திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் எந்தவொரு குறிப்பிட்ட சமயம் சார்ந்த நூலாக இல்லை. ஏனெனில், திருவள்ளுவர் தான் வாழ்ந்த காலத்தில் இருந்த ஒரு இனத்தையோ, சாதியையோ, சமயத்தையோ, அரசையோ, ஆளும் வர்க்கத்தையோ அவர் இயற்றிய திருக்குறளில் எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால், திருவள்ளுவரைத் தங்கள் சமயத்தவர் என்றும், திருக்குறளைத் தங்கள் சமயம் சார்ந்த நூலென்றும் சில குறிப்புகளைக் காண்பித்துத் தவறான கருத்துக்களைச் சிலர் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.

Add a Comment