தமிழ் கம்ப்யூட்டர்செப்டம்பர் 01 - 15, 2024,பக்கம் 11 - 12 சென்னை, அண்ணா நகர் கிழக்கு இரண்டாம் முதன்மைச் சாலைக்கு ஒளவை நடராசன் முதன்மைச் சாலை என பெயர்! இரண்டாம் முதன்மைச் சாலைக்கு ஒளவை நடராசன் முதன்மைச் சாலை என பெயர் சூட்டுவதற்கு தீர்மானம் இயற்றப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறில், உலகம்மாள்உரைவேந்தர் ஒளவை துரைசாமி ஆகியோருக்கு மகனாக 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 24 அன்று பிறந்த ஒளவை நடராசன் அவர்கள். தனது இளமைக் காலத்தில் திருப்பதி, அண்ணாமலை நகர் ஆகிய இடங ...
நாட்டுடைமை என்னும் அறிவுத் திருப்பணி!
அறிவு உலகப் பொது என்பார்கள். ஆனால், அறிஞர்கள் உலகப்பொதுவல்ல என்பது உலக நடைமுறை. ஓர் அறிஞரின் அறிவின் பேருழைப்பால் விளைகின்ற நற்கனிகளாம் நூற்செல்வங்கள். அவருக்குப் பின்னர் சிலர் கைகளில் மட்டும் சென்று தங்கிவிடாமல், நாட்டின் கடைக்கோடித் தமிழனுக்கும் சென்று சேர்க்கின்ற அரும்பணிக்குப் பெயரே நாட்டுடைமை என்பது. மறைந்த படைப்பாளிகளின் பதிப்புரிமை அவர்களுடைய குடும்பத்தினர், மரபு வழியினர், பதிப்பகத்தார் ஆகியோரின் நிலையான சொத்தாகவே நிலவி வருகிறது. அறிவென்பது பொதுவாயினும், மரபுரிமை ஒ ...
தாத்தா தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் அப்பாவும் கவி பாடிய அரியசெய்தித்துளி
மதுரை எழுத்தாளர் மன்றம் சார்பில் அன்றைய இராமநாதபுர மாவட்டம் (இன்றைய சிவகங்கை மாவட்டம்) திருப்புவனத்திற்கு அருகிலுள்ள மணலூரில் ஒரு தென்னந்தோப்பில் 'மண்' என்ற தலைப்பில் ஒரு கவியரங்கம் நடைபெற்றது. அந்தக் கவியரங்கத்திற்கு உரைவேந்தர் ஒளவை துரைசாமிப் பிள்ளைதலைமை தாங்கினார். கவியரங்கத்தில்புலவர் வேலவன்,ஔவை நடராசன்,கவிஞர் முத்துலிங்கம்திருப்பாச்சேத்தி கவியழகன் மற்றும் பலர் கவிதை பாடினோம். கவிஞர் முத்துலிங்கம்
உலகத்தமிழ் இதழ்-243
"அவரை ஆய்மலர் உதிரத், துவரின வாங்குதுளைத் துகிரின் ஈங்கை பூப்ப" எனத் தொடங்கும் அகநானூற்றுப் பாடல் எண் இருநூற்று நாற்பத்து மூன்று விவரம் ஆய்ந்து விழுப்பொருள் தேடும் விழுமிய படைப்புகள் வியனுலகுக்கு அளித்திடும் உலகத் தமிழிதழ் எண் இருநூற்று நாற்பத்து மூன்று 243 31072024 (1)-Download
காணக் கிடைக்காத அரிய கட்டுரை
உரைவேந்தரும் பாவேந்தரும் நெருங்கிய நட்பின் மேன்மை குறித்த அருமையான கட்டுரை உரைவேந்தர் ஔவை சு. துரைசாமி பிள்ளை பழுத்த சைவர்; ஆத்திகர். பாவேந்தர் பாரதிதாசன் பழுத்த சீர்திருத்தவாதி; நாத்திகர். என்றாலும் தமிழ் இந்தஇரு துருவங்களையும் இணைக்கும் பாலமாக இருந்து, இவர்கள் நட்பை வளர்த்தது. கொள்கை வேறுபாடு எப்போதும் இவர்கள் குறுக்கே நின்றதில்லை. இத்திருநீற்றுச் செல்வர் தம் உள்ளத்தில் பாவேந்தருக்காக ஒதுக்கியிருந்த இடத்தை நம் பார்வையில் படும்படி இக்கட்டுரையின் வாயிலாக உறவே வேந்தர் தன் எழுத்தால ...
மாற்றுக் குறையாத சீனப்பட்டினைத் தொலைத்து விட்டோமே!!
அரசின் பங்களிப்போடு, ஆர்வமுடைய தனியாரின் பங்களிப்பும் தவிர்க்க முடியாதென்ற தொலைநோக்குப் பார்வையோடு, அறிவியலும் தொழில் நுட்பமும் போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியான, 1997 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தனியார் மின் திட்டங்களை நிறுவுவதற்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன வாயிலாக உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்பட்டன… மனங்கவரும் மலேசிய நாட்டின் தமிழ்ப் பெருமக்கள், தொல்பழங்காலம் முதலே தாய்த்தமிழ் நாட்டின் அன்பினைப் பெற்ற சீனர்களுடன் இணைந்துத் தமிழ் நாட்டின் வ ...
காணக்கிடைக்காத கலை வண்ணக் கற்கோயில்
இந்தியத் தலைநகரிலுள்ள தில்லியில் மாபெரும் வளாகமாக கண்ணையும் எண்ணங்களையும் கவரும் வகையில் அக்ஷர்தம் என்ற வனப்பான பெரு மாளிகையினை 08.05.2024 புதன்கிழமை கண்டு மகிழ்ந்து வியந்த கவினார்ந்த கருவூலத்தை பெருநிதிச் செல்வத்தால் எழுப்பப்பட்டதை என் உள்ளத்து உணர்வின் நளினங்களையெல்லாம் வெண்தாழை மடலில் செம்பஞ்சுக் குழம்பால் குழைத்து எழுதுவதைப் போல முகநூலில் வரைவதை எண்ணி மகிழ்கிறேன். இந்திய நாட்டின் நீண்ட இதிகாச மரபினுடைய எண்ணற்ற அழகுகளைக் கொண்ட பெருந்திட்டத் திருக்கோயிலினை காணும் போது மயில் ஒன்று தன் வண்ணம ...
ஆறு மனமே ஆறு
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராகப் பணியேற்ற நாள் முதல் கடந்த 25 திங்களாகதமிழ் வளர்ச்சித் துறை சார்ந்தஎப்பணியையும் இப்பிரிவு அப்பிரிவு என்று பிரிவு மனப்பான்மையுடன் பிரித்துப்பாராமல் கேட்டவுடன் மறுமொழி அளிப்பதும்அதற்குரிய தீர்வினை தெளிவுடன் எடுத்துச் சொல்வதிலும் திட்பமாய் தட்டச்சு செய்யும் வல்லமை வாய்ந்த உதவியாளர்திரு பழனிமற்றவர்களைப் போல மின்விசை வேகத்தில்படி ஏற முடியாமல் 11 ஆண்டுகள் படிப்படியாய் நீண்டு நடந்து கடந்த 12.6.24புதன்கிழமையன்று கண்காணிப்பாளராகப் பதவி உயர்வுப் பெற்றார். கடந்த 2008 ஆ ...








