https://www.youtube.com/live/p-ujhT6TQuA?si=lAIiHuZKiUG84yEx
கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது
09.11.2024 தினமணி பக்கம் எண் - 20 தினகரன் பக்கம் எண் - 09 முரசொலி பக்கம் எண் - 01 மக்கள் குரல் பக்கம் எண் - 07 டிரினிடி மிரர் பக்கம் எண் - 01 மாலை முரசு பக்கம் எண் - 05 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (8.11.2024) தலைமைச் செயலகத்தில், 2024,ஆம் ஆண்டிற்கான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதிற்குத் தேர்வ ...
நல்லிதய செம்மல்நல்லி செட்டியார் 85 ஆம் பிறந்தநாள் வாழ்த்து
நாடறிந்த பெருந்தகையும் - நல்லவர் நெஞ்சிலெல்லாம் புகழ் மணக்க வாழும் பட்டு வணிகத் திலகமாகவும், இசை ,நாடகம் ,ஆடல் ,ஆவணம் ,மொழியாக்கம்தேசியம் , தெய்வவிகம், பாரதியும், உடல்நலம் ,வணிக நுணுக்கம் முதலிய துறைகளில் தோய்ந்த பெருமிதம் கொண்டவரும் கலைகளைக் காக்கும் கரமாக மிளிரும்பத்மஸ்ரீ நல்லி செட்டியார் பழுத்த சிந்தனையும் ,எழுத்து வன்மையும் ஒரு சேரக் கொண்டவர் . உள்ளத்தில் பட்டதை - உண்மை என்றுணர்ந்ததை உலகுக்கு ஏற்றம் தரும் கருத்துக்களை,சிந்தனைக்குரிய செய்திகளைத் தொகுத்து, நம் முன்னால் நின்று ...
அன்னை சேது அறக்கட்டளை நடத்தும் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் இணையர் அன்னை சேதுமதியின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் அருள்மங்கலம், பொற்கிழி வழங்கும் விழா
நாள் : 09.11.2024 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு இடம்: நான் ஓர் ஐ.ஏ.எஸ். அகாடமி,(அஞ்சல் நிலையம் பின்புறம்) 3362, ஏ.இ. பிளாக், 8ஆம் தெரு, 10ஆம் முதன்மை சாலை, அண்ணாநகர்,சென்னை - 600 040. தொண்டறச் செம்மல்களுக்குப் பட்டயம்-பொற்கிழி வழங்குநர் முனைவர் ஔவை அருள் அவர்கள்,இயக்குநர்,தமிழ் வளர்ச்சித்துறை.
ஆக்கம்- ஊக்கம்
பன்னாட்டு ஆலோசனைக் குழு உறுப்பினர் முனைவர்இரமேஷ் கவுர் அவர்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர்திரு இராஜாராமன் இஆப அவர்களுடன் தலைமைச் செயலகத்தில் 27.9.24 வெள்ளிக்கிழமையன்று மாலையில் சந்தித்து உரையாடினோம்.
நேற்றைப் பொழுதின்(6.11.24, புதன்கிழமை) நிகழ்வுகள் அனைத்தும் நெஞ்சுக்கினிதாய் அமைந்து நெகிழ்வூட்டின.
காலை தொடங்கி மாலை வரை அரசு அலுவலர்களுக்கு ஆட்சி மொழித் திட்டச் செயல்பாடுகள் குறித்துக் கருத்துரை வழங்கிக் கவின்சேர்க்கும் முயற்சி நிறைவு தந்தது. ஒரே நாளில் மூன்று அலுவலகங்களில் நடைபெற்ற ஆட்சி மொழித் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டங்களில் பங்கேற்று துறை அலுவலர்கள்,மற்றும் பணியாளர்களுக்கு ஆன்ற அறிவுரை வழங்கினேன். கோப்பு நடவடிக்கைகள் யாவும் அனைத்து நிலையிலும் நூற்றுக்கு நூறு தமிழிலேயே அமைய வேண்டும். அரசு ஆணைகள், மற்றும் அறிவுரைகளால் மட்டுமே ஆட்சி மொழி ...
ஆங்கிலப் பெரும் பேராசிரியர் கா செல்லப்பன் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.
25.9.24 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் F50 அரங்கில் மாலை 4 மணிக்கு நடைபெற்ற ஆங்கிலப் பெரும் பேராசிரியர் கா செல்லப்பன் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன். ஆங்கிலத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற முனைவர் கா.செல்லப்பன் அவர்கள் சிவகங்கை மாவட்டம் பாகநேரியில் காசி. விசுவநாதன் - சௌந்தரம்மாள் ஆகியோரின் மகனாக 11.04.1936 இல் பிறந்தவர். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இடைநிலை(இண்டர்மீடியட்) வகுப்பும்,அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை(ஆனர்சு) வகுப்பும் பயின்றவர். அறிஞர் ...
முற்றுப் பெறாத தொடர்கதைகள்
இனிய நண்பர்கள் சரவணன் மற்றும் செயல் புயல் சீனிவாசன் இணைந்து நடத்திய தாய்லாந்து நாட்டின் திரைத்துறையினைச் சார்ந்த தொழில் நுட்ப வாணர்களுடன் 28.10.24 சனிக்கிழமை மாலையில் நடத்திய அருமையான கலந்துரையாடல் மற்றும் விருந்து நிகழ்வில் யானும் கலந்து கொண்டு உரையாற்றி மகிழ்ந்தேன்.
தமிழுக்கு அமுதென்று பேர்
உலகத் தமிழர்களின் தாய் மொழியாம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக,1981 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள், 15 ஆம் நாளில் தஞ்சாவூரில் தோற்றுவிக்கப்பட்ட,தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் பதினான்காவது பட்டமளிப்பு விழா தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கரிகாலற் சோழன் அரங்கில் திருவள்ளுவர் ஆண்டு 2055, ஐப்பசித்திங்கள் இரண்டாம் நாள் நாள் 19.10.24, சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமுது அறிவியல் மற்றும்இளங்கல்வியியல் பட்டம் பெற்றவர்களில் முதல் இடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்ற ஏ ...










