அமைதி, பொறுமை, வாய்மை என்ற அடிப்படை இயல்புகளோடு வளர்ந்தவர் என் அருமை இளவல் சீனிவாசன். அவரின் தாயாரின் தொடர் கண்காணிப்பில் வளர்ந்தாலும் பள்ளிக்கல்வியில் ஆர்வம் காட்டாமல் சுணக்கமாக இருந்த பருவத்தில் எங்கள் பெற்றோரின் அண்ணா நகர் இல்லத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்று அவர்கள் தாயார் கேட்க எந்தையார் என்னிடம் உன் தம்பி போல் பேணுக என்றார்… 1989 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை யான் பணியாற்றிய கிளியா விளம்பர நிறுவனத்தில் சீனிவாசன் என் குதியுந்து ஓட்டுனராகவும், அலுவல் உதவியாளராக ...
தொட்டவை துலங்கவும் -தொழில்கள் விளங்கவும் கலைமகள் வழிபாடு
வீரம் , செல்வம், கல்வி, வேண்டி மூன்று பெரும் தேவியர்களுக்கு விழா எடுப்பதையே திருமகள் பூசை என்று அழைக்கின்றோம். இது பத்து நாள்கள் கொண்டாடப்படுகிறது. முதல் மூன்று நாள்களும் வீரத்தைத் தரும் கொற்றவை தேவியாகவும் ,அடுத்த மூன்று நாள்களும் செல்வத்தைத் தரும் திருமகள் தேவியாகவும் ,இறுதி மூன்று நாட்களும் கல்வியைத் தரும் கலைமகள் வடிவாகவும் கொண்டாடப்படுகிறது. இறுதி நாள் விஜயதசமி என்றழைக்கப்படுகிறது. அலைமகள் கலைமகள் திருமகள் திருநா ...
காந்தி ஜெயந்தி முன்னிட்டு மக்கள் நலத்திட்ட பணிகள் நிகழ்ச்சி
தமிழ்நாடு மீனவர் சங்கம் மற்றும் தமிழ்நாடு ப்ளெக்ஸ் டிசைனர் அசோசியேஷன் காந்தி ஜெயந்தி முன்னிட்டு மக்கள் நலத்திட்ட பணிகள் நிகழ்ச்சியில் 2.10.24 புதன்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் பட்டினப்பாக்க கடற்கரையில் கலந்துகொண்டு மீனவக் குடும்பங்களை சார்ந்த மகளிருக்கு தையல் கருவிகளை வழங்கி காந்தியடிகளின் சிறப்புகளை குறித்து உரையாற்றினேன் . திரு அன்பழகன் நடத்திய நிகழ்வில் லியோ சங்கத்தில் பழகிய நண்பர்களான திரு விஜி குமார் மற்றும் திரு ராம் இருவரையும் ஆண்டுகள் பல கடந்து சந்தித்த ...
26 – ஆம் ஆண்டு கம்பன் கழக விழா
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலாஅலகு இலா விளையாட்டு உடையார் - அவர்தலைவர் ; அன்னவர்க்கே சரண் நாங்களே அன்புடையீர் !வணக்கம். நம் கழகத்தின் 26 ஆம் ஆண்டு விழா 29.09.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் இராமநாதபுரம், வெளிப்பட்டணம், ஆயிரவைசிய மகாஜன சபை திருமண மாளிகையில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. அனைவரும் தவறாது கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம். இவண்… கம்பன் கழகம்,இராமநாதபுரம். ...
கவிஞர் தமிழ்ஒளியின் தமிழ்வெளி ஓர் ஆய்வரங்கம் மற்றும் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நிறைவுவிழா
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை மற்றும் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு இணைந்து நடத்தும் கவிஞர் தமிழ்ஒளியின் தமிழ்வெளி ஓர் ஆய்வரங்கம் மற்றும் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நிறைவுவிழா 2024 செப்டம்பர் 23 திங்கட்கிழமை காலை 10.30 முதல் மாலை 5 வரைபவளவிழாக் கலையரங்கம் மெரினா வளாகம்(திருவள்ளுவர் சிலை எதிரே) சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை 600005 நுண்கதை அரங்கம் நண்பகல் 12-12.30 வனமலர்கள் எழுத்தாளர் மணிநாத்எழுத்தாளர் & இதழாளர் விஷ்ணுபுரம் சரவணன் ஆய்வரங ...










