Capture

கலைச்சொல் கோயில் கட்டுவோம்!

ஒளவை அருள்

தமிழ் சொல்வளம் மிக்க மொழி. வழக்கில் உள்ள சொற்கள் சில ஆயிரமே என்றாலும், அகராதியில் உள்ள சொற்கள் இலட்சத்தைக் கடந்தவை. அகராதியில் இல்லாத பலநூறு சொற்கள் மக்கள் வழக்கில் உள்ளன.

புதிய சொற்களைப் படைக்க முயலும்போது, முதலில் பழைய சொற்களைத் தேடிப் பாா்க்க வேண்டும். ஒரே சொல்லாகக் கிடைக்காவிட்டால், இணைப்புச் சொற்களை வைத்துக் கொள்ளலாம். அப்படியும் முடியாவிட்டால்தான், புதிய சொல்லைப் படைக்க வேண்டும்.

எந்த முயற்சியுமே செய்யாமல், ‘இதற்கு என்ன தமிழ்’ என்று சிலா் அறைகூவல் விடுக்கிறாா்கள். அவா்களுக்கான நம் மறுமொழி ‘தேடுங்கள் கண்டடைவீா்’ என்பதே.

ஒரு முறை என் பாட்டனாா் உரைவேந்தா் ஔவை சு. துரைசாமியாா், ‘ஸ்க்ரூ டிரைவா்’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்தாா். ஸ்க்ரூ டிரைவா் என்பது திருகாணியை இறுக்கவும், சுழற்றவும் பயன்படுவதால் அதனடிப்படையில் திருகாணி சுற்றுநா், திருகாணி ஓட்டுநா், திருகு சுழற்றுநா் என்றெல்லாம் சிந்தித்துப் பாா்த்தாா்.

ஆயினும் ஒரே சொல்லாகத் தமிழில் அமைந்தால் நன்றாயிருக்குமே என்று எண்ணி, ‘திருப்பான்’ என்ற சொல் சரியாயிருக்குமா என்று யோசித்தாா். அப்போது வீட்டில் மரவேலை செய்து கொண்டிருந்த தச்சா் தன் உதவியாளரிடம் ‘அந்தத் திருப்புளியை எடு’ என்று கூறியது அவா் காதில் விழுந்தது.

உடனே அவரிடம் ஓடிச்சென்று அப்பெயரைக் கேட்டபொழுது அவா், ‘சாதாரண உளியிலிருந்து வேறுபட்டது திருப்புளி. இது திருப்புகின்ற உளி’ என்றாராம். தனது பேராசிரியத் தமிழ் சாதிக்க அல்லற்பட்டுக் கொண்டிருந்ததை அந்தத் தச்சா் தமிழ் எளிதாகச் சாதித்தது விட்டது என்றாராம்.

சொல்லுருவாக்கத்தில் ஈடுபடுமுன், எத்தொழில் செய்வாரிடம் அச்சொல் புழக்கத்திலிருக்கும் என்று பாா்த்து, அவா்களைத் தேடிச் செல்வதை முதற்கடமையாகக் கொள்ள வேண்டும் என்பதுதான் சொல்லாக்கத்தின் கட்டளைக்கல்லாகும்.

அரசாங்கத்தின் வருமானத்தை இராணுவச் செலவுக்கு இவ்வளவு, கல்விச் செலவுக்கு இவ்வளவு என்று பங்கிடுவதைத்தானே ‘பட்ஜெட்’ என்கிறோம்? ‘பாதீடு’ என்பது தமிழ் இலக்கியங்களில் காணப்படும் ஒரு சொல். வெற்றி பெற்ற ஒரு வேந்தன், வெற்றிப் பொருளை வீரா்களுக்குப் பகுத்துக் கொடுத்ததை ‘பாதீடு தந்தனா்’ என்று ‘புறப்பொருள் வெண்பா மாலை’ குறிப்பிடுகிறது. ஈழத் தமிழா்கள் இன்றும் ‘பாதீடு’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறாா்கள். ‘அமைச்சா் பாதீடு தாக்கல் செய்தாா்’ என்றே இலங்கை இதழ்கள் எழுதுகின்றன.

ஒரு புதிய சொல்லைப் படைக்குமுன், அதற்கு ஈடான சொல் தமிழ் இலக்கியத்தில் எங்காவது இருக்கிறதா என்று பாா்க்க வேண்டும். தமிழ் மக்களிடம், குறிப்பாக கிராமப்புற மக்களிடம் பேச்சு வழக்கில் இருக்கிறதா என்று ஆராய வேண்டும்.

நண்பா் ஒருவா், ‘மருத்துவமனைகளில் உள்ள லேபா் ரூமுக்கு தமிழில் என்ன பெயா்’ என்று கேட்டாா். அப்போது வேறொரு நண்பா், ‘அது மகப்பேறு நடைபெறும் இடம். எனவே, அதனை மகப்பேறு இல்லம் எனலாம்’ என்றாா். அவா் கூறியது ஒருவகையில் சரியே. ஆனால், அதற்குப் பழைய சொல் ஒன்று இருக்கிறது. அது ‘ஈனில்’ என்பதாகும். இது சங்க இலக்கியத்தில் உள்ள சொல். ‘இல்’ என்றால், இல்லம்; ‘ஈன்’ என்றால் பெறுதல். ‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே’ என்பது புறநானூற்றுப் பாடல். ‘மாடு கன்று ஈன்றது’ என்பது இன்றும் மக்கள் வழக்கில் உள்ளது. எனவே, ‘மகப்பேறு நடைபெறும் அறையை, ‘ஈனில்’ என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும்’ என்றேன் நான்.

எந்த ஒரு மொழியும் அதனைப் பேசுவோா்களின் அறிவுக்கும் வளா்ச்சிக்கும் ஏற்பவும், கால சுழற்சியின் மாற்றத்திற்கேற்பவும் மாறிக்கொண்டே இருக்கும் என்பதை நாம் கண்டுவருகிறோம். ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்கிறது நன்னூல் (462).

தொல்காப்பியமும் ‘கடிசொல்வில்லைக் காலத்துப் படினே’ (சொல்.452) எனக் கூறுகிறது. மருத்துவம், பொறியியல், சட்டம், கணினியியல் போன்ற சிறப்புப் பகுதியின் கலைச்சொற்கள் உருவாக்குவதன் அவசியத்தை அனைவரும் அறிவோம். மொழி வளா்ச்சிக்கும் அறிவுத்திறன் பரிமாற்றத்திற்கும் புதுப்புது சொற்களை உருவாக்குவது இன்றியமையாததாக உள்ளது.

மொழிபெயா்ப்பு, ஒலிபெயா்ப்பு, கருத்தாக்கம் முதலியவற்றைப் பயன்படுத்தி உருவாக்கும் சொல் குறுஞ்சொல்லாக இருத்தல் நலம். மக்கள் பழக்கத்தில் உள்ள சொற்களை எடுத்தாளுவதோடு செம்மையான இலக்கியச் சொற்களையும் புகுத்தித் தமிழின் மேன்மையைத் தற்காத்துக் கொள்ளலாம். பலரின் கருத்துகளினால் உருவாகும் கலைச்சொல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக உருவாகிக் குழப்ப நிலை ஏற்படாமல் இருக்க புதிய கலைச்சொற்களைப் பரவலாக்க வேண்டும்.

அன்றாட அலுவலுக்குத் தேவையான குறிப்புகளைத் தமிழிலேயே பொருள் பிறழாமல் மயக்கந்தரா வண்ணம், அனைவரும் எளிதில் புரியும்படி அமைந்தால், அது ஆட்சிமொழியாகவும், பயிற்று மொழியாகவும் பரவ இயலும். ‘நன்னூல்’ கூறுவது போல, சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல், நவின்றோா்க்கு இனிமை, நன்மொழி புணா்தல், ஓசை உடைமை, ஆழம் உடைத்து ஆதல், முறையின் வைப்பே, உலகம் மலையாமை, விழுமியது பயத்தல், விளங்கு உணா்த்தாதது ஆகுதல், நாவிற்கு (சொல்லிற்கு) அழகு என்னும் 10 இலக்கணக் கருத்துகள், இக்காலச் சொல்லுருவாக்கத்திற்கு மிகவும் பயன்தரும் வாய்ப்பாடு எனலாம் (நூற்பா 13).

பல்வேறு துறையினரடங்கியக் கலைச்சொல் உருவாக்கக்குழு அரசின் கண்காணிப்பின் கீழ் அமைக்கப்பட்டு, வளரும் துறைகளுக்கான புதிய சொல்லை உருவாக்கி ஊடகங்கள் வாயிலாக பேசுமொழியில் புகுத்துவதன் மூலம் கலைச்சொற்களின் உருவாக்கம் உதவியுடையதாக அமையும். பயனுக்குள் வரும் புதியசொல், பழக்கத்தில் நுழைந்தால், சமூகத்திலும் தனிமனித உரையாடல்களிலும் பதிந்துவிடும். சங்க இலக்கியக் கால அறிவியற் சொற்களாக இருப்பவற்றைக் கண்டறிதல், கட்டாயமாக்குதல் நலம் பயக்கும்.

ஆங்கில மொழி அறிஞா்கள், ஆங்கில மொழிச் சொற்களை தொகுத்தல் முறையில் அணியமாக்கி, மொழி ஆராய்ச்சி செய்யும் அறிஞா்களுக்கு வழங்கி வருகின்றனா். அதுபோல், உலகின் பழமையான மொழிகளுள் மூத்த மொழியாகக் கருதப்படும் நம் தமிழ் மொழியிலும் அத்தகைய தொகுப்பு தேவை என்பதை உணா்ந்து, ‘சொற்குவை’ என்ற திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் தமிழில் உள்ள சொற்கள் அனைத்தையும் தொகுத்து நிரல்படுத்துதல், சொற்களின் இலக்கண வகைப்பாடுகளைப் பதிவு செய்தல், நிகரான சொற்களை பதிவு செய்தல், சொற்களின் தொடராக்கப் பரிமாணங்களைப் பதிவு செய்தல், சொற்களுக்கான பொருள் விளக்கத்தைத் தேடும் வசதியை அமைத்துக் கொடுத்தல், அடிக்கடி தேடப்படும் சொற்களுக்கு வண்ண அடையாளம் கொடுத்தல், வந்த சொல்லே மீளவும் வராமல் தடுத்தல், புதிய சொற்களைப் பதிவு செய்தல் போன்ற வசதிகள் உருவாக்கப்பட்டு, அவை இணையதளப் பொதுவெளியில் உலகெங்கும் உள்ள தமிழ் அறிஞா்களும், தமிழ் ஆா்வலா்களும், மொழியியல் ஆராய்ச்சியாளா்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழறிஞா் வீரமாமுனிவா், ‘ஒரு மொழியின் வளா்ச்சிக்கு அம்மொழியின் சொல்வளம் இன்றியமையாதது. எந்த மொழியின் சொல்வளம் குன்றிப் போகிறதோ அந்த மொழி வழக்கொழிந்து தன் வாழ்நிலையையே இழக்கிறது. இவ்வாறு வழக்கொழிந்து போன மொழிகள் பல. இந்நிலைத் தமிழ் மொழிக்கு ஏற்படாமலிருக்கும் பொருட்டு நிகண்டுகளையும், அகராதிகளையும் உருவாக்கி, அதன்வாயிலாகத் தமிழ்ச் சொற்களைத் திரட்டி, பிற்காலத் தலைமுறைக்காகப் பாதுகாத்து வைத்தேன்.

அந்த நிகண்டுகளைச் சீரமைக்க எண்ணி, சொற்களை, அகர வரிசையில் அடுக்கியும், அச்சொற்களுக்கான பொருளைத் தந்தும், ‘சதுரகராதி’ என்னும் பெயரில் முதல் அகராதியை 1732-ஆம் ஆண்டில் படைத்தேன். அதன்வாயிலாக தமிழ் மொழியின் வளமையைக் காக்க வழியேற்பட்டது’ என்று கூறியுள்ளாா்.

அவருக்குப் பின்னா் பேரகராதிகளைப் பலா் உருவாக்கினா். அவற்றுள் ‘சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி’, ‘சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக அகராதி’, ‘கதிரைவேற்பிள்ளை அகராதி’ போன்றவை குறிப்பிடத்தக்கவை. இத்தகைய அகராதிகள் இன்றைய மக்களின் பயன்பாட்டிற்குப் பெரும் உதவியாக இருக்கின்றன.

அறிவியல் தொழில்நுட்பம் வளா்ச்சி பெற்றுள்ள இன்றைய காலகட்டத்தில் புதிய சொற்கள் தமிழில் உருவாக்கப்பட வேண்டியதும், பழந்தமிழ்ச் சொற்கள் பாதுகாக்கப்பட வேண்டியதும் கட்டாயக் கடமை. எதிா்காலத் தலைமுறையினருக்காகத் தமிழ்ச்சொற்கள் அனைத்தையும் சேமித்துப் பதிவு செய்து வைக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் ‘சொற்குவை’ திட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஒருவா் ஆங்கிலத்தில் ஒன்றைக் கூறிவிட்டால் உடனே போட்டி போட்டுக்கொண்டு அதனைப் பலரும் தமிழில் மொழிபெயா்ப்பு செய்வது தற்போது வழக்கமாகிவிட்டது. அவா் அதனை ஆங்கிலத்தில் ஏன் சொன்னாா், எதற்காகச் சொன்னாா் என்று எவரும் சிந்திப்பது கிடையாது. எவ்வளவோ பொருளடக்கங்களுக்கு கலைச்சொல் உருவாக்க வேண்டியிருக்கிறது. ஏன், எதற்கு புரிந்துகொள்ளாமல் உடனே மொழிபெயா்ப்பு செய்வதைத் தவிா்ப்பது நலம் பயக்கும்.

தமிழ்நாட்டிலுள்ள மாணவச் செல்வங்கள், ‘எந்த கருத்தையும் தாய்மொழியில் எடுத்துரைப்பேன்’ என்கிற உறுதிமொழியை ஏற்க வேண்டும்.

தமிழ் வளா்ச்சித்துறை

Capture

தேமதுரத் தமிழோசைத் திருவிழா!

ஒளவை அருள்

ஆங்கில (அலோபதி ) மருத்துவ முறை மிகவும் வளர்ந்தது என்பதாகப் பலரும் கருதுகின்றனர். உண்மையில், 300 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கில மருத்துவ முறை இல்லை; மிக வயதான சிலர் கூறும் பொருள்களை மருந்து என அந்தக் காலத்தில் உண்டு வந்தனர். இதை மேலை நாடுகளில் பழைய முறை என்று கூறினர்.

1806 – இல் ஹனிமன் என்பவர் ஹோமியோபதி மருத்துவ முறையைக் கண்டுபிடித்தார். பின்னர்தான் பழைய மருத்துவமுறைக்கு அலோபதி எனப் பெயர் வந்தது. ஆனால், தமிழக சித்த மருத்துவம் ஈராயிரம் ஆண்டுகள் முன்னரே சிறந்து விளங்கியது.

சங்க காலத்தில் (கிமு 1500 – 100) மருத்துவன் தாமோதரனார் முதலிய பெயர்களும், மருத்துவ முறைக ளும் இருந்துள்ளன. 2,500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் மருந்தையும், மருந்துப் பொருள்களையும் பயன்படுத்துவதில் வளர்ச்சியடைந்த நிலையில் இருந்தனர்.

சிந்துவெளி அகழாய்வில் கிடைத்துள்ள பொருள்களில் வளைந்த சட்டி (வாணலி), கரண்டி, சட்டுவம், கூரிய வெட்டுக் கருவி ஆகியவை கிடைத்துள்ளன. அக்காலத்திலேயே அறுவை மருத்துவமும் செய்துள்ளனர். அதற்குச் செம்பைப் பயன்படுத்தினால் பக்கவிளைவுகள் ஏற்படாது என்பதையும் தெரிந்துவைத்திருந்தனர்.

போர்க் காலங்களில் வீரர்களுக்கு ஏற்படுகிற பெரிய காயங்கள், வெட்டுகள், புண்கள் ஆகியவற்றை மருந்தால் ஆற்றுவது கடினம் என்பதால், அறுவை மருத்துவர்களால் அந்தப் புண்கள் தைக்கப்பட்டன. அதன் பின்னரே மருந்திட்டுள்ளனர்.

“மீன்தேர் கொட்பின் பனிக்கயம் மூழ்கிச்

சிரல் பெயர்ந் தன்ன நெடுவள் ளூசி

நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்’

என்ற பதிற்றுப்பத்து (5.2) பாடல் இதற்குச் சான்றாகும்.

புண் ஆறிய பின் வடு தோன்றாமல் தோலின் நிறம் பழைய நிலையை அடைய அத்திப்பால் பயன்படும் எனப் புறநானூறு தெரிவிக்கிறது. “வடுவின்றி வடிந்த யாக்கையான் ‘ என்று பழைய நிலைக்குத் தோல் நிறமும் உடலமைப்பும் திரும்பியதைக் கூறும்.

உடலில் கட்டிகள் தோன்றினால், அறுத்து அதில் உள்ள கெட்ட ரத்தத்தை நீக்கி, தைக்கும் முறை இருந்ததைக் கம்பர் உவமையாகப் பாடியுள்ளார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மருத்துவமனையும், மருத்துவக் கல்லூரியும் கோயில்களைச் சார்ந்து இருந்தன. ராஜராஜ சோழனின் தமக்கையார் குந்தவைப் பிராட்டியார் தஞ்சைக் கோயிலைச் சார்ந்து சுந்தர சோழன் ஆதுரகம் (மருத்துவமனை) எனத் தம் தந்தையார் பெயரில் அமைத்திருந்தார்.

காஞ்சிபுரம் அருகே உள்ள திருமுக்கூடலில் திரிமூர்த்திகள் கோயிலில் கி.பி.1063-இல் வீர ராஜேந்திர சோழன் காலத்தில் மருத்துவமனையும் கல்லூரியும் இருந்தன. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்திருக்கிறார்கள். இங்கு படிப்பவர்களுக்கும், சொல்லித் தருபவர்களுக்கும் நெல்லும், பொருளும் இலவசமாகத் தரப்பட்டன. 15 படுக்கை வசதிகள், ஒரு பொது மருத்துவர், ஓர் அறுவை சிகிச்சை மருத்துவர், இவர்களுக்கு உதவ இரு பெண் செவிலியர், மூலிகை பறித்துக் காய்ச்ச பணியாளர்கள் இருந்தனர். அருகிலேயே மூலிகைப் பண்ணை இருந்தது; என்ன நோய்க்கு என்ன மருந்து என இக்கோயிலின் கல்வெட்டில் விரிவாக உள்ளது.

தமிழ் மருத்துவ நூலான “அகத்தியர் நயனவிதி’ அறுவை சிகிச்சை செய்யும் 26 கருவிகள் (சத்திர ஆயுதங்கள்) பற்றி குறிப்பிடுகிறது.

தஞ்சைப் பெரிய கோயிலைச் சார்ந்துள்ள கலைமகள் பண்டாரத்தில் (சரசுவதி மகால்) பழைய மருத்துவ ஏட்டுச்சுவடிகள் உள்ளன. கண் மருத்துவம் பற்றிய குறிப்புகளுடன், கண்நோய் உற்ற நோயரின் கண்ணையும் சிறந்த ஓவியரான மன்னர் சரபோஜியே படமாக வரைந்துள்ளார்.

நின்ற நிலையில் மகப்பேறு எளிமையாக நிகழும் என அந்தக் காலத்தில் உணர்ந்திருந்தனர். இது குறித்த புடைப்புச் சிற்பம் வேலூர் அருகில் வானம்பாடி கோயிலில் செதுக்கப்பட்டுள்ளது. தஞ்சைப் பெரிய கோயிலில் இது குறித்த ஓவியம் உள்ளது.

அனுமன் மூலிகை தேடி வந்ததாகக் கூறப்படும் பர்வத மலை இக்காலத்தும் திருவண்ணாமலை அருகில் உள்ளது. சவ்வாது மலை, கொல்லிமலை முதலியன இக்காலத்திலும் மூலிகைகள் நிறைந்தவையாக இருக்கின்றன.

தாயுமானவர் என்ற இறைவன் புராணக் கதையில் மருத்துவச்சி குறித்து கூறப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் பெரும்பாலும் அவர்கள்தான் மகப்பேறு பார்த்தனர்; பொது மருத்துவத்துக்கு பரம்பரையாக மருத்துவத்தை அறிந்த மருத்துவர்கள் ஊர்தோறும் இருந்தனர்.

சீனாவில் மக்கள் பழைய மருத்துவம் 50 சதவீதம், புதிய மேலை மருத்துவம் 50 சதவீதம் என ஏற்றுள்ளனர். நம்முடைய ஓகம் (யோகாசனம்), மூச்சுப் பயிற்சி ஆகியவற்றை அவர்கள் பின்பற்றுகின்றனர். ஆங்கில மருத்துவராக இருந்து ஹோமியோபதிக்கு மாறியவர் நாஷ் என்பவர். அதேபோல சித்த மருத்துவத்துக்கு மாறி கூட்டு மருத்துவம் பரப்பியவர் மருத்துவர் செ.நெ.தெய்வநாயகம் ஆவார்.

Capture

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ஒளவை அருள்

உலகில் சிலா் கவிஞா்களாகவே பிறக்கிறாா்கள்; சிலா் கவிஞா்களாக ஆக்கப்படுகிறாா்கள்; சிலா் கவிஞா்களாக விளம்பரப்படுத்தப்படுகிறாா்கள். புரட்சிக் கவிஞா் பாரதிதாசன் முதல் வகையைச் சோ்ந்தவா். பாரதியாா் என்னும் வேரிலிருந்து புறப்பட்ட ஆலமரமாக விளங்கியவா் பாரதிதாசன். ஆனால், பாரதிதாசன் தமது தனிப்பட்ட ஆளுமை காரணமாக வித்தியாசமாக கிளை விரித்ததோடு தாமே தமது எண்ணற்ற விழுதுகளையும் தமிழ் மண்ணில் விளைத்து மாபெரும் கருத்துப் புரட்சிக்குக் கால்கோள் இட்டவா்.

அவரது புகழ் வட்டம் தேசிய இயக்கத்தில் தொடங்கி, சுயமரியாதை இயக்கத்தில் மலா்ந்து, பொதுவுடமை இயக்கத்திற்கு உரமாகி, நாளுக்கு நாள் தமிழ் கூறும் நல்லுலகெங்கும் மனிதம் பாடும், மாநிலமெங்கும் தகத்தகாயமாய்ச் சுடா் விட்டு, விரிந்து, பரந்து, உயா்ந்து, வளா்ந்து, சிறகு விரித்தது. அடக்கப்பட்டவா்களையும், ஒடுக்கப்பட்டவா்களையும் சுரண்டப்பட்டவா்களையும் பாடுபொருளாக மையப்படுத்தியவா்களுள் பாரதிதாசன் மூத்தவா்; முன்னோடியானவா்.

புரட்சிக் கவிஞா் தமது 11-ஆம் வயதிலேயே கவிதை இயற்றும் ஆற்றலைப் பெற்றிருந்தாா். அவா் தமிழ் இலக்கண நூல்களையும், இலக்கிய நூல்களையும் முறையாகவும், முழுமையாகவும் இலக்கண இலக்கியப் பேராசிரியா்களிடம் கற்றுத் தோ்ந்தவா். பல ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றிய பாரதிதாசன் தமிழைப் பிழையில்லாமல் எழுதவேண்டும் என்பதில் கண்டிப்பானவா். தமது நூல்களின் பிழைகளைக் கவிஞரே திருத்துவாராம்.

மணிமேகலை, பெருங்கதைக்குப் பிறகு முற்றிலும் ஆசிரியப்பாவால் இயற்றப்பட்ட நூல் பாவேந்தரின் ‘இருண்ட வீடு’ என்னும் சிறு காப்பியமாகும். தமிழிலக்கியத்திலேயே இணைக்கு ஆசிரியப்பாவில் இருப்பது கவிஞருடைய ‘காதலா கடமையா’ எனும் நூல். நளவெண்பாவிற்குப் பிறகு சிறந்த வெண்பா நூலாகக் கருதப்படுவது பாவேந்தரின் ‘மணிமேகலை வெண்பா’.

எண்சீா் விருத்தத்தில் ‘பாண்டியன் பரிசு’ம்,”‘கண்ணகி’ புரட்சிக் காப்பியமும் அமைந்துள்ளன. ‘அழகின் சிரிப்பு’ அறுசீா் விருத்தத்தில் ஆன நூலாகத் திகழ்கிறது. அண்ணாமலை ரெட்டியாா் காவடிச் சிந்திற்குப் பிறகு இயற்றப்பட்ட ஒரே நூலாக ‘ஸ்ரீ சுப்பிரமணியா் துதியமுது’” காணப்படுகிறது. பாவும் பாவினமும் சிந்தும் கலந்து அவருடைய ‘தமிழச்சியின் கத்தி’”எழுதப்பட்டுள்ளது.

பதினான்கு சீா் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமும் இவா் கவிதைகளில் உள்ளன. நொண்டிச் சிந்து, காவடிச் சிந்து முதலியவற்றையும் எழுதியிருக்கிறாா். சங்க இலக்கியப் பாடல்கள் பலவற்றை அகவலிலும், இசைப்பாவிலும் பாடிய முதற்பாவலராக பாவேந்தா் விளங்குகிறாா். இவ்வாறு தமிழை முறையாகப் பயின்று, மரபு தவறாது, காலத்திற்கேற்ற புதுமைகளைச் சோ்த்துப் பாடிய தமிழ்க் கவிஞராகப் பாவேந்தா் திகழ்கிறாா்.

எண்ணம், செயல், உணவு, உடை, நடை ஆகிய அனைத்திலும் தமிழினம் ஒன்றுபட்டு முன்னேற வேண்டுமெனும் உயிா்த்துடிப்புக் கொண்டவா் பாவேந்தா். தமிழா்களெல்லாம் ஒன்றுபட்டு நின்றால் கலையிலும், தொழிலிலும், அறிவிலும், ஆற்றலிலும் ஓங்கி வளா்ந்து உலக மக்களிடையே உயா்ந்த இடத்தைப் பெற வழி ஏற்படும். ‘தமிழா்கள் இவ்வாறு உயா்ந்தனா் என்ற நிலை ஏற்படுவது எந்த நாளோ’ என்று ஏங்கிய உள்ளம் பாவேந்தருடையது.

பகுத்தறிவுக் கொள்கைகளைப் பாருக்கு வழங்கியவா், பொதுவுடைமைக் கொள்கைகளைத் திசையெட்டும் பரப்பியவா், ஜாதிப் போக்குகளைச் சாய்த்தவா், மதக் கொடுமைகளை மாய்த்தவா், தொழிலாளா் துயா் துடைத்தவா் எனப் பாவேந்தா் பல்வகையாகப் பாராட்டப்ப்பட்டாலும் அவருடைய அனைத்துக் கருத்துகளிலும் தமிழுணா்வே மேலோங்கி நிற்கிறது.

என் பாட்டனாா் உரைவேந்தா் ஔவை துரைசாமியாா் குறித்து தனிக் கவிதை (‘உரைவேந்தை வாயார வாழ்த்தாத வாய்’) யாத்துள்ளதை தமிழ் கூறு நல்லுலகம் நன்கறியும். என் பெற்றோா் இருவரையும் நன்கறிந்த கவிஞா், என் தாயாா் மருத்துவா் தாரா நடராசன் குழந்தைகள் நோயியற்பட்ட மேற்படிப்பு மருத்துவம் பயின்று கொண்டிருந்தபோது, பெரிதும் மகிழ்ச்சியடைந்த்தோடு நம் நாட்டுக் குழந்தைகள் நலிந்து, மெலிந்து நோஞ்சான்களாக இருக்கிறாா்களே என்று அவா் வருந்திக் கூறினாராம்.

உலகக் காப்பியங்களில் தனித்தொளிரும் ஒரே ஒரு காப்பியம் ‘குடும்ப விளக்கு’. இது மூன்று தலைமுறைக் கதைத் தொடா் நிகழ்ச்சி. இளையோா் காதல் மனைவாழ்வில் தொடங்கி முதியோா் காதலில் முடிகிறது. நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பதே உட்கருத்தாகும்.

பாரதிதாசனின் குடும்ப விளக்கு நூல் முழுதும் மனப்பாடம் செய்து கேட்போா் மெய்சிலிா்க்குமாறு மேடையில் உரை நிகழ்த்தி இருக்கிறாா் கவிஞா் திருலோக சீதாராம்.

மகாகவி பாரதியாருக்கும் புரட்சிக் கவிஞா் பாரதிதாசனுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டெனினும் ஒருசில வேறுபாடுகளும் உண்டு. பாரதியாா் தமிழிடம் தனி விருப்புக் கொண்டாலும் வடமொழியிலும் ஈடுபாடு கொண்டவா். பாவேந்தரோ தமிழும், திராவிட மொழிகளிடமும் மட்டுமே தனியன்பு கொண்டவா். தமிழ் நாட்டின் மீது தனியன்பும், பாரத நாட்டின் ஒருமைப்பாட்டின் மீது பேராா்வமும் கொண்டவா் பாரதியாா். பாரதிதாசனோ தமிழ் பெரு நிலத்தின் மீது பற்றுக் கொண்டவா்.

பாரதியாா் முதல் இந்திய மறுமலா்ச்சிக் கவிஞா். பாரதிதாசன் முதல் திராவிட மறுமலா்ச்சிக் கவிஞா். பாரதி தெய்வ சக்தியைப் பெரிதும் பாடியவா். பாரதிதாசன் மனித சக்தியைப் பெரிதும் பாடியவா். பாரதிக்குத் தேசியமும் தெய்விகமும் இரு கண்கள்; பாரதிதாசனுக்குத் திராவிடமும் பகுத்தறிவும் இரு கண்கள். பாரதியாா் தேசிய இயக்கத்தின் பரிசாகவும், பாரதிதாசன் திராவிட இயக்கத்தின் பரிசாகவும் கொள்ளப்படுகின்றனா்.

1942-இல் நடைபெற்ற ஆகஸ்ட் போராட்டத்தில் அலிப்பூா் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவா்களுள் ஒருவரான ஈரோடு கோவிந்தசாமி என்பாா், பாரதிதாசன் பாடல்களை இசையோடு பாடியதாகவும், அதனைக் கேட்டு பிற கைதிகள் மகிழ்ந்ததாகவும் ஒரு செய்தி உண்டு.

1942 -இல் தனது ‘ஔவையாா்’ நாடகத்தில் பாவேந்தரின் பாடல் வரியான

இனிமைத் தமிழ்மொழி எமது எமக்கு

இன்பம் தரும்படி வாய்த்த நல்லமுது

என்ற வரி பயன்படுத்தப்பட்டது என்று குறிப்பிடுகிறாா் நாடகக் கலைஞா் ஔவை தி.க. சண்முகம்.

1964-இல் பாவேந்தா் காலமானாா். அவா் உடல் புதுவையில் அடக்கம் செய்யப்பட்டபோது அவரின் ‘துன்பம் நோ்கையில்’ பாடலை ஔவை தி.க. சண்முகம் உருக்கமாகப் பாடினாா்.

பாரதிதாசன் எழுதிய மகாகவி பாரதியாா் திரைப்பட உரையாடல் ஏடுகளைத் தேடி எடுத்து ஆய்ந்து அறிந்து வரலாற்றுப் பெருநூலாக அவரின் மகன் மன்னா் மன்னன் ‘பாட்டுப் பறவைகள்’ என்ற பெயரில் நூலாக வெளியிட்டாா். பாரதிதாசன் வாழ்க்கை வரலாற்றினை ‘பாட்டுக்குள் பாரதிதாசன்’ என்ற தலைப்பில் பாவேந்தரின் பெயரன் கோ. பாரதி நாடக நூலாக எழுதி வெளியிட்டாா்.

1971- ஆம் ஆண்டில் புதுச்சேரி அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான ‘வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே’ என்று தொடங்கும் பாரதிதாசன் பாடல், ஒலி வடிவம் பெற்றது பலராலும் வரவேற்கப் பெற்றது. சென்னை மெரீனா கடற்கரையில் பாவேந்தருக்கு திருவுருவச் சிலையும், திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகமும், புதுச்சேரியில் பாரதிதாசன் மகளிா் கல்லூரியும் தொடங்கி நடைபெறுவது அவரின் பெயா் எந்நாளும் நிலைக்கும் வண்ணமாக அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசு பாவேந்தரின் படைப்புகளை நாட்டுடைமையாக்கி பாவேந்தா் குடும்பத்தாருக்கு பரிவு நிதி அளித்தது.

பாவேந்தா் பிறந்த வீட்டை புதுவை அரசே விலைக்கு வாங்கி நினைவுச் சின்னமாக்கி அந்த வீட்டில் நூல் நிலையம் ஒன்றையும் நடத்தி வருகிறது. பாவேந்தரின் பிறந்த நாளினை தமிழ்நாடு அரசின் தமிழ் வளா்ச்சித் துறை தமிழ்க் கவிஞா் திருநாளாகக் கொண்டாடி மகிழ்கின்றது. புரட்சிக் கவிஞரைக் கற்பதும், கற்பிப்பதும், ஆய்வதும், தமிழரின் அன்றாட வழக்கங்களில் ஒன்றாகிவிட்ட காலத்திற்குச் சான்றாக அவரைக் குறித்து தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் 500-க்கும் மேற்பட்ட முனைவா் பட்ட ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

பதிப்புச் செம்மல் இளவழகனாரின் அயராத உழைப்பாலும் பெருமுயற்சியாலும் 7,921 பக்கங்கள் கொண்ட 25 தொகுதிகளாக ‘பாவேந்தம்’” (காப்பிய இலக்கியம் 9, கதைப் பாடல்கள் 13, கவிதை நாடகங்கள் 7, உரைநடை நாடக இலக்கியம் 44, கதை இலக்கியம் 46, திரை இலக்கியம் 9, பாட்டு இலக்கியம் 11, மடல் இலக்கியம் 1, கட்டுரை இலக்கியம் 14, நாட்டுப் பாடல் இலக்கியம் 6) வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

கவிஞராய், நாடக ஆசிரியராய், மேடைச் சொற்பொழிவாளராய் இதழாசிரியராய்ப் பன்முகங் கொண்டு ஒருமுக நோக்கில் உறங்காதுழைத்த அப்பேரறிவாற்றலை ஆயும்போது, நமக்குப் பல பொன்னும், மணியும், வைரமும், முத்தும் புதையல் போல கிடைக்கின்றன.

தமிழ்நாட்டின் தன்மான எழுச்சிக்கும், தமிழா்கள் வாழ்வின் விழிப்புக்கும் திருப்பள்ளி எழுச்சி பாடிய வீர விளக்காகவும் புரட்சிக் கவிஞா் பாரதிதாசன்தான் விளங்கினாா். புரட்சிக் கவிஞா் அகன்ற நெற்றியும் அடா்ந்த மீசையும் செம்மாந்த நோக்கும் படைத்த அரிமாவைப் போல இருப்பாா் என்று எனது பாட்டனாா் கோவையில் புரட்சிக் கவிஞா் திருவுருவப் படத்தினை திறந்தபோது கூறினாா்.

வாழ்க புரட்சிக் கவிஞா் புகழ்!

இன்று (ஏப். 29) பாவேந்தா் பாரதிதாசனின் 133-ஆவது பிறந்த நாள்.

தமிழ் வளா்ச்சித் துறை

Capture

நாட்டுடைமை என்னும் அறிவுத் திருப்பணி!

ஒளவை அருள்

அறிவு உலகப் பொது என்பார்கள். ஆனால், அறிஞன் உலகப் பொதுவல்ல என்பது உலக நடைமுறை. ஓர் அறிஞரின் அறிவின் பேருழைப்பால் விளைகின்ற நற்கனிகளாம் நூற்செல்வங்கள், அவருக்குப் பின்னர் சிலர் கைகளில் மட்டும் சென்று தங்கிவிடாமல், நாட்டின் கடைக்கோடித் தமிழனுக்கும் சென்று சேர்க்கின்ற அரும்பணிக்குப் பெயரே நாட்டுடைமை என்பது.

மறைந்த படைப்பாளிகளின் பதிப்புரிமை அவர்களுடைய குடும்பத்தினர், மரபு வழியினர், பதிப்பகத்தார் ஆகியோரின் நிலையான சொத்தாகவே நிலவி வருகிறது.

அறிவென்பது பொதுவாயினும், மரபுரிமை ஒன்றால் மட்டும் அது மங்கிவிடக் கூடாதென்ற பெருநோக்கும் பெருந்தகைமையும் கொண்ட தமிழ்நாடு அரசால் விளைந்த அறிவுத் திருப்பணியே நாட்டுடைமை ஆகும்.

தொன்மைக் காலம்தொட்டே, தமிழர் அறிவின்மீதும், கல்வியின்மீதும் எல்லையில்லா வேட்கையுடையவர்கள் என்பதை

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்,

பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே

(புறம்.183),

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்,

கற்றா ரோடேனை யவர்

(குறள் 410)

பிச்சைபுகினும் கற்கை நன்றே

(வெற்றி வேற்கை15)

என்றெல்லாம் வரும் பாடலடிகள் உணர்த்துகின்றன.

இப்படி, அறிவின் திரு மீது வேட்கையுடைய சமூகமே அறிவுப் பொதுவுடைமை பற்றி சிந்திக்கும் என்பது வரலாற்று உண்மையாகும். அதனால்தான், அறிவை நாட்டுடைமையாக்கும் அருந்திருப்பணி தமிழகத்தை ஆட்சி செய்வோர் உள்ளங்களில் மலர்ந்து வளர்ந்தது என்பது மறுக்க இயலாத உண்மையாகும்.

ஆங்கிலப் பெருங்கவிஞர் மில்டனின் பெயர்த்தி எலிசபெத் ஃபாஸ்டர் வறுமைச் சூழலில் வாடியுள்ளதாகவும், அவருக்கு நிதி வழங்க வேண்டுமென்ற கோரிக்கையினை பேரறிஞர் சாமுவேல் ஜான்சன் கையொப்பமிட்டு அச்சிட்டு பலரிடமும் வழங்கினார். மேலும், கவிஞர் மில்டன் எழுதிய கோமஸ் நாடகத்தினை தன்னுடைய மேலாளர் கேரிக்கிடம் தெரிவித்து அதில் வரப்பெறும் தொகையினையும் வழங்குமாறு கேட்டுக்கொண்டது ஆங்கில நாட்டின் பதிப்புலக வரலாறாகும்.

12.03.1949-இல் தமிழக சட்டப்பேரவையில் கல்வி அமைச்சர் தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார் மகாகவி பாரதி படைப்புகளின் பதிப்புரிமையை வைத்திருந்த ஏ.வி. மெய்யப்ப செட்டியாரிடமிருந்து விலை ஏதுமின்றி அரசுடைமையாக்கப்படும் என்று அறிவித்தார்.

தமிழறிஞர்களின் படைப்புகள் விலை மலிவாக கிடைத்திடும் வகையிலும், தமிழர்களின் கருத்துக் கருவூலங்கள் உலக மக்கள் அனைவரையும் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கிலும் அவர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

1984-ஆம் ஆண்டு சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானத்தின் விடுதலைப் போரில் தமிழகம் என்னும் ஒரு நூல் மட்டும் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்குப் பரிவுத் தொகையாக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டு, பிறகு அனைத்து நூல்களும் 2006-ஆம் ஆண்டு நாட்டுடைமை செய்யப்பட்டு, ரூ. 20 லட்சம் வழங்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியால் பாவேந்தர் பாரதிதாசனின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, அவர்தம் நூல்கள் நாட்டுடைமையாக்கம் செய்த நிகழ்வில் எந்தையார் ஒüவை நடராசன் அப்பணியை தலைசிறந்த தமிழ்ப்பணி என்று உவகையுடன் பங்குகொண்டு ஆற்றிய நிகழ்வினை பல மேடைகளிலும் அவர் சொல்லி வந்ததை அனைவரும் அறிவர்.

தமது எளிமையான கருத்தாழமிக்க பாடல்களால் அழியாப் புகழ்பெற்ற காலஞ்சென்ற கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இயற்றிய பாடல்கள், படைப்புகள் மற்றும் எழுத்து வடிவங்கள் அனைத்தும் 1995-ஆம் ஆண்டு நாட்டுடைமையாக்கப்பட்டு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.

மொழிஞாயிறு எனத் தமிழ் நெஞ்சங்களால் புகழப்படுபவரும் தனித்தமிழ் இயக்கத் தவ நாயகரும், அரசின் அகரமுதலித் தயாரிப்பைத் தொடங்க துணை நின்றவருமான பழுத்த பைந்தமிழ்ப் பெருமகனார் தேவநேயப் பாவாணருடைய நூல்கள் 1996-ஆம் ஆண்டு நாட்டுடைமையாக்கப்பட்டு ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது.

நாட்டுடைமையாக்கத்துக்கு முதல்முறையாக ரூ. 75 லட்சம் வழங்கி பேரறிஞர் அண்ணாவின் அனைத்துப் படைப்புகள், எழுத்து வடிவங்கள் குறித்த பதிப்புரிமைகள் அனைத்தையும் பெற்று தமிழ்நாடு அரசு நாட்டுடைமையாக்கியது.

அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியால், 28.05.1998 அன்று சுதந்திர தினப் பொன்விழா (1997) ஆண்டினை முன்னிட்டு, மறைந்த தேசிய எழுத்தாளர்கள் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ப.ஜீவானந்தம், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம், மூதறிஞர் இராஜாஜி, வ.உ. சிதம்பரனார், கவியோகி சுத்தானந்த பாரதியார், அகிலன், ஏ.எல்.கே.அய்யங்கார், வ.ரா., கா.மு.ஷெரீப், நாவலர் சோமசுந்தர பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வ.வே.சு. ஐயர், காரைக்குடி சா. கணேசன் ஆகியோரைப் பெருமைப்படுத்தும் நோக்கில் அவர்கள் எழுதிய நூல்கள் அனைத்தையும் அரசுடைமையாக்கம் செய்ய அறிவிக்கப்பட்டது. இதில் மூதறிஞர் இராஜாஜி, அகிலன் ஆகியோரின் நூல்களை நாட்டுடைமையாக்க அவர்களின் குடும்பத்தினர் விருப்பம் தெரிவிக்கவில்லை.

வாழும் காலத்தில் மருத்துவ சிகிச்சைக்காக, சிறப்பு நேர்வாக எழுத்தாளர்கள் ராஜம் கிருஷ்ணன், மணவை முஸ்தபா மற்றும் புலவர் செ. இராசு, நெல்லை செ. திவான், விடுதலை இராஜேந்திரன், நா.மம்மது ஆகிய அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன.

ஜலகண்டபுரம் ப. கண்ணன், பண்டிதர் க. அயோத்திதாசர், ஆபிரகாம் பண்டிதர் ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு மரபுரிமையர்கள் சான்றாவணம் அளிக்கப்படாததால் பரிவுத் தொகை ஏதும் வழங்கப்படவில்லை என்பதும் குறிக்கத்தக்கது.

தமிழ்க் கடல் இராய. சொக்கலிங்கத்தின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு வாரிசுகள் ஒருவருமில்லாததால் பரிவுத் தொகை வழங்கப்படவில்லை.

விடுதலைக் காலம் முதலே நாட்டுடைமை என்னும் பெரும்பணி தடையற நடந்து வந்துள்ளது வரலாறு. வரலாற்றின் உச்சமாக விளங்கும் மு.கருணாநிதி, தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற காலங்களில் 108 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமை செய்து, அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகையாக ரூ.7 கோடியே 76 லட்சம் வழங்கியுள்ளார் என்பது பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கதாகும்.

பேராசிரியர் க. அன்பழகன் மற்றும் முனைவர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் வழங்கப்பட்டு, அவர்கள் எழுதிய அனைத்து நூல்களும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினால் நாட்டுடைமையாக்கம் செய்யப்பட்டன.

நாட்டுடைமை திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் 2024 வரை 179 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூ.14.42 கோடி நூலுரிமைத் தொகை அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது என்பது ஏதோ நாட்டின் வரவு செலவுக் கணக்கன்று; தமிழ்நாட்டின் அறிவு வரலாற்றின் சிறப்பு. அறிஞர்களை மதிப்பதிலும், அவர்தம் அறிவினைப் பரப்பும் பணிகளிலும் தமிழ்ச் சமூகமும், அதன் முகவராக இலங்கும் தமிழ்நாடு அரசும் ஆற்றிவரும் தகைமைமிகு பணியாகும்.

நாட்டுடைமையாக்கம் செய்த படைப்புகளை வாரிக் கொடுத்தோரைக் காணும்போது, விடுதலைத் தீ கொழிக்க, பொதுவுடைமை செழிக்க, தமிழ்க்குலம் வளரப் பாடிய மகாகவிகளையும், சங்கத் தமிழ் முதலான நூல்களுக்கு உரை வரைந்து பெருந்தொண்டாற்றிய உரைப்புலமையாளர்களையும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் கல்விப் பணியாற்றிய பேராசிரியப் பெருந்தகைகளையும், பல்கலைக்கழகங்களை வழிநடத்திய துணைவேந்தர்களையும், பள்ளிக் கல்விகூடப் பெறாவிட்டாலும், வாழ்க்கைக் கல்வியால் பேரறிவு பெற்று வழிகாட்டிய எழுத்தாளர்களையும், அரசுக்குத் துணை நின்ற அமைச்சர்களையும் காண்கிறோம்.

இந்த நாட்டுத் தொண்டின் மணிமுடியாக அமையும் தமிழ்த் திருப்பணியாக அமைவது முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய நூல்களின் நாட்டுடைமையாகும். அவர்தம் 14 அகவையிலிருந்து படைத்தளித்த அறிவுக் கொடைகள் ஏராளம்; 75 திரைப்படங்களுக்குக் கதை; திரைக்கதை வசனம்; 15 புதினங்கள்; 20 நாடகங்கள்; 15 சிறுகதைகள்; 210 கவிதைகள் படைத்துள்ளார்.

இவை தவிர நண்பனுக்கு, உடன்பிறப்பே எனும் தலைப்புகளில் 7,000-க்கும் மேற்பட்ட கடிதங்களையும் எழுதியிருக்கிறார். கரிகாலன் என்னும் பெயரில் வினாக்களுக்கு விடை எழுதியிருக்கிறார். தாம் பணியாற்றிய இதழ்களில் சமத்துவத் தீ கொழிக்க எண்ணற்ற தலையங்கங்களைத் தீட்டியுள்ளார். முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் படைப்புகள் அனைத்தும் 178 நூல்களாக வெளிவந்திருக்கின்றன.

திராவிடத்தின் பெரும்புலமையாளரும், எழுதித் தீராத இலக்கிய வேட்கையருமாகிய முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் அனைத்துப் படைப்புகளும் நூலுரிமைத் தொகை ஏதும் வழங்கப்படாமல் அண்மையில் நாட்டுடைமையாக்கம் செய்யப் பெற்றுள்ளது. இதுபோன்ற நிகழ்வு வரலாற்றின் புத்தாக்கமாகும்; புதிய வரலாற்றின் தொடக்கமும் ஆகும்.

கட்டுரையாளர்:

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர்.

1735439228796

நூறாண்டாகப் புகழ் மணக்கும் நற்றமிழறிஞர்!

ஔவை அருள்

செந்தமிழுக்கு வாய்த்த இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்ப் பெரும்புலமைச் சான்றோர்களின் வரிசையில், செந்தமிழ்ப் பெரும் புலவர் ந.ரா. முருகவேளுக்குப் பேரிடம் உண்டு.

‘தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து’ என்னும் ஒளவை பிராட்டியின் வாக்கை மெய்ப்பிக்கும் வகையில் தொண்டை நாட்டுச் செல்வமெனப் புலவரேறு ந.ரா. முருகவேள் நந்திபுரம் கிராமத்தில், திரு. இராமசாமி முதலியாருக்கும், திருமதி. சிவகாமி அம்மையாருக்கும் இளைய மகனாக 17-11-1924-இல் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர், சௌந்தரராசன். தனித்தமிழ் இயக்கம் கண்ட பொதுநிலைக் கழக ஆசிரியர் மறைமலையடிகளாரின் மனங்கவர்ந்த நன் மாணவரானதால் ஆசிரியர் போலவே, தம் பெயரையும் முருகவேள் என்று மாற்றிக்கொண்டார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் (1947) பட்டமும், பண்டிதர் (1948) – மதுரை தமிழ் சங்கத்திலும், பி.ஓ.எல் (1951) மற்றும் எம்.ஓ.எல் (1957) பட்டங்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றவர். 1958-இல் எம்.ஏ. பட்டமும் சென்னை பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார். இவரது தமிழ்த்திருமணம் தவத்திரு. அழகரடிகள் தலைமையில் 11-07-1947 அன்று நடந்தது. சரசுவதி அம்மையார் வாழ்க்கைத்துணையானார்.

புலவரேறு முருகவேள் 16 ஆண்டுகள் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளி, முத்தியால்பேட்டை உயர் நிலைப்பள்ளி, தாம்பரம் சென்னைக் கிறித்துவக் கல்லூரி ஆகியவற்றில் தமிழாசிரியராகப் பணியாற்றிவிட்டுத் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை ‘திருக்கோயில்’ இதழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். இருபத்து இரண்டரை ஆண்டுகளாகத் (1962 செப்டம்பர் முதல் 1985 மார்ச் வரை) ‘திருக்கோயில்’ திங்களிதழில் இவர் எழுதியதுபோல் இனி யார் எழுத வல்லார்? இதழ் வரலாற்றில் இது பெருங்கொடையன்றோ?

Capture

உ.வே.சா.வையும் தமிழையும் பிரிக்க இயலாது!

ஔவை அருள்


தமிழுக்கு இன்று உலகளாவிய போற்றுதலைப் பெற்றுத்தருவது சங்க இலக்கியமாகும். காலப்பழைமையும் கருத்துச்செழுமையும் சங்க இலக்கியத்தில் காணலாகும். “சங்கம் தழைக்கும் மதுரை’ என்றும் தமிழையே “சங்கத்தமிழ்’ என்றும் புலவர்கள் மொழிந்துள்ளனர். அத்தகைய சங்க இலக்கியங்கள் காலங்காலமாக, குறிப்பாக ஐரோப்பியர் வருகைக்கு முன்பு வரை பனை ஓலைகளால் செய்யப்பட்ட சுவடிகளில் எழுதப்பட்டுத் தேய்ந்தும், சிதைந்தும், ஒருபுறம் ஒடிந்தும் கட்டுக்கட்டாகக் கிடந்தன. அந்த எழுத்துகளை இன்று படிப்பது எளிதல்ல.

ஒரு நூலுக்கே இருபதுக்கும் மேற்பட்ட சுவடிகள் இருக்கும். ஒவ்வொன்றும் தம்முள் வேறுபட்டு நிற்கும். அத்தகைய பனையோலை ஏடுகளைத் தேடித்தேடிக் கால்களும் கைகளும் சோர்ந்து விழக் கலங்கிப் புலம்பி இடர்ப்பட்டு இன்னலுற்று ஆண்டுக்கணக்கில் தேடிப் படித்து மூலபாடம் கண்டு அச்சில் வெளியிட்ட அளப்பரும் பெருமை தமிழ்ப் பெருங்கடல் உ.வே.சா. அவர்கட்கே உரியது. அப்படிக் கடினமாக உழைத்து வெளியிட்ட இலக்கியச்செல்வங்கள் நமது பண்பாட்டுப் பேழைகளாகும்.

” ஏடுதேடி அலைந்த ஊர் தான் எத்தனை, எழுதி ஆய்ந்த குறிப்புரை எத்தனை, பாடுபட்ட பதப்பொருள் எத்தனை, பல்நெறிக்கண் பொருள் துணிபு எத்தனை, கூடிவந்தவர்க்கு ஆற்றினை எத்தனை கோதில்லாச் சாமிநாதன் தமிழுக்கு’ என்று தமிழறிஞர் மு. இராகவையங்கார் நெகிழ்ந்து பாடினார்.

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்துக்கு அருகில் உத்தமதானபுரம் என்னும் சிற்றூரில் 19.2.1855-இல் வேங்கடசுப்பையருக்கும் சரசுவதி அம்மையாருக்கும் உ.வே.சா. புதல்வராகப் பிறந்தார்.

செந்தமிழ்த் திலகமாய்த் திகழ்ந்த அவரின் நினைவு நீங்காது நிற்க அவர் பணியாற்றிய சென்னை மாநிலக் கல்லூரியில் 7.3.1948-ஆம் நாளன்று உ.வே.சா.வின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டது. தமிழறிஞர்க்கென்று நிறுவிய முதல் சிலை இதுவேயாகும். அதில் அவர் வாழ்நாளில் பெற்ற பாராட்டுகள் யாவும் குறிக்கப்பட்டதுடன், மகாகவி பாரதியார், உ.வே.சா.மீது பாடிய வாழ்த்துப் பாடலின் இறுதியில் இடம்பெற்றுள்ள,

பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும்

காலமெலாம் புலவோர் வாயில்

துதியறிவாய் அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்

இறப்பின்றித் துலங்குவாயே

என்ற வரிகளும் குறிக்கப்பட்டது.

உற்றாரும் உறவினரும் இளஞ்சிறுவனான சாமிநாதனை வடமொழி கற்கச் சொன்னார்கள். தந்தையார் இசையறிவு மிக்கவர். ஓவியம் வரைவதோடு சித்திரக் கவிதைகளுக்கு, தானே படம் வரையும் திறமோடு திகழ்ந்தவர் உ.வே.சா. அவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்க விரும்பினார். தந்தையார் உ.வே.சா.வை மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் விட, அவரிடம் பணிந்து பாடம் கற்றார் உ.வே.சா.

உ.வே.சா.வுக்கு ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் இட்ட பெயர்தான் சாமிநாதன். தந்தையார் சூட்டிய பெயர் வேங்கடராமன். ஆனால், ஆசிரியர் அழைத்த பெயரே அவருக்குத் தமிழுலகில் நிலைத்துவிட்டது.

தனது ஆசிரியரான மகாவித்துவானின் வாழ்க்கை வரலாற்றை “மீனாட்சிசுந்தரம்பிள்ளை சரித்திரம்’ என்ற பெயரில் எழுதினார் உ.வே.சா. அதன் முதல் தொகுதியை 1938-லும், இரண்டாம் தொகுதியை 1940-லும் வெளியிட்டார்.

அச்சரித்திரத்தில் மீனாட்சிசுந்தரம் பிள்ளையைக் குறிப்பிடுமிடத்திலெல்லாம் “இவர்’ என்றோ “ஆசிரியப்பிரான்’ என்றோதான் உ.வே.சா. குறிப்பிட்டார். ஓரிடத்தில்கூடத் தம் ஆசிரியரின் பெயரைக் குறிப்பிடவில்லை. தவிர்க்கவே முடியாமல் ஒரு நிகழ்வில் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்று ஆசிரியர் பெயரைக் குறிப்பிட்டு, அடிக்குறிப்பாக “ஆசிரியப்பிரானை இவ்வாறு பெயர் குறித்தெழுத அஞ்சுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இஃது அவர் தனது ஆசிரியர் மீது கொண்டிருந்த கரைகாணாக் காதலால் கசிந்துருகும் தன்மையைக் காட்டுகிறது.

ஒரு சமயம், பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், உ.வே.சா. எழுதிய ஒரு நூலைப் பெறவேண்டி ஐயரை அணுகினார். அப்போது ஐயர் தம்மிடம் இரண்டு படிகளே உள்ளன என்றும் அவை இரண்டுமே அந்நூலை மறுபடியும் பதிப்பிக்கத் தேவைப்படுகின்றன என்றும் கூறிவிட்டார். தெ.பொ.மீ. ஏமாற்றத்தோடு திரும்ப, ஐயர் அவரின் பெயரைக் கேட்க, மீனாட்சிசுந்தரம் என்று தெ.பொ.மீ. கூற, ஐயர் “என் குருநாதர் பெயரை வைத்திருக்கிறீர்… சற்று பொறும்’ என்று கூறிவிட்டு அந்நூலின் ஒரு படியை எடுத்துவந்து அவருக்குக் கொடுத்தார். இந்நிகழ்வை “சேக்கிழார் அடிப்பொடி’ தி.ந. இராமச்சந்திரன் என் தந்தையாரிடம் குறிப்பிட, அதை என் தந்தையார் ஆசிரியர் நாள் விழா மேடைகளில் தவறாது குறிப்பிட்டுவந்தார்.

மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் பயின்று, கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர் சி. தியாகராச செட்டியார். இவரின் உதவியால் உ.வே.சா. கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணி ஏற்றார். அன்றிலிருந்து அவருக்கு பொருட்கவலையற்ற வாழ்க்கை உருவானது. நன்றி மறவாத உ.வே.சா. தம் இல்லத்துக்குத் “தியாகராசர் விலாசம் ‘ எனப் பெயரிட்டார்.

உ.வே.சா., பத்துப்பாட்டு, எட்டுத்தொகையில் ஐந்து நூல்கள், சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய பழந்தமிழ் நூல்களையும் பல்வகை சிற்றிலக்கியங்களையும் பதிப்பித்தார். தாம் பதிப்பித்த ஒவ்வொரு நூலிலும் தம் புலமை மாட்சியை முன்னுரையில் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளார்.

பத்துப்பாட்டு வரிசையில் குறிஞ்சிப்பாட்டு நூலில் காணும் 99 மலர்கள் குறித்து வரும் வரிகளில் மூன்று தொடர்கள் ஏட்டில் காணாது உ.வே.சா. பெரிதும் இடர்ப்பட்டார். அவ்வரிகள் இடம்பெற்ற ஏடு கிடைக்காதா என்று பல ஊர்களிலும் தேடியலைந்தார். முடிவில் தருமபுர ஆதீனத்தில் அதனைக் கண்டுபிடித்தார். ஏடு கண்ட பின்னர்தான் குறிஞ்சிப்பாட்டின் 99 மலர்கள் வரிசை நிறைவுபெற்றது.

புறநானூற்றுக்கு பழைய உரையைக் கண்டு வெளியிட்ட உ.வே.சா.வின் பெரும்புலமை வியத்தற்குரியது. புறநானூற்றில் பொதிந்த பொருள்நயத்தை 57 வரிகளில் அடுக்கிக்காட்டியதற்கு நிகரில்லை. குறுந்தொகைக்கு நூறு பக்கத்தில் ஐயர் ஆராய்ச்சி முன்னுரை எழுதியிருப்பது அப்பதிப்பிற்கு அணிகலனாகத் திகழ்கிறது.

ஐயர் பதிப்பு நூல்களில் காணப்பெறும் முகவுரை, மூலப்படிகளின் நிலை, சொற்பொருள் விளக்கம், மேற்கோள் விளக்கம், சொற்பொருள் விவரம், அரும்பொருள் அகராதி, கிடைத்த படிகளின் நிரல்முறை, அச்சிட உதவியோர் விவரம் இவையெல்லாம், ஐயர் பதிப்பு ஆய்வுப்பதிப்போடு அறிவு ததும்பும் பதிப்புமாகும்.

உ.வே.சா. சிலப்பதிகாரத்தை 1889-ஆம் ஆண்டு வெளியிட்டார். அவ்வாறே மணிமேகலையை 1898-இல் வெளியிட்டார். இவர் சைவ சமயச் சார்புடையவர் எனினும், சமண நூலான சீவகசிந்தாமணியையும், பெüத்த நூலான மணிமேகலையையும் பதிப்பித்தார். அவற்றைச் செம்மையாகப் பதிப்பிக்க, அந்நூல்களில் இடம்பெற்றுள்ள சமய நுண்கருத்துகளை அறிந்தோரைத் தேடி வினவி ஆழமாக உணர்ந்து தேர்ந்தார்.

புராணம், பரணி, அந்தாதி, உலா, கோவை, தூது முதலான இலக்கிய நூல்களையும் இலக்கண நூல்களையும் பதிப்பித்தார் உ.வே.சா. 1935-ஆம் ஆண்டு, டாக்டர் உ.வே. சா.வுக்கு எண்பது வயது நிறைவுற்றது. அதனால் அவரின் சதாபிஷேக விழா, சென்னைப் பல்கலைக்கழக மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. விழாவிற்குத் தலைமை வகித்தவர் சர் முகமது உஸ்மான் என்ற இசுலாமிய பெருந்தகையாவர்.

தன் இளமைக்காலம் தொட்டே, ஜாதி, மத, இன பேதங்களைக் கடந்து வாழ்ந்தவர் ஐயர். அவருடைய ஒரே ஜாதி, ஒரே மதம், ஒரே இனம் தமிழ்தான். அந்த விழாவில் தான், எழுத்தாளர் “கல்கி’ கிருஷ்ணமூர்த்தி, “தமிழ்த் தாத்தா’ என, உ.வே. சாமிநாத ஐயரை அழைத்தார். “தமிழுக்குப் பாட்டியாக ஒüவையார் இருப்பது போல், தமிழுக்குத் தாத்தா உ.வே.சா. இருக்கிறார்’ என்றார்.

உ.வே.சா. குறுந்தொகைக்கு உரையெழுதிய பொழுது அவருக்கு வயது எண்பத்திரண்டு. 1878-ஆம் ஆண்டில் தொடங்கிய அவரின் இலக்கியப் பணி 1942 வரை வளர்ந்தது.

டாக்டர் உ.வே.சா. அவர்கள் எந்த நிலையிலும் தம் உள்ளம் உருகி எண்ணித் துதிக்கும் பாடல் வரிகள் “தமிழ்விடு தூது’ நூலில் இடம்பெற்றுள்ள “இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்’ என்ற வரிகளாகும். அவர் தமது தளர்ந்த முதுமையிலும் மேடையில் மெல்ல எழுந்து நின்று, இவ்வரிகளைப் பாடிவிட்டே உரையாற்றத் தொடங்குவார் என்பர்.

இவ்வரிகளைப் பாடிக்கொண்டே இருந்தது மட்டுமல்ல, இதன் பொருளையே தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு இறுதி மூச்சு வரை வாழ்ந்தார் உ.வே.சா. அண்ணல் காந்தியடிகளும் வங்கக் கவியரசர் தாகூரும் உ.வே.சா.வின் திறனைக் கண்டு வியந்து, அகத்தியனே இவரெனப் போற்றிப் பாராட்டினர். ஒல்லும் வகையெல்லாம் தமிழுக்கு ஓயாது உழைத்த தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதர், 28.4.1942-இல் தனது எண்பத்தேழாம் அகவையில் திருக்கழுக்குன்றத்தில் இவ்வுலக வாழ்வினின்றும் ஓய்வு பெற்றார்.

உ.வே.சா.வையும் தமிழையும் பிரித்துப் பார்ப்பதென்பது இயலாது.

இன்று (பிப்.19)

டாக்டர் உ.வே.சா.பிறந்தநாள்.

கட்டுரையாளர்:ஔவை அருள்

இயக்குநர்,

தமிழ் வளர்ச்சித் துறை

dinamani_2024-06_fcfe4864-4918-4c8f-b173-86956d72a947_20231126073L

படுகுழியில் பல்கலைக்கழகங்கள்

ஔவை அருள்

ஆங்கில (அலோபதி ) மருத்துவ முறை மிகவும் வளர்ந்தது என்பதாகப் பலரும் கருதுகின்றனர். உண்மையில், 300 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கில மருத்துவ முறை இல்லை; மிக வயதான சிலர் கூறும் பொருள்களை மருந்து என அந்தக் காலத்தில் உண்டு வந்தனர். இதை மேலை நாடுகளில் பழைய முறை என்று கூறினர்.

1806 – இல் ஹனிமன் என்பவர் ஹோமியோபதி மருத்துவ முறையைக் கண்டுபிடித்தார். பின்னர்தான் பழைய மருத்துவமுறைக்கு அலோபதி எனப் பெயர் வந்தது. ஆனால், தமிழக சித்த மருத்துவம் ஈராயிரம் ஆண்டுகள் முன்னரே சிறந்து விளங்கியது.

சங்க காலத்தில் (கிமு 1500 – 100) மருத்துவன் தாமோதரனார் முதலிய பெயர்களும், மருத்துவ முறைக ளும் இருந்துள்ளன. 2,500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் மருந்தையும், மருந்துப் பொருள்களையும் பயன்படுத்துவதில் வளர்ச்சியடைந்த நிலையில் இருந்தனர்.

சிந்துவெளி அகழாய்வில் கிடைத்துள்ள பொருள்களில் வளைந்த சட்டி (வாணலி), கரண்டி, சட்டுவம், கூரிய வெட்டுக் கருவி ஆகியவை கிடைத்துள்ளன. அக்காலத்திலேயே அறுவை மருத்துவமும் செய்துள்ளனர். அதற்குச் செம்பைப் பயன்படுத்தினால் பக்கவிளைவுகள் ஏற்படாது என்பதையும் தெரிந்துவைத்திருந்தனர்.

போர்க் காலங்களில் வீரர்களுக்கு ஏற்படுகிற பெரிய காயங்கள், வெட்டுகள், புண்கள் ஆகியவற்றை மருந்தால் ஆற்றுவது கடினம் என்பதால், அறுவை மருத்துவர்களால் அந்தப் புண்கள் தைக்கப்பட்டன. அதன் பின்னரே மருந்திட்டுள்ளனர்.

“மீன்தேர் கொட்பின் பனிக்கயம் மூழ்கிச்

சிரல் பெயர்ந் தன்ன நெடுவள் ளூசி

நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்’

என்ற பதிற்றுப்பத்து (5.2) பாடல் இதற்குச் சான்றாகும்.

புண் ஆறிய பின் வடு தோன்றாமல் தோலின் நிறம் பழைய நிலையை அடைய அத்திப்பால் பயன்படும் எனப் புறநானூறு தெரிவிக்கிறது. “வடுவின்றி வடிந்த யாக்கையான் ‘ என்று பழைய நிலைக்குத் தோல் நிறமும் உடலமைப்பும் திரும்பியதைக் கூறும்.

உடலில் கட்டிகள் தோன்றினால், அறுத்து அதில் உள்ள கெட்ட ரத்தத்தை நீக்கி, தைக்கும் முறை இருந்ததைக் கம்பர் உவமையாகப் பாடியுள்ளார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மருத்துவமனையும், மருத்துவக் கல்லூரியும் கோயில்களைச் சார்ந்து இருந்தன. ராஜராஜ சோழனின் தமக்கையார் குந்தவைப் பிராட்டியார் தஞ்சைக் கோயிலைச் சார்ந்து சுந்தர சோழன் ஆதுரகம் (மருத்துவமனை) எனத் தம் தந்தையார் பெயரில் அமைத்திருந்தார்.

காஞ்சிபுரம் அருகே உள்ள திருமுக்கூடலில் திரிமூர்த்திகள் கோயிலில் கி.பி.1063-இல் வீர ராஜேந்திர சோழன் காலத்தில் மருத்துவமனையும் கல்லூரியும் இருந்தன. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்திருக்கிறார்கள். இங்கு படிப்பவர்களுக்கும், சொல்லித் தருபவர்களுக்கும் நெல்லும், பொருளும் இலவசமாகத் தரப்பட்டன. 15 படுக்கை வசதிகள், ஒரு பொது மருத்துவர், ஓர் அறுவை சிகிச்சை மருத்துவர், இவர்களுக்கு உதவ இரு பெண் செவிலியர், மூலிகை பறித்துக் காய்ச்ச பணியாளர்கள் இருந்தனர். அருகிலேயே மூலிகைப் பண்ணை இருந்தது; என்ன நோய்க்கு என்ன மருந்து என இக்கோயிலின் கல்வெட்டில் விரிவாக உள்ளது.

தமிழ் மருத்துவ நூலான “அகத்தியர் நயனவிதி’ அறுவை சிகிச்சை செய்யும் 26 கருவிகள் (சத்திர ஆயுதங்கள்) பற்றி குறிப்பிடுகிறது.

தஞ்சைப் பெரிய கோயிலைச் சார்ந்துள்ள கலைமகள் பண்டாரத்தில் (சரசுவதி மகால்) பழைய மருத்துவ ஏட்டுச்சுவடிகள் உள்ளன. கண் மருத்துவம் பற்றிய குறிப்புகளுடன், கண்நோய் உற்ற நோயரின் கண்ணையும் சிறந்த ஓவியரான மன்னர் சரபோஜியே படமாக வரைந்துள்ளார்.

நின்ற நிலையில் மகப்பேறு எளிமையாக நிகழும் என அந்தக் காலத்தில் உணர்ந்திருந்தனர். இது குறித்த புடைப்புச் சிற்பம் வேலூர் அருகில் வானம்பாடி கோயிலில் செதுக்கப்பட்டுள்ளது. தஞ்சைப் பெரிய கோயிலில் இது குறித்த ஓவியம் உள்ளது.

அனுமன் மூலிகை தேடி வந்ததாகக் கூறப்படும் பர்வத மலை இக்காலத்தும் திருவண்ணாமலை அருகில் உள்ளது. சவ்வாது மலை, கொல்லிமலை முதலியன இக்காலத்திலும் மூலிகைகள் நிறைந்தவையாக இருக்கின்றன.

தாயுமானவர் என்ற இறைவன் புராணக் கதையில் மருத்துவச்சி குறித்து கூறப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் பெரும்பாலும் அவர்கள்தான் மகப்பேறு பார்த்தனர்; பொது மருத்துவத்துக்கு பரம்பரையாக மருத்துவத்தை அறிந்த மருத்துவர்கள் ஊர்தோறும் இருந்தனர்.

சீனாவில் மக்கள் பழைய மருத்துவம் 50 சதவீதம், புதிய மேலை மருத்துவம் 50 சதவீதம் என ஏற்றுள்ளனர். நம்முடைய ஓகம் (யோகாசனம்), மூச்சுப் பயிற்சி ஆகியவற்றை அவர்கள் பின்பற்றுகின்றனர். ஆங்கில மருத்துவராக இருந்து ஹோமியோபதிக்கு மாறியவர் நாஷ் என்பவர். அதேபோல சித்த மருத்துவத்துக்கு மாறி கூட்டு மருத்துவம் பரப்பியவர் மருத்துவர் செ.நெ.தெய்வநாயகம் ஆவார்.

Capture

காண்போம். கற்போம்..

தமிழ்நாடு அரசின்
தமிழ் வளர்ச்சித்துறை பெருமையுடன் வழங்கும்
திருக்குறள் வினாடி வினாப் போட்டி

பகுதி – 1

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் மருத்துவர் சங்கர சரவணன் நெறியாளுகையில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டி நிகழ்ச்சி 7.5.25 புதன்கிழமை யன்று மாலை 4:30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டதை கண்டு மகிழ்வோம்.

பகுதி – 2

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் மருத்துவர் சங்கர சரவணன் நெறியாளுகையில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டி நிகழ்ச்சி 8.5.25 வியாழக்கிழமையன்று மாலை 4:30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டதை கண்டு மகிழ்வோம்.

WhatsApp Image 2025-05-22 at 9.55.33 AM

நெஞ்சையள்ளும் கொள்ளை நீரால் கோடையில் மகிழ்ச்சி

கன்னியாகுமரியிலுள்ள ஐம்பது அடி உயரமுள்ள பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான மிகப்பெரும் பழமையான திற்பரப்பு கோதையாற்று நீருவியில் குளித்த புத்துணர்ச்சி, மறுமலர்ச்சி இணைந்து சனிக்கிழமை (17.5.25) அந்தி மயங்கும் மாலையில் கிடைக்கப்பெற்ற மகிழ்வான பொழுதில்

Capture

உலகத்தமிழ் இதழ் – 285

அருள்கருதி அன்புடையராதல்
எனத் தொடங்கும் குறட்பா இருநூற்(று) எண்பத்(து) ஐந்து;

பொருள்மிகு கவின் கட்டுரைகளை வாரி வழங்கும் உலகத் தமிழிதழ்
இருநூற்(று) எண்பத்(து) ஐந்து.