9ecebbb5-8fec-449f-a295-5ee8326a916f

சென்னையில் ‘கரன்சி கனவுகள்’ நூல் வெளியீடு !

சென்னையில் ‘கரன்சி கனவுகள்’ நூல் வெளியீடு !

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் முனைவர் ந. அருள் வெளியிட, திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா பெற்றுக் கொண்டார் !

சென்னை, 19 டிசம்பர் 2024

சென்னையில், தன்முனைப்பு எழுத்தாளர் திரு. இராம்குமார் சிங்காரம் எழுதி, யா பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் படைத்துள்ள ‘கரன்சி கனவுகள்’ நூலின் முதல் பிரதியை, தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனர் முனைவர் ந. அருள் வெளியிட, திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி கல்வித் துறையின் மேனாள் துணை இயக்குனர் திரு. அ. மதிவாணன், யா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. எஸ்.பி. அண்ணாமலை ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர் திரு. இராம்குமார் சிங்காரம் எழுதியுள்ள ஒன்பதாவது தமிழ் நூல், இதுவாகும்.

இந்த நூலில் தன்முனைப்பு சார்ந்த 60 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

வளர்ச்சி பெறத் துடிக்கும் இளைஞர்களுக்கும், உற்சாகமான நடுவயதினருக்கும் இந்த நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பல்வேறு நடைமுறை உதாரணங்கள், கதைகள், சம்பவங்கள் போன்றவற்றின் மூலம் எளிமையான எழுத்து நடையில், கருத்துக்களை இந்நூலில் பகிர்ந்துள்ளார், திரு. இராம்குமார் சிங்காரம்.

144 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ. 200 ஆகும்.

விற்பனை விவரங்களுக்கு,
தொடர்பு கொள்க : 98409 96745.

e3c7bb42-20da-4fa3-bfa6-874832982ec7

48 ஆவது புத்தக கண்காட்சி-சென்னை

2024 டிசம்பர் 27 முதல் 2025 ஜனவரி 12 வரை
YMCA உடற் கல்வியியல் கல்லூரி, நந்தனம், சென்னை

வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை

விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை

The Booksellers’ & Publishers’ Association of South India

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்

No. 8, 2nd Floor, Sun Plaza, G.N. Chetty Road, Chennai- 600 006. Tel: 2815 5238

7.1.2025 செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணி

வரவேற்புரை: திரு. லெ.அருணாச்சலம்

செயற்குழு உறுப்பினர், பபாசி, அருண் பதிப்பகம் சிறப்புரை

தமிழ் எங்கள் மூச்சு

திரு. ஒளவை அருள்

இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை

தமிழே தமிழே, தமிழின் அமுதே

நன்றியுரை

திரு. இராம. கண்ணப்பன்

செயற்குழு உறுப்பினர், பபாசி, கண்ணப்பன் பதிப்பகம்

தினமணி 8.1.2025

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை அருள் தமிழ் எங்கள் மூச்சு எனும் தலைப்பில் அவர் பேசியதாவது:

தமிழ்ப் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பும் தற்போது அதிகரித்து வருகிறது.

தமிழ் இளங்கலை இலக்கியம் படித்தவர்களுக்கு மட்டும் தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநராகும் வகையில் தேர்வுகள் நடத்தப்பட்டன.

சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தற்போது 38 மாவட்டங்களிலும் இலக்கியப் பயிற்சி நடைபெற்று வருகிறது.

தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக சிறந்த நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பாளர்களுக்கு பரிசுத் தொகைகளும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகின்றன.

ஆகவே தமிழ் வளர்ச்சி என்பது வாழ்க்கைக்குமானதாக தற்போது மேம்பட்டு உயர்ந்துள்ளது என்றார்.

4451d4ac-afb6-4b67-8492-4629d04317f1

வள்ளுவம் போற்றுதும் வெள்ளி விழா 25

முக்கடல் சூழும் குமரி முனையில்

அய்யன் திருவள்ளுவர் சிலை

வெள்ளி விழா

30.12.2024 – 1.1.2025

முக்கடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா

அய்யன் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம் திறப்பு

வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியிடுதல்

திருக்குறள் கண்காட்சி தொடங்கி வைத்தல்

அய்யன் திருவள்ளுவர் தோரணவாயில் அடிக்கல் நாட்டுதல்

அன்புடையீர் வணக்கம்,

நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2055, மார்கழித் திங்கள் 15 முதல் 17 வரை (30.12.2024 – 1.1.2025) முக்கடல் சூழும் குமரிமுனைக் கடல் நடுவே முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் 133 அடி உயரமுடைய அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் வெள்ளி விழா மூன்று நாள்கள் கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாண்புமிகு மேயர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ் அறிஞர்கள், சீர்மிகு பெருமக்கள் பங்கேற்றுச் சிறப்பிக்கிறார்கள்.

தாங்கள் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்

இரண்டாம் நாள் நிகழ்ச்சி

31.12.2024 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி

தமிழ்த்தாய் வாழ்த்து

திரு. நா.முருகானந்தம், இ.ஆ.ப., அவர்கள்

வரவேற்புரை

தலைமைச் செயலாளர்

முன்னிலையுரை

தவத்திரு

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்

அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை

வெள்ளி விழாச் சிறப்பு மலரை வெளியிட்டு

திருக்குறள் சார்ந்த போட்டிகளில்

வெற்றி பெற்ற மாணவர்களுக்குப்

பரிசுகள் வழங்கி விழாப் பேருரை

திருக்குறள் இசை நிகழ்ச்சி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்

திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்

பியானோ இசைக் கலைஞர்

செல்வன் லிடியன் நாதஸ்வரம் அவர்களின்

திருக்குறள் இசை நிகழ்ச்சி

நன்றியுரை

திருமதி ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர், கன்னியாகுமரி மாவட்டம்

கருத்தரங்கம்

செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணி

தலைமை

திரு. தங்கம் தென்னரசு அவர்கள்

மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்

பேராசிரியர் அ.கருணானந்தன் சமகாலத்தில் வள்ளுவர்

புலவர் செந்தலை ந.கவுதமன் வள்ளுவம் போற்றும் சமய நல்லிணக்கம்

திரு. கரு.பழனியப்பன் வள்ளுவம் காட்டும் அறம்

திரு. ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப., (ப.நி.) திருக்குறளும் சங்க இலக்கியமும்

வழக்கறிஞர் அருள்மொழி திருக்குறள் போற்றும் மகளிர் மாண்பு

பேராசிரியர் விஜயசுந்தரி திருக்குறளில் இசை நுணுக்கம்

aa3e7696-cbc5-4048-bbd1-f79d5ab783a5

ஆய்வுக்கூட்டம்

தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்
திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் 24.12.24 செவ்வாய்க்கிழமையன்று காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு. வே. ராஜாராமன், இ.ஆ.ப.,
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள்,
தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் (பொறுப்பு), பதிவாளர் மற்றும் பேராசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

e3b44be7-32b1-425a-9edd-691cbfef3eca

பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 10 அரசு விரைவுப்பேருந்துகள்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செவ்வாய்க்கிழமை, 24.12.24 அன்று

சென்னை அண்ணா சாலை பல்லவன் இல்ல மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் நடைபெற்ற நிகழ்வில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட ஐயன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாட்டத்தையொட்டி

பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விரைவு பேருந்துகளின் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்
மு பே சாமிநாதன்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்

சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் திருமதி ஆர் பிரியா
போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி,

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே. ராஜாராமன்,

மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ்,

செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு. இரா வைத்திநாதன்,

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள்

நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு

மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

f7db8084-b2be-4b35-ad4d-806b4105ea07

தமிழ் வளர்ச்சித் துறை-ஆட்சி மொழி சட்ட வாரம் 2024-2025

8.12.24

தலைமையுரை
முனைவர் அருள்
இயக்குநர் தமிழ் வளர்ச்சித் துறை

ஆட்சி மொழிச் சட்ட வரலாறு

நீதியரசர் அ முகமது ஜியாவுதீன்
மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதி

உறுப்பினர் மாநிலச் சட்ட மொழி ஆணையம்