களுக்குப் பட்டயம்-பொற்கிழி வழங்குநர் முனைவர் ஔவை அருள் அவர்கள்,
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித்துறை.

03fad593-a403-4280-9d21-69ea1cc5cef7

நினைத்தது நடந்தது

தமிழ்க் கணினிவுலகில் பலரை சந்தித்த பொழுதும் ஒருவரை மட்டும் நெருங்கி சந்தித்துப் பேச முடியாத ஒர் ஏக்கச்சூழல் 13 ஆண்டுகளாக நிலவி வந்ததை அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளன்று 2.10.24 தீர்வு கிடைத்தது

ஆம், தமிழ்க் கணினிவுலகின் இணையற்ற வேந்தர்

எழுத்துரு வடிவங்களின் உள்ளங்கவர் உத்தமர்

முரசு அஞ்சலின் தந்தை

இனிய அண்ணல் முரசு நெடுமாறன் அவர்களை சென்னையில் உள்ள ஐ மீன் உணவகத்தில் நேரில் சந்தித்து பேசும் பெருமிதமான வாய்ப்பு கிடைக்கப்பெற்றதில்
எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்தேன்.

அவர் உருவாக்கிய முரசு அஞ்சலில் பல்லாண்டுகளாக் கணினித் தட்டச்சு முறையினை பழகிய யான் இன்று வாயுரையால் சொல்லச் சொல்ல தட்டச்சினை விரைவாகச்செய்யும் ஆற்றலில் வளர்ந்துள்ளேன் என்று அவரிடம் சொல்லும் பொழுது எத்தனை பூரிப்பு …

விளம்பர வானில் வனப்பான எழுத்துருவுகளைப் பற்றி நீண்டு பேசிய பொழுது பல அரிய தகவல்களை என்னிடம் பகிர்ந்தார்.

தான் பழகிய பல சீன நண்பர்களைக்குறித்து பேசும்பொழுது அவர் சொன்ன ஓர் அருமையான தகவல்

சீனர்களுக்கு மொழிப்பற்று ஒன்று இருப்பதாக தான்
எந்நிலையிலும் பார்க்கவில்லை என்று சொன்னபோது வியந்து நின்றேன்

அப்பாவின் அரிய கையெழுத்து வடிவங்களை குறித்துப் பேசிய பொழுது ஆர்வமாகக் கேட்டார் பிறகு அப்பாவின்
சிந்தனைப்புதையல் என்ற நூலினை பரிசளித்தேன்.

www. Sorkuvai.tn.gov.in வலைதளத்தை பாராட்டி மகிழ்ந்தார்… அதனின் பயனை வருங்காலம் பெரிதும் பயன்படுத்தி பெருமிதம் அடையும் என்று ஊக்கப்படுத்தினார்

Capture

உலகத்தமிழ் இதழ்-252

பல்லான்ற கேள்வி பயனுணர்வார் என்று தொடங்கும் நாலடியார் பாடல் இருநூற்(று) ஐம்பத்(து) இரண்டு;

சொல்லான்ற கன்னல்-சுவை நிகர் கட்டுரைகளைக் கொண்டு வரும்
உலகத்தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து) இரண்டு

1eac6eb7-1a78-4d50-91b3-82070592b409 (1)

காந்தி ஜெயந்தி முன்னிட்டு மக்கள் நலத்திட்ட பணிகள் நிகழ்ச்சி

தமிழ்நாடு மீனவர் சங்கம் மற்றும் தமிழ்நாடு ப்ளெக்ஸ் டிசைனர் அசோசியேஷன் காந்தி ஜெயந்தி முன்னிட்டு மக்கள் நலத்திட்ட பணிகள் நிகழ்ச்சியில் 2.10.24 புதன்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் பட்டினப்பாக்க கடற்கரையில் கலந்துகொண்டு மீனவக் குடும்பங்களை சார்ந்த மகளிருக்கு தையல் கருவிகளை வழங்கி காந்தியடிகளின் சிறப்புகளை குறித்து உரையாற்றினேன் .

திரு அன்பழகன் நடத்திய நிகழ்வில் லியோ சங்கத்தில் பழகிய நண்பர்களான திரு விஜி குமார் மற்றும் திரு ராம் இருவரையும் ஆண்டுகள் பல கடந்து சந்தித்தது பெரு மகிழ்ச்சியாகும்.

WhatsApp Image 2024-09-29 at 20.07.48_9adf155a

26 – ஆம் ஆண்டு கம்பன் கழக விழா

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் – அவர்
தலைவர் ; அன்னவர்க்கே சரண் நாங்களே

அன்புடையீர் !
வணக்கம்.

நம் கழகத்தின் 26 ஆம் ஆண்டு விழா 29.09.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் இராமநாதபுரம், வெளிப்பட்டணம், ஆயிரவைசிய மகாஜன சபை திருமண மாளிகையில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.

அனைவரும் தவறாது கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

இவண்…

கம்பன் கழகம்,
இராமநாதபுரம்.

06.00 மணி : தலைமையுரை
06.30 மணி : விருது வழங்குதல்
07.00 மணி : விருதாளர்கள் ஏற்புரை

07.15 மணி : சிறப்பு விருந்தினர்

திரு. ஒளவை அருள் அவர்கள்

 இயக்குநர் 
தமிழ் வளர்ச்சித்துறை
WhatsApp Image 2024-09-27 at 11.12.12_62917ccf

மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தலைவர் முத்தமிழ்முரசு இரா.திருமாவளவனார் பேருரை !

மணக்கும் மலேயாவில் மாத்தமிழை நிகரற்ற பெருமிதத்துடன் வழி நடத்தும் தனித்தமிழ் தென்றல் திருமாவளவன் மாநிலக் கல்லூரியில் உரையாற்றிய நிகழ்ச்சியில் 25.9.24 புதன் கிழமையன்று கலந்து கொண்டு வாழ்த்தினேன்

தமிழ்நாட்டின் முதல் கல்லூரியான சென்னை மாநிலக்கல்லூரியில் திராவிட மொழிநூல் ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் விழா !

சென்னை மாநிலக் கல்லூரியில் 25.9.2024 அறிவன் (புதன்) கிழமை காலை 10.30 மணிக்குத் ‘தமிழும் பாவாணரும்’ என்னும் தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.

தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.தாமரைக்கண்ணன் வரவேற்புரை ஆற்றினார்.

மாநிலக் கல்லூரி முதல்வரும் கல்லூரிக் கல்விஇயக்ககத் இணை இயக்குநருமான முனைவர் இரா. இராமன் அவர்கள் தலைமை தாங்கினார்._

மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தலைவரும் மலேசிய அரசின் கலைச்சொல்லாக்கக் குழுத் துணைத்தலைவருமான தமிழறிஞர் இரா.திருமாவளவன் அவர்கள் , பாவாணர் குறித்த செறிவான பேருரையை வழங்கினார்.

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை ந.அருள், முன்னாள் கல்லூரிக் கல்வி இயக்கக இணைஇயக்குநர் அ.மதிவாணன், பாவேந்தர் விருதாளர் வாலசாவல்லவன் முதலிய பலரும் விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

_கல்லூரி முதல்வர் முனைவர் இரா.இராமன் அவர்கள் பேசும்போது ,

மாநிலக் கல்லூரி வளாகத்தில் பாவாணருக்குச் சிலை விரைவில் அமைக்கப்பட உள்ள இனிய செய்தியை அறிவித்தார்.

பாவாணர் சிலையோடு அவர்பெயரில் 200 பேர் அமரும் வகையில் குளிரூட்டப்பட்ட அரங்கமும் பாவாணர் கோட்டமும் தமிழ் வளர்ச்சித் துறையால் இதே வளாகத்தில் உருவாக்கப்படவுள்ள செய்தியைப் பெரும் கையொலி வரவேற்போடு தெரிவித்து மகிழ்வித்தார்._

செய்தி : முல்லைவேனிலன்