POST: 2020-10-15T14:56:54+05:30

பெருந் துயரம்

அன்பே உருவான ஒளவை அருள் நடராசன் அவர்கட்கு வணக்கம் பல ..

தங்களைத் தமிழுலகிற்கு ஈன்று அளித்த தங்கள் அன்பு அன்னையார் அவர்கள் இயற்கை யெய்திய செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன் .தங்களின் அன்புத் தந்தைக்கு அன்னையார் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் .

ஈன்ற பொழுதில் உவந்த தாய் சான்றோன் எனக் கேட்ட பொழுது பெரிதும் உவந்த தாய் ,கிடைத்தற்கரிய செல்வமாகும்.அப்படிப்பட்ட தாயை இழந்து துயருறும் தங்கட்கும் , தங்கள் தந்தைக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் .

அன்னார் ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடியில் அமைதிபெற அடியேனும் ,கழகத் திருக்குறள் அன்பர்களும் பிரார்த்தனை செய்து கொள்கிறோம் .

இவன்
ஆ .சிவராமகிருஷ்ணன்
செயலர்
தேதி : 10 – 9 – 2020

குறிப்பு : காலை மணி 4 முதல் 6 வரையுள்ள பிரம்ம வேளையில் தங்கள் அன்னையை நினைத்து , அம்மா உனது ஆத்மா சாந்தியடைய நாங்கள் பிரார்த்திக்கிறோம் .நானும் அப்பாவும் நல்லநிலையில் ஆரோக்கியமாக இருக்கத் தாங்கள் ஆசி அருள வேண்டுமென்று வேண்டுதல் செய்தருள்க !
( பயன் உண்டு )

திருவள்ளுவர் கழகம்
தென்காசி – 627 811

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *