POST: 2021-12-10T13:45:09+05:30

என்னிதன் பண்பே !

மாக்கோதை சிந்திய கண்ணீர்

யாங்குப் பெரிது ஆயினும்,

நோய்அளவு எனைத்தே,

உயிர்செகுக் கல்லா மதுகைத்து அண்மையின்

கள்ளி போகிய களரியம் பறந்தலை ‘

வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு

ஈமத்து, ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி ,

ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை ,

இன்னும் வாழ்வல்

என் இதன் பண்பே !

– புறம் 245.

இன்றைய நாள் ( 10 – 12 – 2021 ) அறுபதாம் ஆண்டைய எங்கள்
திருமண நாளை நினைவூட்டுகிறது .

நெஞ்சில் அழல் மூட்டுகிறது .

ஆறுதல் எப்படிப் பெறுவது !

இல்ல விளக்கு பேரொளியில் கலந்துவிட்டாலும் தாராவின்
ஞான ஒளி தொடர்ந்து எங்களை வழி நடத்த வேண்டும் !

– ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *