தினமணி - 9 1 2023 பக்கம் எண் : 2 மொழியும் பண்பாடும் கவிஞர்களின் அடிநாதம் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ந அருள் சென்னை, ஜன.9: மொழியும், பண்பாடும் கவிஞர்களின் அடிநாதம் என தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள் தெரிவித்தார். சென்னை புத்தகக் காட்சியில் கீதம் பதிப்பகம் சார்பில் தமிழகத் தில் 400 கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து 'கவிநானூறு எனும் நூல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது . இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது : தமிழ் இலக்கியத்தில் புறநானூறு 1893 - இல் தமிழ் ...
சுருங்கிப் போனதோ சுருக்கெழுத்துமுறை
தினமணி- 17.12.2022. பக்கம் எண் -8 சுருங்கிப் போனதோ சுருக்கெழுத்துமுறை முனைவர் ஔவை அருள் ஓவியம், சிற்பம், கவிதை, ஆடல், பாடல் முதலியன நுண்கலைகளாகும். தையல், ஒப்பனை, சமையல் என்பன பயன்கலை களாகும். சுருக்கெழுத்து என்பது நுண் கலையாகவும் பயன் கலையாகவும் விளங்குகிறது. வாழ்க்கையில் உயரிய பணிகளைப் பெற, இக்கலைப் பயிற்சி பெரிதும் உதவும். இதன் இன்றியமையாமை பல நிலைகளில் விளங்கும். பழங்காலத்தில் புலவர்கள் தம்முடைய பாடல்களை வாய்மொழியாகச் சொல்லச் சொல்ல, அதே விரைவோடு அவற்றை அப்படியே எழுதி நல்கும் கலைய ...
“உற்றது தமிழ்; உயிர்த்தது தமிழ்!”
26.08.2022 தினமணி பக்கம் எண் 8 "உற்றது தமிழ்; உயிர்த்தது தமிழ்!" 'கடமை நமது ஆனால் பெரிது, பெரியதையே நினைப்பது உரிமை, நினைவு மனத்தின் பயிற்சி, மனப் பயிற்சிதான் ஒழுங்கு, ஒழுங்கு தான் வாழ்வின் உண்மை, உண்மைதான் உலகிற்கு ஒளி. உன்னுங்கள் உயர்வடையலாம் இப்படிச் சின்னஞ்சிறு தொடர்களாக எழுதிய தமிழ்த்தென்றல், அரசியல் ஞானி, மேடைத்தமிழுக்கு அழகூட்டிய மேலோர், அருளாளர், தொழிற்சங்கத்தின் தாய் என்றெல்லாம் நாடு போற்ற வாழ்ந்து பன்முகத் தமிழ் விளக்காய் சமயங் கடந்த சமரச தீபமாய் மறைந்தவர் திரு.வி.க. திரு.வ ...
தமிழ்நாடு எனும் தனிப்பெருமை
தினமணி - 18 7 2022 பக்கம் எண் : 6 நடுப்பக்கக் கட்டுரை தமிழ்நாடு எனும் தனிப்பெருமை ஒளவை அருள் இயக்குநர் தமிழ் வளர்ச்சித்துறை தமிழக வரலாற்றில் 1967-ஆம் ஆண்டு, ஜூலை 18 எனும் நன்னாள் ஒரு பொன்னாள் ஆகும். அன்று தான், தமிழகத்தின் அன்றைய முதலமைச்சர், பேரறிஞர் அண்ணா , நம் மாநிலத்துக்கு ‘தமிழ்நாடு' எனும் பெயர் சூட்டிப் பெருமை சேர்த்தார். அன்றைய சட்டப்பேரவைத் தலைவர் சி.பா.ஆதித்தனாரின் ஒப்புதலுடன், அண்ணா ‘தமிழ்நாடு எனும் பெயர் சூட்டும் தீர்மானத்தை முன்மொழிய, பேரவையின் அனைத்துக் கட்சி உறுப் ...
ஊரன் மற்று யாவருக்கும் ஊதியமே!
தினமணி - 14 7 2022 பக்கம் எண் : 5 ஊரன் மற்று யாவருக்கும் ஊதியமே! சன்மார்க்க உலகத்துக்கு இப்படி ஒரு ஞானத்துறவி வாய்ப்பது அரிது . எழுத்து, பேச்சு, எண்ணம், தொண்டு மேலாண்மை என அனைத்து நிலைகளிலும் அவர் மாசற்ற தொண்டராக , அருளாளராக நாடு போற்ற வாழ்ந்தார். நூற்றாண்டைத் தொடுவார் என்று எண்ணித் தமிழுலகம் அவரைப் போற்றி வந்தது. வாழ்வெல்லாம் வடலூருக்கே - மூச்செல்லாம் வள்ளலாருக்கே என்று வாழ்ந்த சமரச ஞானப் பெருஞ்சுடர் அணைந்ததே என்று அன்பர்கள் மனம் ஓலமிடுகிறது. தினமலர் - திருச்சி பதிப்பு பக்கம் எண் : ...
எந்நாளும் தமிழ் ; எப்பணியும் தமிழ்
எந்நாளும் தமிழ் ; எப்பணியும் தமிழ் சிறப்பு வாய்ந்த பதிப்பாளராக வாழ்ந்து தமிழறிஞர்களின் அரிய நூல்களைத் தேடித் திரட்டித் தமிழுக்குச் செழுமை ஊட்டியதைத் தமிழுலகம் என்றும் மறவாது . நாடு முழுவதும் அலைந்து அலைந்து தொல்காப்பிய உரை வளத்தை ,சங்க இலக்கியக் கட்டுரைகளை - தொகை தொகையாக வெளியிட்டு தன்னுடைய நிலங்களையும் விற்றுப் பெரும் செலவு செய்த கொடை மனம் இளவழகனாரையே (3.7.1948-4.5.2021)சாரும் . நிறைவாகக் கடந்த ஆண்டு இன்றைய தமிழக முதல்வரைக் கொண்டு பேரறிஞர் அண்ணாவின் எழுத்து வடிவங்கள் முழுவதையும் 65 தொகுத ...
ஒப்பியல் இலக்கணம் தந்த ஒளிவிளக்கு !
தினமணி - தமிழ்மணி பகுதி - 8.5.2022 பக்கம் எண் : 6 ஒப்பியல் இலக்கணம் தந்த ஒளிவிளக்கு ! மே 7 - கால்டுவெல் பிறந்தநாள் திராவிட மொழிகளுக்கும், பிற இந்திய மொழிகளுக்கும் தாய் சம்ஸ்கிருதமே எனப் பலரும் நம்பியிருந்த காலத்தில் அதனை மறுத்து திராவிட மொழிகளின் தொன்மையையும், தனித்தன்மையையும், வளமையையும் சான்றுகளுடன் நிறுவி, தமிழ் மொழியின் தனிப்பெருமையை உலகுக்கு உணர்த்திய தனிப்புகழ் கால்டுவெல்லையே சாரும். சம்ஸ்கிருதத்துக்குப் புறம்பான தனியான ஒரு மொழிக்குடும்பம் உண்டு என்றதோடு, தமிழில் சம்ஸ்கிருதமும், இ ...
நயம்படு சொல்லறிவார் !
தினமணி - நடுப்பக்கக் கட்டுரை - பக்கம் எண் 6 22 2 2021 நயம்படு சொல்லறிவார் ! பேராசிரியர் இரா பி சேதுபிள்ளையும்,இரசிகமாமணி டி கே சி யும் தோற்றுவித்த வரிசையில் இடம்பெற்றவர் தான் கம்பர் கவிநயச்செல்வர் நல்லபெருமாள் . நூற்றாண்டைத் தாண்டி நம் நினைவில் வாழும் பொறியாளர் . நயம்படு சொல்லறிந்து தம் இல்லத்திலேயே கம்பர் இலக்கிய முற்றம் நடத்திய ரசிப்புத் திலகமாகத் திகழ்ந்தார் . தென்குமரி மாவட்டம், தோவாளை வட்டம், தலைநகர் பூதபாண்டிக்கு அருகிலுள்ள சிறமடம் என்ற சிற்றூரில் நல்லபெருமாள் 1919 ஆம் ஆண்டு திசம்ப ...
திருவாசக மொழிபெயர்ப்பு – பணிவும் துணிவும்
தினமணி 2.1.2021 நடுப்பக்கம்-6 திருவாசக மொழிபெயர்ப்பு - பணிவும் துணிவும் ----------------------------------------------------------------------- இன்றோடு 120 ஆண்டுகளுக்கு முன்னர் தமது எண்பதாம் வயதில் திருவாசக ஆங்கில மொழியாக்கத்தை அருட்தந்தை டாக்டர் ஜி யு போப் பெருமகனார் வெளியிட்டார் .திருவாசக மொழியாக்கத்தை ஆங்கிலம் தெரிந்த மக்கள் அனைவரும் தலை மேல் வைத்துப் பாராட்டினார்கள் . ஆங்கில மொழிபெயர்ப்பைத் திருவாசகத்துக்கும் - திருக்குறளுக்கும் - நாலடியாருக்கும் - புறப்பொருள் வெண்பாமாலையில் 59 பாடல்கள ...
நூற்றாண்டு காணும் பல்சுவைப் பனுவல் !
தினமணி - 1 - 4 - 2022 - நடுப்பக்கம் இரண்டாம் கட்டுரை - பக்கம் எண் 6 நூற்றாண்டு காணும் பல்சுவைப் பனுவல் ! முனைவர் ந அருள் உலகப்புகழ் பெற்ற திங்களிதழ் ரீடர்ஸ் டைஜஸ்ட் , உயரிய சிந்தனையை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்ற உணர்வோடு நிறுவப்பட்டது. ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழுக்கு என் பெற்றோர் நீண்ட காலமாக சந்தாதாரர்களாக இருந்தனர். குழுந்தைகளுக்கு ஏற்ற பரிசு இந்த இதழ் மட்டும் தான் என்று எனக்கு உணர்த்தியிருந்தனர். நானும் , என் சகோதரர்களும் இந்த இதழின் கட்டுரைகனை விரும்பிப் படித்தோம். இந்த இதழில ...
