===============================================
பாரதியார் 138ஆம் பிறந்தநாள் பெருவிழாவில் பாரதி இலக்கியக் கழகத்தில் வந்த அனைவருக்கும் விருந்து நூலாக வழங்கிய “பாரதி 366”
===============================================
கவிப்பேரரசின் கரும்பு வரிகள்
=============================
அறிவுப் பரம்பரையின் அருள்
*****************************************
மனித இனத் தொடர்ச்சியில் மரபணுக்களின் வினைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டு மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் முனைவர் ந.அருள் .தமிழின் நெடும்பரம்பரையின் நீட்சி அவர்.
உரைவேந்தர் என்று தமிழுலகம் உச்சிமேற்கொண்டு உவந்து கொண்டாடும் அறிஞர் பெருமகன் ஒளவை துரைசாமி அவர்களாவார் , முனைவர் ஒளவை அருள் அவர்களின் பாட்டுத் திறனறிந்த பாட்டனார் ஆவார்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தராகத் திகழ்ந்த தமிழாய்ந்த மேடைகளில் இணையில்லா வேந்தராகத் திகழ்கிற அறிஞர் திருமகன் முனைவர் ஒளவை நடராசன் அவர்கள் அருள் அவர்களின் தந்தையார் ஆவார்.
பாட்டனாரின் மரபறிவும், தந்தையாரின் புத்தறிவும் கூடிப் பெற்ற திறமும் உரமும் வாய்க்கப்பெற்ற முனைவர் ந.அருள் அவர்கள் வினாவிடை வடிவில் எழுதியிருக்கும் இந்த பாரதியார் பனுவல் ஆய்வுலகத்தின் அணிகலனாகவும், அறிவுலகத்தின் படைக்கலனாகவும் திகழத்தக்கது.
விரிந்த எண்ணம் – பரந்த பார்வை – செறிந்த மொழி – சிறந்த வடிவம் என்பனவற்றால் உங்கள் வினா விடைத்தொகுப்பு உயர்ந்து விளங்குகிறது.
ஆட்சித்துறையில் தமிழ் வளர்க்கும் அருமைக்குரிய அருள் இன்று, தமிழ் உலகத்தின் அறிவடையாளங்களுள் ஒருவராக அறியப்படுகிறவர்.
இந்த நூல் அவரது மாட்சிக்குச் சாட்சி.
விளம்பரமே தேவையில்லை. இது ஏற்கெனவே தேன்கூடு;நான்வேறு ! சர்க்கரை தெளிக்கவேண்டுமா என்ன ?
வளர்பிறை மகனாகிய உங்கள் அறிவாற்றலைப் பாராட்டுகிறேன் .
தமிழ் நீளும்; நாளை உலகை ஆளும்
என்ற நம்பிக்கை பெறுகிறேன்.
வளர்பிறை வாழ்த்துக்கள்.
—– வைரமுத்து
சென்னை
26.1.2020
இந்தி மொழியாக்கம்
…………………………………..
ம.பொன்னையா பூபதி ராஜா,
பிரிவு அலுவலர்,
மொழிபெயர்ப்புத்துறை
कविप्पेररसु (कवि सम्राट) की अमृतवाणी
ज्ञान परम्परा के अरुल
मानव समाज की बढ़ती हुई श्रृंखला में, गुणसूत्रों के क्रीड़ात्मक उपलब्धी का ज्वलन्त उदाहरण
हैं] अनुवाद विभाग के निदेशक डॉ न. अरुल। तमिल की जो काफ़ी लंबी परंपरा है उसका विस्तार हैं
आप।
डॉ अव्वै अरुल के पितामह हैं, तमिल के श्रेष्ठ वेत्ता श्री अव्वै दुरैसामि, जिन्हें संपूर्ण तमिल
जगत, ‘उरैवेन्दर’, याने ‘व्याख्यान सम्राट’ के नाम से, शिरोधार्य करके सदैव सम्मानपूर्वक स्मरण करता
आ रहा है।
डॉ अरुल के जनक हैं डॉ अव्वै नटराजन, जो तमिल विश्वविद्यालय के भूतपूर्व उपकुलपति हैं
और अपने सारभरी गंभीर भाषणों से अपने को तमिल मंचों के अद्वितीय सम्राट साभित कर चुके हैं।
पितामह से अर्जित पारम्परिक ज्ञान और पिताजी से प्राप्त नव बोध आदि से सुपोषित डॉ
अरुल ने प्रश्नोत्तरी के रूप में महाकवि भारति के संबंध में जो ग्रंथ का श्रृजन किया है, वह न केवल
शोध जगत का आभूषण बन सकता है, बल्कि ज्ञान जगत का औज़ार भी बन सकता है।
आपके विस्तृत विचार, विशाल दृष्टि, समृद्ध भाषा और श्रेष्ट गठन शैली आदि आपके
प्रश्नोत्तरी को उच्च कोठी की रचना साभित करने में सक्षम हैं।
प्रशासन में तमिल को समृद्ध करनेवाले श्री अरुल, आज तमिल जगत के ज्ञानात्मक पहचानों
में एक माने जाते हैं।
आपकी महानता का सव्य साक्षी बनकर खड़ा है आपका यह ग्रंथ।
विज्ञापन ही क्यों, जो पहले ही मधुमक्खी का छत्ता हों उसमें शक्कर के छिड़काव की क्या
जरूरत है?
दिन ब दिन बढ़ती चन्द्रमा की तरह बढ़नेवाली आपकी बुद्धिमत्ता की मैं तारीफ़ करता हूँ।
मेरा विश्वास है कि तमिल आगे बढ़ेगी और कल संपूर्ण जगत का शासन करेगी।
शुभकामनाएँ।
—वैरमुत्तु
चेन्नै
26/01/2020

Add a Comment