POST: 2025-07-03T09:58:33+05:30

மானுடம் தாம் அல்லர் சூலைத் திங்கள் முதல் நாளில் பாட்னாவில் பிறந்து நாட்டின் அடிமை விலங்கை உடைத்தெறியப் பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரராய் இணையற்ற ஒப்பனைக் கலைஞராய் மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வராய் கொடும் பிணி நீக்கு மருத்துவராய் மானுட சேவையில் மகத்தான எண்பது ஆண்டுகளைப் (1882 – 1962) பொருளுடன் கழித்துப் பின் தான் பிறந்த அதே ஜூலை திங்கள் முதல் நாளில் கொல்கத்தாவில் இயற்கையெய்திய மருத்துவர் பிதான் சந்திர ராய் அவர்களை இந்திய மருத்துவர் திருநாளாகிய சூலைத் திங்கள் முதல் நாளில் நினைந்து போற் ...

POST: 2025-07-02T07:42:16+05:30

சிறாஅஅர்! துடியர்! பாடுவல்ல மகாஅஅர் எனத் தொடங்கும் நெடுங்கழுத்துப் பரணரின் புறநானூற்றுப் பாடல் இருநூற்றுத் தொண்ணூற்(று) ஒன்று புறாவுக்கும்/பறவைக்கும் கறவைக்கும் நீதிநிறுத்திய தமிழின் திறனார் கருத்துகளைக் கொண்டு வரும் உலகத்தமிழிதழ் இருநூற்றுத் தொண்ணூற்(று) ஒன்று.

POST: 2025-07-01T09:28:37+05:30

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே! எந்தையார் பெரிதும் மதித்துப் போற்றிய பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளர் திலகமும் நினைவில் வாழும் சமயச் சான்றோர் குப்புராஜ் அவர்களின் திருமகனான நாடறிந்த கண் மருத்துவர் பிரேம் குமார் கண் மருத்துவர் திருமதி பிரேமா அவர்களின் மகன் விக்னேஷ் மற்றும் பிரவீனா திருமண மங்கல நிகழ்வில் 5.6.25 அன்று மகாலிங்கபுரத்தில் உள்ள எம்எல்எம் திருமணக்கூடத்தில் மண மக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் சிறிது நேரம் அமர்ந்த பொழுது ஊஞ்சலைக் குறித்து பல நினைவுகள் மனத்திரையில் நிழலாடியது .. அண்ண ...

POST: 2025-06-30T10:03:39+05:30

உறங்குவது போலுஞ் சாக்காடு பலரின் வருவாய் ஆண்டுக் கணக்குகளுக்கு விடை சொன்னவர் தன் வாழ்நாள் கணக்கை தூக்கத்திலேயே முடித்துக் கொண்டார் இருபதாண்டுகளுக்கு முன்பு என்னுடைய நண்பர் திரு இரகுநந்தனா நூறாண்டுகள் பழமை வாய்ந்த ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட மரபார்ந்த உயர்குடி இல்லத்தினை வாங்கப்போகிறேன் அதனுடைய அசல் மூலப் பத்திரங்களை பார்த்து சொல்வதற்கு வழக்கறிஞர் ஒருவரை அறிமுகம் செய்யுங்கள் என்று என்னை உரிமையோடு வினவிய போது மருத்துவர் சாந்தி அண்ணியாரின் பாட்டனார் ஆங்கில இந்து நாளிதழின் நிறுவனர் திரு கஸ்தூரி அ ...

POST: 2025-06-29T09:22:49+05:30

உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிருவாகக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (27.06.2025) மதியம் 1.00 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மற்றும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மு.பெ. சாமிநாதன் அவர்களின் தலைமையில் மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தின் நிருவாக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே. ராஜாராமன் இஆப தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் மற்றும் உலகத் தமிழ்ச் சங்கம் இயக்குநர் (பொறுப்பு) ...

POST: 2025-06-28T08:44:30+05:30

சித்திரா நாட்டியமும் சிந்திக்க குறளும் உலக சாதனை நிகழ்வு 80-க்கும் மேற்பட்ட மாணவிகள் சேர்ந்து நாட்டியமாடி திருவள்ளுவரின் உருவ படத்தை சித்திர நாட்டியமாக ஆடியப்படி காலால் வரைந்து உலக சாதனை படைக்க உள்ளனர். நடன வடிவமைப்பு "கஸ்தூரி திலக" "நிருத்திய சரஸ்வதி" டாக்டர். G.தனசுந்தரி M.A., B.Ed., Ph.D. () பரதநாட்டிய விரிவுரையாளர், தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி, சென்னை. சிறப்பு விருந்தினர் முனைவர் ந.அருள் எம்.ஏ.,எம்.பில்.,பி.எச்.டி., தமிழ் வளர்ச்சி இயக்குநர் தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச் சால ...

POST: 2025-06-27T07:45:23+05:30

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கம் கலைவாணர் அரங்கம், சென்னை. 27.06.2025, 28.06.2025 சாகித்திய அகாதெமி ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகம் - சிறப்புநிலைத் தமிழ்த்துறை இணைந்து நிகழ்த்தும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கம் நிகழ்ச்சி நிரல் நாள் : 27.06.2025 நேரம் : காலை 10.30 மணி இடம்: கலைவாணர் அரங்கம், சென்னை. தமிழ்த்தாய் வாழ்த்து வரவேற்புரை : முனைவர் கே. ஸ்ரீனிவாசராவ் அவர்கள், செயலர், சாகித்திய அகாதெமி முத்தமிழறிஞர் கலைஞர் குறித்த சிறப்பு மலரை வெளியிட்டு விழாத் தலைமை ...

POST: 2025-06-26T07:06:42+05:30

முயல்வாருள் எல்லாம் தலை நன்மனச் சுடர்கள் நரசிம்மன் மாமா - திலகவதி அத்தை இனிய 64 ஆம் ஆண்டு திருமண நாள் வாழ்த்தும் வணக்கமும் இணையற்ற இணையரின் திருமணம் காஞ்சிபுரத்தில் 23.6.1961 ஆம் ஆண்டு நடந்தது . அருள் பெருகு திலகவதியார் என்ற தொடரை உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்கள் அடிக்கடி சொல்வார்கள் என்று அப்பா பலமுறை சொல்லக் கேட்டுள்ளேன். கீழ் வீதியில் செல்வாக்கு வாய்ந்த குடும்பமாக நரசிம்மன் மாமா குடும்பம் விளங்கியது. கடமையும் பொறுப்பும் நரசிம்மன் மாமா அவர்களுக்கு இரு கண்களாக ஒளிர்ந்தன . அத்தை ...

POST: 2025-06-25T08:54:07+05:30

இவற்(கு) ஈத்(து) உண் மதி கள்ளே! எனத் தொடங்கும் ஔவையாரின் புறநானூற்றுப்பாடல் எண் இரு நூற்(று)த் தொண்ணூ(று) எவருக்கும் ஈத்(து)உவக்கும் கருத்துகளை ஏந்தி வரும் உலகத்தமிழிதழ் இரு நூற்(று)த் தொண்ணூ(று)

POST: 2025-06-24T07:13:55+05:30

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு 24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை-600001 மின்னஞ்சல்: esplanade@ymcamadras.org.in; தொலைபேசி: 044-25396792 பண்பாளர் பக்தவத்சலம் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் இடம் ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு அரங்கம் நாள் : 24-06-2025, செவ்வாய்க் கிழமை, மாலை 6.00 மணி தலைமை : முனைவர் ஔவை அருள், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு நினைவுரை : முனைவர் மறைமலை இலக்குவனார், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத் துணைத்தலைவர் உங்கள் வருகை எங்கள் விழைகை! முனைவர் ஒளவை. ...