இனிவரும் வயதுகளும் இவருக்கு நல கோப்பைகளை நாளும் நிரப்பிக் கொடுத்துக் கொண்டாடட்டும். வாழ்க பெருமகன் ராஜாஜி என்று நாமும் வாழ்த்துச் சரம் தொடுப்போம் இனிய 81 ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்து ஐயா
உரைவேந்தர் ஔவை துரைசாமிப்பிள்ளை43வது நினைவு நாள்
இந்த நினைவு நாளை (3.4.2025) வியாழக்கிழமை என் சித்தப்பா டாக்டர் ஒளவை மெய்கண்டார் மதுரை மாநகரில் 1000 பேருக்கு உணவளிக்கும் வகையில் அமைத்திருக்கிறார். கம்ப இராமாயணத்தில் குகனுக்கு இலக்குவனின் தாயை அறிமுகப்படுத்தும் “உளன் எனப் பிரியா தான் ஒரு தம்பி” என்ற தொடர் தான் என்னை உருக வைக்கிறது என்று அப்பா அடிக்கடி சொல்லக் கேட்டு இருக்கிறேன். ஈடில்லா பேராசிரியர்களான திருமதி.நிர்மலா மோகன்(28.2.2018), நினைவில் வாழும் பேராசிரியர் கு சிவமணி (25.2.2020) மாநிலக்கல்லூரி முதல்வர் பேராசிரியர் இ ...
மகளிர் தின வாழ்த்துகள்!
பெண்ணின் பெருமை பேசிமுடியாது !பெருமையால் உலகை மகிழ்வாக்கிய பெண்மணிகளே !உலகை உருவாக்கிய பொன்மணிகளே !எத்தனைக் கோலங்கள் !மகளாய், மனைவியாய், தாயாய், மாமியாய், பாட்டியாய் மனங்கவரும் தெய்வமாய்அத்தனை நிலைகளிலும்எங்கள் நெஞ்சைக் கரைத்ததாரகை நீங்கள்அழுதபோது ஆறுதல் சொல்வீர்கள்.தொழுதபடியே எத்தனைப் பணிகளைதுறைதோறும் அழகு செய்தீர்கள்மாதர்களே நீங்கள் மாணிக்கங்கள்கும்பிட்டுப் புகழ்வதைத் தவிரஎன்ன செய்ய முடியும்.நாங்கள் கூழாங்கற்கள்நீங்களோவைரக் கற்கள், வான நிலாக்கள், வற்றாத அருவிகள்மகளிர் பெருமையை எழுதஎன் விர ...
இன்று என் அண்ணன் கண்ணன் அறுபதாம் அகவை பிறந்தநாள் வாழ்த்து
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி. தேனினும் இனிய தமிழால் வளர்த்துநானிலம் மகிழ நல்கியமூத்த மகன்முத்து மகன்மூப்பியல் மருத்துவர்எங்கள் இனிய அண்ணன்கண்ணன்காப்பென வந்துகாதல் கொண்டுகைப்பிடித்த துணைநலம்மருத்துவர் சாந்தி கண்ணன்ஆகியோர்மணி விழா31.01.2025 வியாழக்கிழமையன்று காலை 9.00 முதல் 12.00 மணி வரை திருக்கடவூர் அருள்மிகு அபிராமி அம்மை உடனமர் அமுதகடேசர் ஆலயத்தில்மாதொருபாகருக்குவாழையடி வாழையெனத் திகழும்வேள்வி நெறி வித்தகர்திரு டி எஸ் வி சுந்தரமூர்த்தி குருக்கள் தலைமையில்நன்னிகழ்வு இனிதே நடைபெற்றத ...
முத்தமிழ் முழங்குக!
தமிழ்ப் புத்தாண்டும்,தைப்பொங்கல் திருநாளும்,தனிப்பெரும் ஐயன் திருவள்ளுவர் பெருநாளும் ஒன்றாகச் சேர்ந்த உயரிய நன்னாள்உலகை மகிழ்விக்குமாக! வாழ்த்துகள் ஒளவை குடும்பம்
வாழ்த்தும் வணக்கமும்
மேல்சித்தாமூர்,ஜினகஞ்சி சமண மடத்தின் மடாதிபதி, சங்கீதபூஷணம்.Dr. ஸ்வஸ்திஸ்ரீ இலட்சுமிசேன பட்டாரகப் பட்டாச்சார்ய வர்ய ஸ்வாமிகள் 5.9.24 வியாழக்கிழமையன்று அண்ணா நகர் தாரகை இல்லத்திற்கு வருகை புரிந்து பெற்றோர்களைக் குறித்து நீண்ட நேரம் பேசி வாழ்த்தி விடைபெற்றார்.
வற்றாத வரலாற்றுக் களஞ்சியம் வாழி!
94 அகவை நிறைந்த பத்மஸ்ரீ விருது பெற்ற அறிஞர்,தில்லிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், எழுத்தாளர், திறனாய்வாளர், சாகித்திய அகாதமி இலக்கிய விருதினை குருதிப்புனல் புதினத்திற்காக 1977 ஆம் ஆண்டிலேயே பெற்றதோடுகே கே பிர்லா அறக்கட்டளை வாயிலாக இராமானுஜர் நாடகத்திற்கானசரசுவதி சம்மான் விருதினை 1999 ஆம் ஆண்டில் பெற்ற பெருந்தகையாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்களை 8.9.24 ஞாயிற்றுக்கிழமையன்று நேரில் சந்தித்து நீண்ட நேரம் பேசி மகிழ்ந்தேன். அந்நாள் அவர் மகள் திருமதி பத்மாவின் பிறந்தநாள் என ...
அன்பின் வழியது உயிர்நிலை
இனிய நண்பர் வழக்கறிஞர் சதீஷ் திருமதி இரஞ்சனி இணையரின் ஒரே மகன் அறிவுத்திலகம் சஸ்வத்குமார்பண்புத்திலகம் அனாகா திருமண உறுதி நிகழ்வில் (8.9.24) ஞாயிற்றுக்கிழமை காலை திருவான்மியூரில் அமைந்துள்ள துவாரகா வள மண்டபத்தில் கலந்து கொண்டு வாழ்த்தி மகிழ்ந்தேன். அன்றைய நிகழ்ச்சியில் கவிஞர் சதீஷின் தாயார் திருமதி வசந்தா சீனிவாசன் என்னைக் கண்டதும் பரிவு காட்டி அன்பாக வாழ்த்திய தருணம் நெகிழ்வாக அமைந்தது.
மழலை மலருக்குப்பண் பாடுவோம் !
பட்டிமன்ற பேச்சாளர் திருமதிஅனுகிரகா ஆதி பகவன், கவிஞர் தரன் இணையரின் மழலைச் செல்வம் ஆதினி பொற்பிறையின் முதலாண்டு பிறந்தநாள் விழாவில்(17.8.24) சனிக்கிழமையன்று மாலையில் அப்பாவின் செயலாளர்பொன்னேரி பிரதாப் மற்றும் ஆட்சி மொழிக் காவலர்கீ இராமலிங்கனாரின் பெயரன் கஜேந்திர பாபுவுடன் மழலைச் செல்வத்தை நேரில் கண்டு மகிழ்ந்து வாழ்த்தினேன்.
பெருமிதம் நாளும் வெல்க!
எந்தையார் ஒளவை நடராசன் தன் வாழ்நாள் எல்லாம் போற்றிய ஆசிரியர் திலகத்தின் 92ஆம் பிறந்த நாள் (2.12.2024) அன்று ஆசிரியரின் அடையாறு இல்லத்திற்கு நேரில் சென்று சங்கவிலக்கிய எழிலேடு வழங்கி சால்வை சூடி மகிழ்ந்தேன். பிறந்த நாள் தொட்டே பகுத்தறிவுப் பிடிப்போடுதந்தை பெரியார்ஆரத்தழுவிய அருமந்த மகனாக வளர்ந்து நாளும் உயர்ந்துதன்மான இயக்கத்தையும் ,திராவிடர் கழகத்தையும்கண் போலக்காத்து வருபவர்தலைவர் வீரமணி . அல்லும் பகலும் அயராமல்இனமான எழுச்சி உரைகளையும்நிகரில்லாக் கல்விப் பணிகளையும் ஆற்ற ...










