கண்டுபிடிப்புக்களும்,கருவிகளும் கணினி,கைபேசி,காணொளி நிகழ்வுகள் என்று அறிவியிற் புதுமைகள் அலை அலையாக வளர்கின்றன.இது காலத்தின் கோலம்.
இந்தக் கோலத்தால் சிற்றூர்கள் நகர் மயமாதல்,பழக்க வழக்கங்கள்,பண்பாட்டுக்கூறுகள்,நம்பிக்கைக்கருத்துக்கள்,உணவு,உடை,உறையுள்,கல்வி,கருத்து மாற்றங்கள் ஒரு சீர்குலைவை உண்டாக்கும்.
இந்த நிலையில் தமிழ் மரபு,தமிழ்க்கல்வி பெற்றோர்களால் கைவிடப்படுவதை நாம் கண்டு வருகிறோம்.இந்நிலையில் உங்கள் பிள்ளைகள் ஏன் தமிழ்ப் பயிற்று மொழியில் சேரவில்லை என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வது என்று ஒரு நேர்காணலில் ஓர் அறிவியல் பேராசிரியர் சொல்லியிருக்கிறார்.இந்த நிலை இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் காணப்படுகின்றன

Add a Comment