NOTE: 2011-04-25T13:26:32+05:30

சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பலஇசைப் பாடப்

பொன் அரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்ன மருங்கில் வளர்ந்து அழகுஎ றிப்பப்

பேழை வயிறும், பொரும்பாரக் கோடும் 05

 

வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 10

 

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த தூய மெய்ஞ்ஞான

அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே

முப்பழம் நுகரும் மூஷிக வாகன 15

 

இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்

தாயாய் எனக்குத் தான் எழுந்து அருளி

மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே

திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப்

பொருந்தவே வந்துஎன் உளம்தனில் புகுந்து 20

 

குருவடிவு ஆகிக் குவலயம் தன்னில்

திருவடி வைத்துத் திறமிது பொருள் என

வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளிக்

கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில் 25

 

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணையின் இனிதெனக்கு அருளிக்

கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து

இருவினை தன்னை அறுத்துஇருள் கடிந்து 30

 

தலமொரு நான்கும் தந்துஎனக்கு அருளி

மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

ஆறாதாரத்து அங்குச நிலையும் 35

 

பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே

இடைபிங் கலையின் எழுத்து அறிவித்துக்

கடையிற் கழுமுனை கபாலமும் காட்டி

மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 40

 

குண்டலி அதனில் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 45

 

குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடற்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்

சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்

எண்முகம் ஆக இனிதெனக்கு அருளி 50

 

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்

கருத்தினில் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி இனிதுஎனக் கருளி

என்னை அறிவித்து எனக்கருள் செய்து 55

 

முன்னை வினையின் முதலைக் களைந்தே

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து

இருள்வெளி இரண்டிங்கு ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில் 60

 

எல்லை இல்லா ஆனந்தம் அளித்து

அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம்காட்டி

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க் 65

 

கணுமுற்றி நின்ற கரும்பு உள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

கூடும்மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சு அக்கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்துத் 70

 

தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட

வித்தக விநாயக விரைகழல் சரணே

 

 

VINAAYAKAR AKAVAL

 

1

The Cool Calf –Tusker’s ruddy lotus – feet

Sing severally their anklet- tunes

His auric gee—string and floral veil

Slide on either side with waxing loveliness

His round belly and sturdy tusk

With sugar- cane chewing mammoth – face

Glow bright with a red-red sheen

Of hands five and a goad of Sacred grass.

2

With His mien of blue haze haunting my bosom,

With hanging mouth and arms elephantine

With eyes three, ichorous ooze strong, twin looks

And golden- locks flowing, broad chest lustrous

With triple stranded – thread, He is like the Kalpaka tree,

A Statatant marvel transcending word and phrase

In awareness of gnosis True; and His relish are

The Triple fruits; and Mouse is His vechicle.

3

Right now does He take me in full

Bestowing Grace as Mother on His own;

Having snapped the delusion of ceaseless births,

Entering me in clear propriety,

Guised as Guru upon this mundi

Planting this feet printing holy Strength

And meaning to offer good unabated.

4

Weeding out evil deeds with the sickle of Tusk

Feeding my ears on hortations, loathing never,

Revealing veritable Gnosis in Sateless clearness

On Sweet compassion empowering me to check

The Senses fine with a trick, informing

The intent of resolving the sensorial — limbs,

Quelling the twideededness, dispelling the dark,

 

 

5

Undoing the vertigo of Triple – hamartia,

Shutting the nine- holed body’s quintet of doors

By a mere mantra fixing Six- fold force fields,

Deferring word and exegesis, teaching the runes

Of Ida and Pingala nerves to ascend on

To the entelechic vortex of Cupola, pulsing

On the forked tongue of Serpent surging

From the jutting pillar of the Trigonic–Mandela,

6

Explicating the soaring mantra, broken loose

From ‘Ajaba’ dance thud of Kuntali – power,

Tutoring the Yoga of fanning the afflatus

On the originarium with mute meandering breath

Conferring the immortal athanasy

And the dynamics of Adityas, iterating

The nenuphar-borne One and the phases

Sixteen in the inter-lunar interims

7

Between circle and circle, corresponding with the limbs

One to one, blessing me with six – faced gross

And four-faced mystic subtlety, through means

Of numbers sweet granting Darshan of the occult dromes eight,

To view the eight-fold ‘soma’ within

Opening the threshold of fontanel in concept

Stationing me there, securing Release sweet,

Competencing my ‘Self’ to realize more,

 

8

Annulling all deeds of yore, striking rhythm

Of ‘manas’ wordless, mindless in the catchment,

Clarifying that Cogito, immersing me there

Wherein do dark and light Confluence in a nubile rush,

Breeding bliss, pouring limitless honey in my ears,

Ridding me of all woe, laying the path divine

To learn the euphony of Sadacivam in every sound

To eye the eu-morph of Civalingam in very thought

 

 

 

9

Becoming the atom of an atom, beyonding the beyond,

Functioning in the ripe node of a sugar cane,

Confirming in the fabulous Ash holy and mien,

Enfolding me in the real synod of servitor-flock

Disclosing the dear import of His five arms,

To my heart’s content, He, the Lord of Lords,

The Bhairava has lifted me to the abode, Philosophic! His fragrant feet are my sole refuge.

 

 

 

10

In Him is that broad scape of Mind

that removes all tethers;

In Him goes hid every world

that for a while is existent;

In Him manifest, all arts

‘Aagamaas’, Vedas and ‘chandas’;

Him, that Lord Ganapathy

We worship with love immense.

 

 

OM TAT SAT

 

 

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *