POST: 2012-02-29T13:05:11+05:30

விரக்தி வாழ்வை விரும்பி ஏற்ற எமிலி பிராண்டின் கனவு வரிகள் துறவு முதிர்ச்சி அளந்த செல்வமோ எனக்கு அற்பக்குப்பை விளைந்த காதலோ வெறுப்பின் சிரிப்பு புகழின் போதையோ அது புகைந்திடும் கனவு, விடியும் என்பது ஒரு நாள் முடியும் படியும் என் நெஞ்சில் பாதி வேண்டுவது இது ஒன்றுதான் கனத்த நெஞ்சின் கட்டுக்கள் விலகி நினைத்த சுதந்திரம் நிலைத்து நிற்கட்டும். இதுதான் என் இறுதியை நோக்கிய பயணம் இறைவா! உன்னிடம் இறைஞ்சுவது இதுவே வாழ்விலும் தாழ்விலும், வலிவிலும் நலிவிலும் தோயும் பற்றில் துளியிமில்லாத தூய்மையே வேண்ட ...

POST: 2012-02-29T11:00:56+05:30

THE OLD STOIC-Emily Bronte RICHES I hold in light esteem, And Love I laugh scorn; An lust of fame was but a dream, That vanish’d with the morn: And if I pray, the only prayer That moves my lips for me Is, ‘Leave the heart that now I bear, And give me liberty!’ Yes, as my swift day near their goal, ‘Tis all that implore; In life and death a chainless sould With courage to endure. Tamil Version தொன்மைகால யோக / ஞான நிலை செழுமை, பாதைக்குரிய ஓர் நன்மதிப்பான ஒளி, அன்பு, எனக்கு நகைப்பூட்டும் ஏனை ...

POST: 2012-02-28T10:48:55+05:30

அகவை 75 இல் ஆனந்த பவள விழா இன்றும் எழுத்தில் இளமை ஈன்ற பொழுதின்றே பெருமை உள்ளத்தில் எனக்குவகை ஊரறியும் அவர் திறமை எண்ணத்தில் என்றும் எளிமை ஏற்றமிகு தமிழில் புலமை ஐயமுண்டோ எவருக்கேனும் ஒப்பட்ட்ற ஓர் முனைவர் ஓங்கிய தமிழறிஞர் ஔவை நடராசர் தன்னே அக்தே உயிரெழுத்து தமிழுலகின் மெய்யெழுத்து Saiseshan

POST: 2012-02-27T13:36:58+05:30

“திருவள்ளுவர் பல இடங்களில் வடநூல் மரபை மறுப்பதைப் போலவே குறிப்பாக, மனுதர்மத்தின் வருணத் தர்மத்தை மறுக்கவே பிறப்பொக்கும் என்றார்; அதன் நீட்சியே சிறப்பொவ்வா என்பதும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். எனுங் குறளுக்கு, மக்கள் அனைவருக்கும் பிறப்புச் சமமானதே ஆகும். எல்லாத் தொழில்களும் மதிப்புடையனவேயாகும். ஆதலின், தொழில் வேறுபாட்டைக் கொண்டு சிறப்பளிப்பது பொருந்தாதென்று பொருள்கொள்வதே ஏற்றது; சிறந்தது. பிறப்பு எல்லாருக்கும் ஒத்திருப்பதைப் போன்று, மக்களைத் தொழில்க ...

POST: 2012-02-26T21:51:59+05:30

சுதந்திரதிர்க்குமுன் துரை என்றால் வெள்ளையன் அவன் வாயில் தமிழ் பெற்ற துன்பம் அய்யகோ சொல்லி மாளா பின்னர் வந்தார் ஒரு துரை (சாமி) தமிழ் பெற்றது பேரின்பம் தமிழ் பிழைத்தது தேன் போல் இனித்தது ஒரு துரை சென்றான் ஒரு துரை வந்தார் பின்னர் யார் என்ற தமிழர்க்கு மகனை நோக்கி நட ராசா என்றார் அவரும் நடந்தார் தமிழில் பல்கலை வளர்த்தார் மணிமகுடமாக பத்மஸ்ரீ வென்றார் இனி யார் என்ற கேள்வி எனக்கு (அவ்வை)குப்பத்து (துரை) சாமியும் ஆலயத்து நடராசரும் தமிழ் பால் கொண்ட அன்பால் அருள் பாலிதுள்ளனர் நமக்கு அடுத்த ...

POST: 2012-02-24T11:23:17+05:30

திருக்குறள் அமைப்பில் காதல் கோட்பாட்டினைத் தெளிவுற விளக்குவது காமத்துப்பால். இருவர் நெஞ்சங்கள் இழைந்து கலந்து உயர்ந்து நிற்கும் காட்சிகளைக் கடுகினும் சிறிய தொடர்களால் கவினுறக் காட்டுவது காமத்துப்பால். குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்னும் ஐந்தினையும் முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றனுள் பெரும்பான்மையும், உரிப்பொருள் பற்றிய புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சி எனவும், பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பாலை எனவும், இருத்தலும் இருத்தல் நிமித்தமும் முல்லை எனவும், இரங்கலும் இரங்கல் நிமித் ...

POST: 2012-02-23T16:36:37+05:30

அன்பின் முகவரி ஒளவை -------------------------------------------------------------------------------- நான் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் முதுகலைத் தமிழ் பயின்றுகொண்டிருக்கும்போது என் நண்பன் மணிகண்டனின் வாயிலாக அன்புப்பழம் ஔவையின் அலுவலகத்தில் கணினி பழுதுபார்ப்பதற்காக அவரோடு அறிமுகமானேன். பின்னர் அவரோடு பலவேளைகளில் கணினித்தமிழ் பற்றியும் தொல்காப்பியம் பற்றியும் விவாதித்துக் கலந்துரையாடும் வாய்ப்பு ஏற்பட்டது. ஔவையின் அன்பாலும் அரவணைப்பாலும் ஈர்க்கப்பெற்ற நான் அவருக்கு உதவியாளராக, செயலாளராகப் ப ...