உலகத் திருக்குறள் சமுதாயம் மற்றும் மாணவர் மையம் இணைந்து நிகழ்த்தும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் திருவள்ளுவரின் திருவுருவச் சிலை. வெள்ளி விழா - மாணவர்களின் தொல்காப்பிய அரங்கேற்றம், திருக்குறள் முற்றோதல் விழா. ஒன்றே உலகம்! பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் தமிழ்நாடு மாணவர் தழுவிய மாநாடு - 2 தி ...
கல்வெட்டியல் சுவடியல் படிக்க இளைஞர்கள் முன் வர வேண்டும்!
அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் உள்ள செய்தியாளர் அறைகளில் நவீனக் கட்டமைப்புடன் கூடிய கணினி மற்றும் அதிவேக இணையதள வசதிகள் மேம்படுத்தப்படும் எனச் செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் அவர்கள் சொல்லியிருப்பது வரவேற்கத் தக்கதாகும். அதே போல புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை பன்னோக்கு கலையரங்கத்தின் அருகில் 50 லட்சம் ரூபாய் செலவில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்று சொல்லியிருப்பதும்பாராட்டத்தக்கதாகும். தமிழகச் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிய பொன்னப்ப நாடார் அவ ...
துணைமுதலமைச்சரான நாளின் நினைவு!
2009-ஆம் ஆண்டு, மே மாதம் 29-ஆம் தேதி, முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியின்போது மாண்புமிகு துணை முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இன்றைய முதலமைச்சர் அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். என் தந்தை, நினைவில் வாழும் ஔவை நடராசன் அவர்கள். உடன் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களின் நேர்முகஉதவியாளராகப் பணியாற்றிய ரவி மற்றும் பள்ளிப்பட்டு பிரமுகர் ராஜேந்திரபிரசாத் ஆகியோரும் தலைவரைச் சந்தித்து வாழ்த்தினர். ஔவை அருள்,இயக்குநர்,தமிழ் வளர்ச்சித்துறை.
நான் நிற்கும் இடம் பழைய 10 பெசன்ட் ரோடு இராயப்பேட்டை
Old 10 besant road Neighbour house dr sridar nellikaai tree now transformed as money plant
சித்தப்பா மருத்துவர் மெய்கண்டான் அவர்களின் கருத்துரை
காலில் விழுந்து வணங்குவது: மரியாதையை வெளிப்படுத்தும் விஷயமே…முழுக்க முழுக்க அடிமைத்தனமே! மருத்துவர் மற்றும் தமிழறிஞரான ஒளவை மெய்கண்டான் இதைப் பற்றி பேசும்போது… "காலில் விழுவது போன்ற கலாசாரம் ஒரு சமூகத்தின் பழக்கமாக இருக்கிறது. இதுகுறித்து ஆன்மிகம் மற்றும் இலக்கியங்களின் வழியில்தான் சில தகவல்களைப் பெறுகிறோம். திருக்குறளில், வணங்குவது பற்றி சிறப்பாகவே சொல்லப்பட்டிருக்கிறது. 'எல்லார்க்கும் நன்றாம் பணிதல்', 'தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெளுவாள்' போன்ற பல கு ...
முகநூலில் தேனி சுப்பிரமணி அவர்களின் பதிவு
தமிழ் வளர்ச்சித் துறை வலைத்தளத்தில் அனைத்து விருதாளர்கள் எனும் தலைப்பின் கீழ் 1978 ஆம் ஆண்டுக்கான பாரதிதாசன் விருது பெற்ற கவிஞர் சுரதாவில் தொடங்கி, 2025 ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது பெற்ற பெரும்புலவர் மு. படிக்கராமு வரையில் மொத்தம் 791 விருதாளர்களின் பெயர்கள் தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன. இப்பட்டியலில் 735 ஆம் எண்ணில் சிங்காரவேலர் விருது பெற்ற எனது பெயர் இடம் பெற்றிருக்கிறது (இப்பட்டியலில் தகைசால் தமிழர் விருதாளர், 2015 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கப்பெற்ற தமிழ்ச்செம்மல் விருதாளர்க ...
பாராட்டுகளுடன் புத்தர் சிலை பரிசளித்த புலவர் ராமலிங்கத்தின் குடும்பத்தினர்
தமிழ்நாடு அரசின் மறைமலை அடிகள் விருது பெற்ற அப்பாவின் நெருங்கிய நண்பர் புலவர் ராமலிங்கம் அவர்களின் இரு மகன்களும் மகளும் மருமகனும் சென்ற ஞாயிற்றுக்கிழமை அண்ணாநகர் இல்லத்தில் என்னை வந்து சந்தித்து பாராட்டி நன்றி தெரிவித்தார்கள் பிறகு புத்தர் பெருமானின் சிலையினை பரிசாக வழங்கினார்கள்
ஒளவையின் தமிழமுது
தமிழறிஞர், பத்மஸ்ரீ ஔவை நடராசன் பல்வேறு நூல்களுக்கு எழுதிய முன்னுரைகளை, அவரது மகன் ஒளவை அருள் அழகுறத் தொகுத்துள்ளார். தெளிந்த உணர்வோடு, திறமையொளி வீசும் வித்தகர்களைக் கண்டு வியந்து பாராட்டும் மனம் ஒளவை நடராசன் அவர்களுக்கு இருந்துள்ளதை இந்த 125 முன்னுரைகள் விளக்குகின்றன. இந்நூலில் அடங்கி உள்ள 125 முன்னுரைகளும்காலப்பெட்டகமாகவும், கருத்துமணிகளின் திரட்டாகவுமே திகழ்கின்றன. நூலை வாசித்து முடிக்கும் போது, மிகப்பெரிய நூலகத்தில் நுழைந்து,பல மணிநேரம் செலவு செய்து, பலவிதமான நுல ...
மருத்துவம்+நற்றமிழ்+திருத்தலப்பணி=நலங்கிள்ளி
23 ஆண்டுகளுக்கு முன்பு பொன்னேரியில் தன்னுடைய இல்லத்தைக் கட்டுவதற்கு முன்பாகவே இல்ல வாயிலில் திருக்கோயில் அமைத்த திருத்தொண்டர் தான் என் மாமா மருத்துவர் நலங்கிள்ளி ஆவார்.. திருக்கோயிலை வலம் வந்த போதுகொற்கை கணபதிகொற்கை திருமகள்அருள்மிகு மருந்தீசர்அருள்மிகு நீலாம்பிகைஒன்பாவை - கோள்கள்கொற்றவை என்ற நற்றமிழ் பெயர்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. பொன்னேரியில் தனிநிலையில் சிறந்த மருத்துவராகவும் எளியோர்கள் எந்நாளும் விரும்பும் மருத்துவத்திலகமாகவும்நற்றமிழ் நம்ப ...
சட்டமன்றப் பேரவையில் (16.4.25 )தமிழ் வளர்ச்சித்துறைக்குப் பாராட்டு
வி.சி.க சிந்தனைச் செல்வன் அவர்கள்: தமிழ் வளர்ச்சித் துறையைப் பொறுத்தவரையிலே கொள்கைக் குறிப்பேடுகளைப் பார்த்தபொழுது எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. பிற துறைகளின் கொள்கைக் குறிப்பேட்டை விட ரொம்ப updated ஆக அனைத்து செய்திகளையும் உள்ளடக்கியதாக வெறும் கொள்கைக் குறிப்பேட்டை சடங்குத்தனமாகக் கடந்து விடாமல் பல்வேறு செய்திகளையும் தரவுகளையும் கொண்ட ஒரு அருமையான முயற்சியாக இந்தக் கொள்கைக் குறிப்பேடு அமைந ...










