பாருக்குள்ளே நல்ல நாடு?
தென்னாப்பரிக்கா ஜோஹென்ஸ்பர்கில் என் தம்பி கடந்த இருபது ஆண்டுகளாக அங்கே உள்ளான்.மடீபா என போற்றப்படும் மாமணி நெல்சன் மண்டேலாவின் மறைவு உலகத்தையே கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது என்றேன்.ஆமாம்! என்றான் பெருமூச்சுடன்.
அலுவலகமோ,பள்ளிகளோ,அன்று நடந்த கிரிக்கெட் ஆட்டப்போட்டியோ எவையும் நிற்கவில்லை!கலங்கிய மனத்தோடு துக்கத்தைத் தேக்கிக்கொண்டு கடமையை செய்துகொண்டே இருக்கிறோம்.
எங்கள் தலைவருக்கு தலைவலி எப்படி கடைகளைத்திறக்கலாம்,சாலைகளில் மறியல் செய்வோம் என்றெல்லாம் அந்த நாட்டில் சொல்வதில்லை.
பாருக்குள்ளே நல்ல நாடு எந்த நாடு என்று திருப்பிக்கேட்டான்?

Add a Comment