தமிழ்நாட்டின் மாபெரும் சிற்பிகள் குடும்பத்தை சார்ந்த கிஷோர் நாகப்பாவின் மகன் மருத்துவர் ஹரிஷ் கிஷோர் 27.1.25 திங்கட்கிழமை அன்று நடைபெற்ற திருமண நிகழ்வில் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய இனிய பொழுது… அவ்வண்ணமேசென்னையில் நிறுவப்பெற்ற அன்னை வசந்தை என்று அழைக்கப்படும் அன்னிபெசன்ட் திருவுருவச் சிலை மற்றும் இந்து நாளிதழின் நிறுவனர் கஸ்தூரி ஐயங்கார் மார்பளவு சிலையினை சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு செதுக்கிய பெருமை சிற்பி கிஷோர் செல்லப்பாவின் பாட்டனார் வாயிலாக அமையப்பெற்றது என்பது ...
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135ஆம் பிறந்தநாள் (14.4.25)
சமத்துவ நாள் உறுதிமொழி 11.4.25 வெள்ளிக்கிழமையன்று தமிழ் வளர்ச்சித்துறை இயக்கத்தில் படிக்கப்பட்டது சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும்,சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும்,தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும்,வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து,எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய,நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில் சாதி வேறுபாடுகள் ...
காட்சியும்-மாட்சியும்
சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைத் தமிழிலக்கியம் இரண்டாமியாண்டு (1986-87) பயிலும் போது அதே கல்லூரியில் முதுகலைத் தமிழிலக்கியம் முதலாம் ஆண்டு பயில்வதற்க்கு இலயோலோ கல்லூரி மாணவரானடென்சன் எக்டர் இணைந்தார். அதே வகுப்பில் திரைப்பட இயக்குநர் ஜெயப்பிரகாஷ் மாணவத் திலகமாக அணி சேர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மனமும் எண்ணமும் நிறைய மாணவ மாணவியர் முதுகலைத் தமிழ் வகுப்பில் சேர்ந்த பொழுது மாநிலக் கல்லூரியே களை கட்டியது. அந்தப் பெருங்கூட்டத்தில் தனி நிழலாக அன்பின் பெருக்காகப ...
சந்தித்தேன்- சிந்தித்தேன்
உலகம் முழுவதுமுள்ள தமிழறிந்தவர்கள்இல்லந்தோறும் உள்ளந்தோறும் போற்றிக் கொண்டிருக்கும் பட்டிமன்ற உலகின் பேரரசர் சாலமன் பாப்பையா ஐயா அவர்களை அவருடைய இல்லத்தில் 9.3.25 ஞாயிற்றுக்கிழமையன்று நேரில் கண்டு பல நிகழ்வுகளைக் குறித்து உரையாடினேன்.உற்றுக்கேட்டார் சிரித்து மகிழ்ந்தார்.
மாசு குறையாத மன்னவன்எங்கள் குமணன்!
என்னுடைய மாமா மருத்துவர் நலங்கிள்ளி தன்னுடைய மகன் குமணன் பிறந்த பொழுது தாலாட்டுப் பாடலாக உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற கவியரசு கண்ணதாசனின் முழுமையான பாடல் வரிகளோடு பாடிக்காட்டி தூங்க வைத்த பொழுது விழிகளை உயர்த்தி வியப்பாகப் பார்த்து மகிழ்வேன். பள்ளி மாணவனான குமணனை செனாய் நகர் நீச்சல் குளத்தில் மூழ்கிச் சென்று நீந்தும் கலையில் மருண்ட விழியுடன் மாமா பயிற்றுநர் உங்கள் நண்பர் தானே இம்முறை வேண்டாம் என ...
இலக்கியமாமணி மெய்.ரூஸ்வெல்ட் – பாராட்டு விழா
நாள்: 05.04.2025 சனிக்கிழமைநேரம்: மாலை 4:30 மணி இடம்: திருவள்ளுவர் அரங்கம், மாநிலக் கல்லூரி, சென்னை-600005 வாழ்த்துரை முனைவர் ந.அருள், இயக்குநர், தமிழ்வளர்ச்சித் துறை
VAIRAMUKKIYAM(THE POETIC PEARL)
Dr. N. Arul Tamizh Poet Dr. Vairamuthu, a renowned man of letters, is both an attentive reader and a prolific writer of masterpieces. Through his vivid lyricism, he showcases his profound knowledge of the power of pen and ink. He skillfully draws upon the Tamil language, from his reservoir of knowledge and wisdom. Combining these, he unleashes his prowess which has been highly acknowledged by another great scholar and former Chief Minister of Tamil Nadu, the late Kalai ...
உலக இட்டலி நாள் – 30.03.2025
இட்டலிக்கு ஏதிங்கே இணை ! ஆவியில் வேக வைத்து வெளியில் எடுத்துக் கையால் இட்டு அளிப்பதற்கு இட்டலி என்ற பெயர் வந்ததாம். அவிப்பது என்ற வகையில் இட்டவி ஆயிற்று.ளகரம் லகரமாகத் திரிந்து வெந்தது. இது அரிசியும் உளுந்தும் கலந்த தமிழுணவாகும்இட்டலியின் தம்பி தான் கொழுக்கட்டையாகும் . இது முழுக்கத் முழுக்க தமிழ்நாட்டு உணவு என்று சொல்வதற்கேற்பத் தமிழர்களை இட்லி சாம்பார் என்று புதுதில்லியில் வழங்கலாயிற்று. சட்டென்று உண்ணுவதற்குக் காரணமாக இருப்பதைக் கருதிச் சட்டுணி என்பதே சட்டினி ஆயிற்று. அவ ...










