POST: 2014-02-25T08:13:07+05:30

ஆப்பிரிக்க நாட்டின் பழமொழியொன்று(When an Old man dies,its a library burning!) படித்த போது அங்கே பரவியிருந்த பண்பாட்டின் உயர்வு தெரிகிறது.

மூத்து தளர்ந்த வயதில் ஒருவர் இறந்து போனால் அதுவரை அவர் அறிந்த அறிவு,கற்றவை,பெற்றவை இறந்து போவது ஒரு நூலகம் பற்றி எரிவது போல என்ற அந்த பழமொழி உவமை காட்டுகிறது.

மரைமலையடிகளார் மறைந்த நாளில் அந்தோ! ஒரு நூலகம் எரிந்து சாம்பலாகிறதே! என்று அறிஞர் மூ வ கூறியதாக நினைவு

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *