POST: 2020-05-07T10:07:08+05:30

உரைவேந்தரைப் புகழ்ந்த
பாவேந்தர்

அவ்வை துரைசாமிப் பிள்ளை அருந்தமிழின்
செவ்வை உரைசாமிப் பிள்ளையன்றோ – இவ்வை எக்களிக்கத் தந்தான் இருந்தமிழ் நூலுரைகள்
சிக்கலின்றித் தந்தான் தெளிந்து.

Avvai, the Lord of lords (Duraisamy) is
The Lord of exemplary commentaries
Of Ancient eminent Tamil literatures
With his boundless versatility and cultures
Provided explanations easily understandable
For the poetically knitted literatures tenable
Which are otherwise hard nuts to crack
And made the people enjoy and rock

புறத்தின் உரைகள் புலமைத் திறமை
வரலாறு பேசும் மகிழ – உறவாடும்
பாட்டின் குறிப்பெல்லாம் பண்பாட்டுச் சங்கத்தேன்
கூட்டில் விளையும் கொடை.

His unparalleled wisdom history hails with pleasure
Depicted in the commentaries for Puram, valour and values treasure
Hidden facts culled out as he interacts with each poem of vintage
Is the gift offered by cultural bee hive of Sangam age

நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன்
மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் – தோலுக்குள்
உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன்
அள்ளக் குறையாத ஆறு.

As a Scholar of minuscule he showcases the books their worth
It is not superficial but irrefutable truth
Indefatigably labours to exact delicacies out of tough skinned jackfruit
Ever replenishing river unmindful of draining and stops not in its pursuit
இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து
வரவு செலவறியான் வாழ்வில் – உரமுடையான்
தன்கடன் தாய் நாட்டு மக்கட் குழைப்பதிலே
முன்கடன் என்றுரைக்கும் ஏறு

As engrossed in the commitment for Tamil, day or night doesn’t count
His workaholic mind never minds what wealth the labour has brought
Indomitable as he strives for the welfare of his people and nation
Unconquerable hero as he considers it his nature’s notion
பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை பாங்கெண்ணிக்
கொள்முதல் செய்யும் கொடைமழை – வெள்ளத்தே பாயாத ஊருண்டா? உண்டா உரைவேந்தை
வாயார வாழ்த்தாத வாய்!”

His benevolence of sweetening the hard core literary style
Is showered on disciples of rudimentary and scholarly minding
their mettle
No domicile shuns the flood of honey
The lord of commentaries is lauded by too many

———————————-

English version by
Mr Chinnathambi Murukesan
Best Translator Awardee
Government of Tamilnadu

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *