POST: 2021-08-28T09:46:10+05:30

பெருந்தகைப் பேரொளி துரைமுருகன் !

பெருந்தகை துரைமுருகன் அவர்களை நான் மாணவப் பருவத்திலேயே கண்டு மகிழ்ந்திருக்கிறேன் .

பச்சையப்பர் கல்லூரியில் மேடைத் திலகமாக அனைத்துக் கல்லூரிப் போட்டிகளிலும் வென்று நின்றவர் .

சிவந்த மேனியும், சிரித்த முகமும் கொண்ட அவரை மாணவருலகம் பெரிதும் மதித்துப் போற்றியது .

கல்லூரிப் படிப்பை முடித்துக் கழகத்தின் கொள்கைச் சுடராக மிளிர்ந்தார் .

நண்பர் முரசொலி செல்வம் ,
மறைந்த வழக்கறிஞர் நல்லியண்ணன்

சூழ அவரைப் பலமுறை கண்டு பழகினேன் .

எவரிடமும் எள்ளளவும் பகை பாராட்டாத பரந்த மனம் , முத்தமிழ்க்கலைஞரின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தார் .

கலைஞரைப் போலவே அவர் கையெழுத்தும் அமைந்தது

.கட்சித்தலைவர்கள் எப்படிப் பேசுவார்கள் ,அவர்களைப் போலவே பேசிக்காட்டுவதைத் தலைவர் கலைஞர் கேட்டு நகைத்து மகிழ்ந்ததை இப்போது எண்ணிப் பார்க்கிறேன் .

ஒரு முறை காட்பாடி நான் சென்று போது என் மாமனார் வீட்டுக்குச் சென்று வாருங்கள் என்று பரிவோடு கூறினார் .

என் துணைவியாரோடு அங்கு விருந்துண்டதை நினைத்து உருகுகிறேன் .

அன்பில் கலந்த அருமைத் துணைவியார் – நாடாளுமன்ற உறுப்பினர் – பண்பும் பெருமையும் கொண்ட கதிர் ஆனந்த் , சீரிய குடும்பத்தின் ஒளிச்சுடர்களாக அமைந்துள்ளனர் .

திறமையைக்கண்டு போற்றும் அவர் செயலுக்கு ஒரு சான்று கூறுவதென்றால்

மறைந்த வார்தைச்சித்தர் வலம்புரி ஜானை வளர்த்ததோடு அந்த இளம் வயதிலேயே அவருக்கு மாநிலங்களின் மேலவை உறுப்பினராக வாய்ப்பைப் பெற்றுத் தந்தார் ,வேறொருவரும் செய்ய முடியாது .

கலைஞர் ஒரு சொல் மறுப்புக் கூறாது துரைமுருகன் அவர்களின் பேச்சைக் கேட்பார் .

பெருந்தகை துரைமுருகனைப் புரட்சித்தலைவர் தன் மக்களைப் போல் கருதினார் .

ஆனால் பெருந்தகையின் உயிர் முத்தமிழ்க்கலைஞர் உயிரோடும் – உணர்வோடும் ஒட்டியிருந்தன .

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முத்தமிழ்க்கலைஞர் ஆருயிர் இளவல் துரைமுருகனின் சட்டமன்றத்தில் ஐம்பது ஆண்டுகள் மக்கள் பணி செய்த பொன்விழாவை நெகிழ்ந்து பாராட்டியது – தமிழகமே மகிழ்ந்து பாராட்டுவதாகும் .

ஒப்பற்ற திலகமாக ஒளிவீசும் பெருந்தகை துரைமுருகன் பல்லாண்டு வாழ்க !

ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *