அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-15
இக்கருத்து, அலெக்ஸாண்டர் போப் தன்னுடைய ‘‘மனிதனைப் பற்றிய கட்டுரை’’யில் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்களுக்கு முற்றிலும் முரணாக உள்ளது. அவர் வரைந்தார், ‘‘உங்களை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்! இறையாற்றல் ஆய்ந்து தெரிவிக்க வேண்டும் என்று எண்ணாதீர்! மனித இனத்தைப் பற்றிய முறையான ஆய்வு மனிதன் மட்டிலுமே!’’ பேரியக்க மண்டலத்தை இறையாற்றல் படைத்ததனால், மனிதன் அதில் தனது பங்கினைப் புரிந்து கொள்வதன் வாயிலாக படைப்பினுடைய ஒட்டுமொத்த நோக்கத்தையே புரிந்து கொள்வான் என்பது போப்பினுடைய திண்ணிய எண்ணம்.

Add a Comment