POST: 2011-06-06T11:37:40+05:30

தொல்காப்பியர் காட்டும் பொருளதிகாரமும் ,திருக்குறள் காட்டும் பொருளதிகாரமும் அமைப்பில் வேறுபடுகின்றனவே?

POST: 2011-06-05T12:50:25+05:30

காதலின் நிலைகள் 5ஆக கருதுவது சிந்திக்கத்தக்கது. கூடுதல்,பிரிதல் என்ற இரண்டு போதுமே.கூடுதலுக்குள் இருத்தலும் அடங்கும் . பிரிவுக்குள்ளே ஊடலும்,இறங்களும் அமையுமே

POST: 2011-06-05T12:48:50+05:30

தொல்காப்பியம் என்று இருந்தால் அன் ஈறு தான் இருந்திருக்க வேண்டும் என்று கூறி தொல்காப்பியன் என்றே பெயரையே நூலுக்கு உரியது என்ற கருத்து நுட்பமுடையது. அறிஞர் மூவ கூட திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்று எழுதியதைக்காணலாம்.

POST: 2011-06-04T22:02:16+05:30

காலை,மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின் காலைப்பிடித்துக் கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே! -----நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்

POST: 2011-06-04T16:34:18+05:30

தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் மூவேந்தர் இருந்தனர். வண் புகழ் மூவர்,தன் பொழில் வரைப்பு என்பதனால் தொல்காப்பியர் காட்டும் எல்லைக்கோடு ஆராயத்தக்கது?

POST: 2011-06-04T16:32:58+05:30

ஆறாம் அறிவு என்பது மன அறிவு என்கிறது தொல்காப்பியம்? எதிர்காணும் முன்னறிவு என்றல்லவா ஆங்கிலம் சொல்கிறது(Sixth sense-A cinema)

POST: 2011-06-03T17:02:19+05:30

I am not ashamed to say that I count good eating as one of the chief joys of this transitory life.I could join very heartily in peacocks chorus: How can a man ,in his life of a span,do anything better than dine....

POST: 2011-06-03T16:59:23+05:30

நாவலர் சோமசுந்தர பாரதியார் சுட்டிகாட்டிய நாள் வரை அமரனை இறந்தவன் என்றே கருதினர்.அமரன் என்றால் போராளி அல்லவா பொருள்!

POST: 2011-06-03T16:58:32+05:30

வாரணனார் உடன் இருந்தும் தம் தொல்காப்பியத்தில் நாவலர் பாரதியார் குறிப்பினை சுட்டிக்காட்டவில்லையே?