POST: 2012-12-06T16:32:11+05:30

தியாகபிரம்மம் பிறந்த திருவையாற்றில் தன்னிகரில்லாத தமிழ் தாரகையாக திருமதி. டி.பி.இராஜலட்சுமி திகழ்ந்தார். பஞ்சாபகேச சாஸ்திரிகளுக்கு மகளாகப் பிறந்து ஏழு வயதில் திருமணம் செய்து வாழ முடியாது கணவனால் விளக்கப்பட்டவர். இது அந்நாளைய பெண்களுக்கு நேர்ந்த பெரிய அவலமாகும். சோர்வடையாமல் தான் கற்ற கலை திறமையால் நாடக உலகத்துக்கு வந்து சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத்தில் நடிக்கத் தொடங்கினார். ஏழு வயதிலேயே நாட்டியம், இசை முதலிய கலைத் திறமையால் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளுடைய ஆதரவினால் டி.பி.இராஜலட்சுமி தைரியமா ...

POST: 2012-12-03T23:04:40+05:30

உலகில் 6800 க்கும் அதிகமான மொழிகள் 200 நாடுகளில் பேசப்படுகின்றன.2261 மொழிகள் மட்டுமே எழுத்துருவும் பேச்சொலியும் கொண்ட மொழிகளாக இருக்கின்றன. பிலிப்பின், இந்தோனேசியன் போன்ற மொழியினர் தமது மொழியை ஆங்கில எழுத்துருக்கள் கொண்டே எழுதும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

POST: 2012-12-03T23:03:28+05:30

மெய்யெழுத்துகளில் ஒன்றான ழகரம் தரும் ஒலி தமிழிலும் மலையாளத்திலும், மாண்டரீன் (சீனம்) உட்பட்ட சில மங்கோலிய மொழிகளில் மட்டும் காணப்படுகிறது.

POST: 2012-11-29T22:43:55+05:30

நீரூற்றி வளர்த்த செடியோடு நெருங்கிய உறவு கொண்டு பரிவோடு பேசும் சகுந்தலை நாடகத்தைக் கண்டு கதே என்ற ஜெர்மானியக் கவிஞர் இயற்கை அனைத்தையும் உறவாகக் கொண்டு வாழும் பாரத மக்களின் உள்ளத்தைக் காட்டி வியப்படைகிறார்.

POST: 2012-11-28T09:11:39+05:30

குறிஞ்சிப்பாட்டில் தொண்ணூற்று ஒன்பது பூக்களின் பெயர்களை முப்பத்தி ஐந்து அடிகளால் கபிலர் பாடியுள்ளார். மலர்கட்கும் மரங்கட்கும் தமிழில் அமைந்த பெயர்கள் மெல்லோசையுடையன. இலத்தீன் மொழிச் சான்றோர் வெர்ஜில் செடி கொடிகள் பெயரைக்கொண்டு இன்னோசையுடைய தொடர்கள் பலவற்றைத் தம் பாடலில் தொடுத்துள்ளார். இயற்கையை ஆழ்ந்து ஆராய்ந்ததோடு மக்கள் உள்ளத்தையும் நுணுக்கமாகக் கண்டு இரண்டனையும் இணைத்த அழகுக்கு ஈடில்லை.

POST: 2012-11-27T09:14:50+05:30

இலக்கியம் தன் சீரிளமைத் திறம் குன்றாமல் சிறப்புற்றுத் திகழ்வதற்கு மக்களும் இயற்கைப் பொருள்களும் தலைமையிடம் பெறுகின்றன. இயற்கையை விடுத்து மக்களையோ, மக்களை நீக்கி இயற்கையையோ புலவர்கள் புனைந்தால் அப்பாடல் குறையுடைவதாகவே அமையும். முதற்பொருளாக மக்களையும் துணைப்பொருளாக இயற்கையையும் சங்கச் சான்றோர் அழகுறக் காட்டியுள்ளனர்.