திருக்குறள் முற்றோதலில் பங்கேற்க குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்

தினமணி 26.1.2025 ஞாயிற்றுக்கிழமை பக்கம் 6 திருக்குறள் முற்றோதலில் பங்கேற்க குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை ந.அருள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியில் மாணவர்களை பங்கேற்கச் செய்யும் வகையில் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் என தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை ந.அருள் வலியுறுத்தினார். சென்னை பல்கலைக்கழக திருக்குறள் ஆய்வு மையம், உலகத் திருக்குறள் மையம் ஆகியவை சார்பில் திருக்குறள் உலக நூல் என்ற தலைப்ப ...

நூறாண்டாகப் புகழ் மணக்கும் நற்றமிழறிஞர்!

தினமணி தமிழ்மணி பக்கம் 6 29.12.24 ஞாயிற்றுக்கிழமை நூறாண்டாகப் புகழ் மணக்கும் நற்றமிழறிஞர்! முனைவர் ஒளவை அருள் பன்னூறு ஆண்டுகளைக் கடந்த செந்தமிழுக்கு வாய்த்த இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற 'தமிழ்ப் பெரும்புலமைச் சான்றோர்களின் வரிசையில், செந்தமிழ்ப் பெரும் புலவர் ந.ரா. முருகவேளுக்குப் பேரிடம் உண்டு. 'தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து என்னும் ஒளவை பிராட்டியின் வாக்கை மெய்ப்பிக்கும் வகையில் தொண்டை நாட்டுச் செல்வமெனப் புலவரேறு ந.ரா. முருகவேள் நந்திபுரம் சிராமத்தில், திரு. இராமசாமி முதலியாருக்கு ...

நூலறிவு என்பது வாலறிவு!

தினமணி 04.11.2024 திங்கட்கிழமை நடுப்பக்கம்- துணைக்கட்டுரை பக்கம்:6 நூலறிவு என்பது வாலறிவு! ஒளவை அருள் அறிவுசார் துறைகளில் தமிழ்நாடு சங்க காலம் முதலே முன்னோடியாக இருந்து வரும் மாநிலம். புலமையும் கலைகளும் வாழ வேண்டும் என அவற்றைப் போற்றிப் புரந்த பெருமக்கள் தமிழ்நாட்டின் அரசர்களாகத் திகழ்ந்து அணி கூட்டினர். புலவர்களையும் கலைஞர்களையும் பாதுகாப்பது தம் கடன் என எண்ணி வாழ்ந்த அரசர்களைக் கொண்ட நாடு இது. காலம் தாழ்த்திப் பரிசில் கொடுத்தால், அதனை ஏற்காமல், "அரசும் உனதோ வள நாடும் உனதோ' எனப் ...

1f52bcab-b269-493c-9e6d-fae5189a61cf

நாட்டுடைமை என்னும் அறிவுத் திருப்பணி!

அறிவு உலகப் பொது என்பார்கள். ஆனால், அறிஞர்கள் உலகப்பொதுவல்ல என்பது உலக நடைமுறை. ஓர் அறிஞரின் அறிவின் பேருழைப்பால் விளைகின்ற நற்கனிகளாம் நூற்செல்வங்கள். அவருக்குப் பின்னர் சிலர் கைகளில் மட்டும் சென்று தங்கிவிடாமல், நாட்டின் கடைக்கோடித் தமிழனுக்கும் சென்று சேர்க்கின்ற அரும்பணிக்குப் பெயரே நாட்டுடைமை என்பது. மறைந்த படைப்பாளிகளின் பதிப்புரிமை அவர்களுடைய குடும்பத்தினர், மரபு வழியினர், பதிப்பகத்தார் ஆகியோரின் நிலையான சொத்தாகவே நிலவி வருகிறது. அறிவென்பது பொதுவாயினும், மரபுரிமை ஒ ...

நாட்டுடைமை என்னும் அறிவுத் திருப்பணி!

தினமணி 05.09.2024, வியாழக்கிழமை பக்கம் : 10 நாட்டுடைமை என்னும் அறிவுத் திருப்பணி! அறிவு உலகப் பொது என்பார்கள். ஆனால், அறிஞர்கள் உலகப்பொதுவல்ல என்பது உலக நடைமுறை. ஓர் அறிஞரின் அறிவின் பேருழைப்பால் விளைகின்ற நற்கனிகளாம் நூற்செல்வங்கள். அவருக்குப் பின்னர் சிலர் கைகளில் மட்டும் சென்று தங்கிவிடாமல், நாட்டின் கடைக்கோடித் தமிழனுக்கும் சென்று சேர்க்கின்ற அரும்பணிக்குப் பெயரே நாட்டுடைமை என்பது. மறைந்த படைப்பாளிகளின் பதிப்புரிமை அவர்களுடைய குடும்பத்தினர், மரபு வழியினர், பதிப்பகத்தார் ஆகியோரின ...

பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த தமிழ் நூல்கள்

தினமணி 31.8.24 சனிக்கிழமை பக்கம் 10 பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த தமிழ் நூல்கள்: உலகின் புகழ்பெற்ற 100 பல்கலை.கள், நூலகங்களுக்கு அனுப்ப முடிவு சென்னை, ஆக.30: தமிழ்மொழியின் சிறப்புகளை உலகெங்கும் பரவச் செய்யும் பொருட்டு, ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த தமிழ் நூல்களை உலகில் உள்ள புகழ்பெற்ற 100 பல்கலைக்கழகங்கள், சிறந்த நூலகங்களுக்கு அனுப்ப தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழியின் ஐம்பெருங்காப்பியங்களான சிறப்புமிக்க நூல்களாகக் ...

படுகுழியில் பல்கலைக்கழகங்கள்

தினமணி - 7 .6 .2024 வெள்ளிக்கிழமை நடுப்பக்க கட்டுரை பக்கம் எண் : 8 படுகுழியில் பல்கலைக்கழகங்கள் https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2024/Jun/07/universities-in-the-abyss பள்ளிக்கல்விக்குப் பின்னர், உயர்கல்வி வாயிலாக மாணவர்களின் சிந்தனைத் திறத்துக்கும், திறன் மேம்பாட்டுக்கும் ஆய்வு வளத்துக்கும் புடம் போடும் பாசறைகளாகப் பல்கலைக்கழகங்கள் விளங்கி வருகின்றன. தொடக்கத்தில் ஓரிரு பல்கலைக்கழகங்களே செயற்பட்டு கல்விப்பணி ஆற்றி வந்த நிலையில், தற்போது எண்ணற்ற பல்கலைக் ...

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

தினமணி சென்னை பக்கம் 6 திங்கள்கிழமை 29 ஏப்ரல் 2024 மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்! உலகில் சிலர் கவிஞர்களாகவே பிறக்கிறார்கள்; சிலர் கவிஞர்களாக ஆக்கப்படுகிறார்கள்; சிலர் கவிஞர்களாக விளம்பரப்படுத்தப்படுகிறார்கள். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் முதல் வகையைச் சேர்ந்தவர். பாரதியார் என்னும் வேரிலிருந்து புறப்பட்ட ஆலமரமாக விளங்கியவர் பாரதிதாசன். தனது தனிப்பட்ட ஆளுமை காரணமாக வித்தியாசமாக கிளை விரித்ததோடு தாமே தமது எண்ணற்ற விழுதுகளையும் தமிழ் மண்ணில் விளைத்து மாபெரும் கருத்துப் புரட்சிக்குக் கால் ...

ஒளவையின் நிழலும் அருந்தமிழ் ஆளும்..

ஒளவையின் நிழலும் அருந்தமிழ் ஆளும்.. தனக்குத் தரப்படும் எந்தச் செயலையும் புரிந்து செயலாற்றுவதில் வல்லவர் பொன்னேரி பிரதாப் என்று பொன்னாரம் சுட்டலாம் என்ற அடிக்கடி அப்பா தன்னுடைய தனிச்செயலாளர் பற்றி குறிப்பிடுவது உண்டு அன்றாடம் தான் கையாளும் எண்ணற்ற பணிகளை முன்னுரிமை தந்து வரிசைப்படுத்தி அவற்றுக்கான கால அளவை நிர்ணயித்து மன உறுதியோடு அவர் செய்து முடிக்கும் திட்பம் கண்டு மகிழ்ந்து என் பெற்றோர்கள் பாராட்டுவது உண்டு. பெற்றோர்கள் இன்று இருந்திருந்தால் பிரதாப்பை கொண்டாடியிருப்பார்கள்.. ...

புலவோர் போற்றுதும்!

தினமணி 23.3.24 சனிக்கிழமை பக்கம் 7 புலவோர் போற்றுதும்! சங்க காலம் தமிழிலக்கிய வரலாற்றில் பொற்காலம் எனப் போற்றப்பெறும் பெற்றி வாய்ந்ததாகும். அறிஞர் பூர்ணலிங்கம் பிள்னை காதலும், போரும் பழந்தமிழ் இலக்கியத்தின் பிரிவாகவும் சமயமும்,தத்துவமும் இடைக்கால இலக்கியங்களின் சாரமாகவும், அறிவியலும், மானிடவியலும் இக்கால இலக்கியங்களின் போக்காகவும் இலங்குகின்றன என்று குறிப்பிட்டுள்ளார். சங்க இலக்கியங்கள் மிகப் பழமையவாயினும் இன்றும் நடைமுறையில் ஆளுமை உடையனவாய் இலங்குகின்றன. அருஞ்சொல் எனக் கருதுபவை ...