POST: 2024-05-23T10:07:59+05:30

செய்தி வெளியீடு எண்: 683

நாள்: 20.05.2024

2024ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை

அறிவிப்பு

தமிழ்நாடு அரசு அங்கீகாரத்துடன்,
சென்னை, தரமணியில் இயங்கும்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், குறைந்த கட்டணத்தில் நடத்தப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப்
படிப்பு

(Five Years Integrated P.G. M.A. Tamil)

தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழ்நாடு அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் முதுகலை பட்டப் படிப்பு (M.A. Tamil) மற்றும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்பு (Five Years Integrated Post Graduate M.A. Tamil) மற்றும் தமிழ் முனைவர் பட்ட வகுப்பு (Ph.D.) ஆகியன இந்நிறுவனத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப் பெற்று வருகின்றது.

2024-25 ஆம் கல்வியாண்டில் தற்போது ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்ட வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

மேற்கண்ட படிப்பில் பயில விரும்புவோர் சேர்க்கைத் தொடர்பான விதிமுறைகள்/தகவல்கள் மற்றும் விண்ணப்பத்தை

www.ulakaththamizh .in

என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து தெரிந்துக் கொள்ளலாம் அல்லது நேரில் பெற்றுக் கொள்ளலாம்

இருபாலருக்கெனத் தனித்தனியே கட்டணம் இல்லா தங்கும் விடுதி வசதி உள்ளன .

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரில் (அ) அஞ்சலில் இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகலுடன் இணைத்து

இயக்குநர் (கூ.பெட),
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி. சென்னை-600113 (தொலைபேசி 044-22542992) என்ற முகவரியில்

07.06.2024 வெள்ளிக்கிழமைக்குள் அளித்தல் வேண்டும்.

மேலும் தகவல்பெற மேற்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் அல்லது நிறுவன வலைத் தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் வளர்ச்சி இயக்குநர்

வெளியீடு:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை. சென்னை – 9

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *