POST: 2012-06-13T11:43:46+05:30

ஒரு சொல் எந்தப்பொருளை எவ்வாறு வழங்குகிறது என ஆராய்வது கற்றோர் கடனாகும். இந்நெறியைத் தொல்காப்பியம் நோக்கு என்று மொழியும்.ஆதலின் நோக்கு என்பது கண் பார்வையில் படும் வெறும் சொல்லன்று.மனப்பார்வையில் படும் நுண்மை உடையதாகும். கேட்பார் மறித்து நோக்கிப் பயன் கொள்ளும் கருவி என்று உரையாசிரியராகிய பேராசிரியர் எழுதினார். இந்நிலையில் மறித்து மறித்துத் தானே வினவிக்கொண்டால்தான் சொல்லியான் நெஞ்சம் வெளிப்படும் என்று வ.சுப.மா விளக்கினார் வெளிப்பட்ட சொல்லை ஓர் ஆசிரியன் போல் கருதி வினவி வினவித் தன் நினைவுக்கருவி ...

POST: 2012-06-12T17:26:17+05:30

நாட்டளவில் சில பொருட்களை தேசிய சின்னம் என்று அழைப்பது வழக்கம்.புலி,தாமரை,கங்கை நதி,ஆக்கி விளையாட்டு,மயில்,டால்பின் இவைகளையெல்லாம் சொல்வது வழக்கம்.இது ஒரு கேலிக்கூத்து! சென்னையைச் சுற்றி ஓடும் கூவத்தை கங்கை என்று அழைக்கலாம்.மாற்றாக காசியில் ஓடுவதை கூவம் என்றே அழைக்கலாம்.நாற்றத்தில் மிஞ்சுவது கங்கையா கூவமா என்று திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்றம் வைக்கலாம்!! கழுத்தை பிடித்து தள்ளினாலும்,கால் வயிறு கஞ்சி ஊட்டினாலும் கணவனே எனக்கு கண் கண்ட தெய்வம் என்று பாராட்டும் பதி விராதா தருமத்திற்கு சான்றாகச் ...

POST: 2012-06-08T13:30:58+05:30

காந்தியும் நேருவும் கருத்து ஒற்றுமை கொண்டவர்கள் இல்லை. காந்தி ஒரு நாள் கூட மாலை வேளையில் தொழுகை கூட்டத்தை மறந்ததேயில்லை.அவர் சுடப்பட்ட தொழுகை கூட்டம் தான் பெரிய அழுகை கூட்டமாக முடிந்தது நேரு ஒரு நாளும் தொழுவதை செய்தது இல்லை,அது மூடத்தனம் என்றும் கண்டித்தவர்.அவ்வண்ணமே பெரியாரும் அண்ணாவும் வெளிப்படையாகவே வேறு பட்டவர்கள். பாரதியார் ஆத்திக கவிஞராக இருந்தவர்.பாரதிதாசன் நாத்திக கவிஞராகவே மறைந்தவர்

POST: 2012-06-06T12:17:50+05:30

திருடனும் காவல்காரனும் மோதிக்கொள்வார்கள்.தமிழகத்தில் ஒரு பேராசிரியரும் காவல்துறை அலுவலரும் மல்யுத்தம் நடத்துவதை மக்கள் ஆர்வத்தோடு கண்டுக்களித்தார்கள்.எவன் எதைச்செய்வது என்று எவனக்கும் புரியவில்லை! ஒரு பல்கலைக்கழகத்தில் 65 பேராசிரியர்கள் பதவி விலக்கம் பெற்றிருக்கிறார்கள் அதனால் என்ன? எந்தப்பல்கலைக்கழகத்திலும் பேராசிரியர்களும் மாணவர்களும் இருந்ததே இல்லை என்று சொல்லப்படுகிறது. செஸ் ஆடுகிறவனுக்கும் கிரிக்கெட் ஆடுகிறவனுக்கும் 20 கோடி ரூபாய் வந்திருக்கிறது.ஒரு பேராசிரியர்க்கு ஒரு அறிஞர்க்கு ஓர் இ ...

POST: 2012-06-04T19:44:09+05:30

அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும் அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் அறிவென்றும் அவனுடைய செயலெல்லாம் நமக்கினியவாம் என்றும் அவனுடைய நிலை இவ்வாறு அறி நீ. . . .“

POST: 2012-06-04T19:43:19+05:30

அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும் அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் அறிவென்றும் அவனுடைய செயலெல்லாம் நமக்கினியவாம் என்றும் அவனுடைய நிலை இவ்வாறு அறி நீ. . . .