செவ்வாய்க்கிழமை (06:02.2024) சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சியை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் திறந்து வைத்து, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
உடன் சட்டமன்ற உறுப்பினர் திரு. இ.பரந்தாமன்,
சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், இ.ஆ.ப.,
அருங்காட்சியகங்களின் ஆணையர் (மு.கூ.பொ) திரு. மா. அரவிந்த், இ.ஆ.ப,
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள்,
சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் திரு.கே.ஆயிரத்தரசு இராஜசேகரன்,
மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Add a Comment