நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்பது திருக்குறள்.நேற்றைய நாள் ஒரு திருமண வரவேற்பில் இருந்தேன்,எண்ணி 24 மணிநேரம் கழியவில்லை,தலைமைச்செயலகத்தில் சோர்வில்லாத சுடர்
என்று நான் போற்றிய திருமதி ராஜம் ஸ்ரீதர் மாரடைப்பால் இன்று மறைந்தார்.நெருநல் உளன் ஒருவன் இன்று இலன் என்று சொல்லியிருக்கலாம்.உயிர் சென்ற கணமே உயர்திணை அஃறிணையாக மாறுகிறது.மனித உயிர் சென்ற மறுகணமே உயர்திணை அஃறிணையாயிற்றோ,இது என்ன இலக்கணம்?

Add a Comment